search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு"

    • எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    • ஏராளமான கமென்ட்கள் விளம்பரத்திற்கு எதிராக இருந்தது.

    பெங்களூரு பேருந்தின் பின்புறம் ஒட்டப்பட்ட உடனடி ரசம் தயாரிக்கும் பேஸ்ட்-க்கான விளம்பரம் இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த விளம்பர படத்தில், மனைவி வட இந்தியரா? என்ற வாசகமும், அருகில் ஒருவர் கையை நீட்டிய படி நிற்கும் படமும் இடம்பெற்று இருக்கிறது.

    விளம்பர படத்தை பார்க்கும் போது, வட இந்திய பெண்களுக்கு ரசம் வைக்க தெரியாதபடியும், குறிப்பிட்ட நிறுவனத்தின் உடனடி ரசம் பேஸ்ட் கொண்டு யாரும் எளிதில் ரசம் வைக்க முடியும் என்றும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்த விளம்பரத்தின் புகைப்படத்தை ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




     


    விளமபர படம் தொடர்பாக பலர் பதில் அளித்துள்ளனர். இதில் ஏராளமான கமென்ட்கள் விளம்பரத்திற்கு எதிராகவும், இந்த விளம்பரம் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா இடையிலான திருமண உறவை ஊக்குவிக்கும் வகையில் இருந்தன. சிலர் இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சிலர் இந்த விளிம்பரம் திருமண உறவை மாநிலங்கள் கடந்து எடுத்து செல்ல உதவும் என்றும் தெரிவித்துள்ளனர். 


    • முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

    இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

    போர் விமான பயணித்திற்கு பிறகு பிரதமர் மோடி தனது அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேஜஸ் போர் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும், நமது தேசிய திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • போக்குவரத்து நெரிசலின் போது பசியை போக்க நபர் ஒருவர் டோமினோஸ்-ஐ அழைத்தார்.

    இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் சாதாரண விஷயமாகவே மாறி விட்டது. மக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிட வேண்டியிருப்பதால், அதற்கு ஏற்றார் போல் தங்களது அலுவல்களை திட்டமிட வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில், பெங்களூரு, போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரமாக இருக்கிறது.

    அப்படியாக பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களை போன்றே போக்குவரத்து நெரிசலில் என்ன செய்வது என்று தெரியாமல், நபர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தார். 30 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ, ஒட்டுமொத்த இணையவாசிகளிடையே வேகமாக பரவி, உடனே வைரல் ஆனது.

    வைரல் வீடியோவில் என்னதான் இருந்தது? என்ற எண்ணத்தில் அதனை பார்த்த அனைவரும், அட இப்படியும் செய்யலாமா? என்றும், பெங்களூருவில் இதெல்லாம் சகஜம் தானப்பா? என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படியாக வீடியோவை வெளியிட்ட நபர், போக்குவரத்து நெரிசலின் போது, தனக்கு ஏற்பட்ட பசியை போக்க, டோமினோஸ்-ஐ அழைத்தார்.

    வாடிக்கையாளரை காக்க வைப்போமா? என்ற நினைப்பில் டோமினோஸ்-ம் தனது வாடிக்கையாளருக்கு சுடச்சுட பீட்சாவை பேக் செய்து, தனது டெலிவரி ஊழியர்களை களத்தில் இறக்கியது. டெலிவரி ஊழியர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் லைவ் லொகேஷனை பார்த்து, அவரின் காரில் வைத்து சூடான பீட்சாவை டெலிவரி செய்தனர்.

    போக்குவரத்து நெரிசலில் பீட்சா பெறும் வீடியோவைத் தான் அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் டெலிவரி செய்த ஊழியர்களை பாராட்டியும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் எப்போ தான் சரியாகுமோ? என்றும் கமெண்ட் செய்தனர்.

    • 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தே ர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ராயபுரம் பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பலத்த பாதுகா ப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் 15 வருடங்களுக்கு மேலான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்க ப்பட்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மொத்தம் 3 ஆயிரத்து 193 எந்திரங்கள் உள்ளன.
    • 15 ஆண்டுகள் நிறைவடைந்த எந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தாமல் அவற்றை அழிக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 193 எந்திரங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி 2008-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த எந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தா–மல் அவற்றை அழிக்கப்பட உள்ளது.

    இதற்காக இன்று நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் இருந்து மின்னணு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் எடுக்கப்பட்டு, கண்டெய்னர் லாரி மூலமாக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக வளர்ச்சி பிரிவு மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்திருந்தனர். 

    • இரு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் குடுமிபிடி சண்டையில் முடிந்தது.
    • அங்கு வந்தவர்கள், சண்டையை பொருட்படுத்தாமல், புடவை வாங்குவதில் கவனம் செலுத்தினர்.

    பெங்களூரூவின் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த துணிக்கடை ஒன்றில் வருடாந்திர விற்பனையை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து புடவை வாங்க வந்த இரு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் குடுமிபிடி சண்டையில் முடிந்தது. இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இரு பெண்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்த போதிலும், அங்கு வந்தவர்கள், அதனை பொருட்படுத்தாமல், புடவை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தினர். கடையில் காவலராக பணியாற்றி வருபவர் மட்டும் பெண்களிடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முயன்றார். எனினும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இந்த சம்பவம் அடங்கிய வீடியோ, 'மல்லேஸ்வரம் மைசூர் பட்டு புடவை வருடாந்திர விற்பனை.. இரு வாடிக்கையாளர்கள் ஒரு புடவைக்காக சண்டையிடுகின்றனர்,' எனும் தலைப்பில் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பதிவான குறுகிய நேரத்திற்குள் வீடியோவினை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

    • உலகில் அதிக வாகன நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது.
    • கடந்த ஆண்டின் அக்டோபர் 15-ம் தேதி மிக அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, வாகன நெரிசல் மிகுந்த நகரமாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தற்போது சர்வதேச அளவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது.

    டாம் டாம் என்ற தனியார் நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு வாகன நெரில் குறித்து ஆய்வு நடத்தி, உலகில் வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தான் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

    பெங்களூருவின் மத்திய பகுதியில் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 29 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகிறது. வாகன நெரிசல் பட்டியலில் இங்கிலாந்தின் லண்டன் நகரம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகிறது. டெல்லி நகரம் 34-வது இடத்திலும், மும்பை 47-வது இடத்திலும் உள்ளன.

    கடந்த 2021-ம் ஆண்டு வாகன நெரிசல் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த பெங்களுரு தற்போது 2-வது இடத்திற்கு முன்னேறியது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 15-ம் தேதி மிக அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 260 மணி நேரம் (10 நாட்கள்) வாகனத்தை ஓட்டுவதிலும், 134 மணி நேரம் வாகன நெரிசலிலும் நேரத்தை கழிக்கிறார்கள் என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் கொலை என தகவல்.
    • சிசிடிவி காட்சி அடிப்படையில் கொலை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியதுடன், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் வீடு ஒன்றில் அமர்ந்திருக்கும் இளைஞரை சுற்று வளைக்கும் கும்பல் ஒன்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறது.

    அந்த கும்பலில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். பின்னர் அந்த இளைஞரை தெருவில் இழுத்து வந்து அடித்து துவைப்பதுடன், அவரது தலையில் கல்லைப் போட்டு அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்யும் காட்சி காண்போரை பதற செய்கிறது.

    முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பதாமி பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பது தெரிய வந்துள்ளது. பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள போலீசார், இந்த கொடூர கொலையை செய்தவர்களை தேடி வருகின்றனர்.

    • நெல்லையில் இருந்து பெங்களூருவிற்கும் தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
    • தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியினர் பெங்களூரு மற்றும் ஓசூருக்கு பணிநிமித்தமாக சென்று வருகின்றனர்.

    தென்காசி:

    தற்போது நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையத்திற்கும், தென்காசி வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ஆகிய சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே இயக்கிவருவது ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில்களைப் போலவே நெல்லையில் இருந்து பெங்களூருவிற்கும் தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தற்போது தென்மேற்கு ரெயில்வே சார்பில் மைசூரில் இருந்து மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.

    மறு மார்க்கத்தில் 5,12,19 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை தோறும் தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதைப்போலவே தென்காசி வழியாக பெங்க ளூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    பணி நிமித்தமாக

    அம்பை,பாவூர்சத்திரம், தென்காசி,ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரும்பாலோனார் பெங்களூரு மற்றும் ஓசூருக்கு பல்வேறு பணிநிமித்தமாக சென்று வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களும் பலர் பெங்களூருவில் பயின்று வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளில் மிக அதிக தொகை கொடுத்து செல்லும் நிலைதான் தற்போது உள்ளது.

    மேலும் தென்காசி மற்றும் நெல்லை மேற்கு பகுதி மக்கள் பெங்களூர் செல்ல நெல்லை ரெயில் நிலையத்திற்கு சென்று நாகர்கோவில் - பெங்களூர் ரெயிலை பிடிக்க வேண்டும்.

    அது போல சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி பகுதி மக்கள் பெங்களுர் செல்ல கோவில்பட்டி அல்லது விருதுநகர் ரெயில்நிலையம் சென்று தூத்துக்குடி-மைசூரு ரெயிலை பிடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற பண விரயமும், கால விரயமும் பொதுமக்க ளுக்கு ஏற்படுகிறது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில்,

    பெங்களூரில் 315 கோடி செலவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட சர். விஸ்வேஸ்வரையா ரெயில்வே நிலையம் பொதுமக்களின் பயன் பாட்டுட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய முனையத்தில் 7 நடைமேடைகள், 3 ரெயில் பராமரிப்பு பிட் லைன்கள், பராமரிப்பு பணி முடிந்த பின் ரெயில்களை பார்க்கிங் செய்ய 8 ஸ்டேப்பிலிங் லைன்களும் உள்ளன. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு அம்பாச முத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை, நாமக்கல் வழியாக பெங்க ளூருக்கு ரெயில் இயக்க வேண்டும். நெல்லையில் காலியாக இருக்கும் 2 ரெயில்களை கொண்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்குவதை போல, பெங்களூருவில் காலியாக நிற்கும் ரெயில் பெட்டிகளை கொண்டு பெங்களூரு - நெல்லை இடையே தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    ஏற்கனவே மைசூர் மற்றும் பெங்களூருக்கு தென்மேற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்கள் இயக்க ஆர்வம் காட்டுவதால் தெற்கு ரெயில்வே அதற்கு வழித்தட அனுமதி கொடுத்து பெங்களூருக்கு ரெயில்களே இல்லாத ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக நெல்லைக்கு இயக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மழை வெள்ளம் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளும் மழை நீரில் தத்தளித்தன.
    • பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மழையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இங்கு தினமும் கனமழை பெய்து வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பெங்களூருவுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 60 முதல் 120 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடைமழை பெய்து வருகிறது. ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம் கே.ஆர்.மார்க்கெட், ஜே.பி.நகர், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, இந்திராநகர், காட்டன்பேட்டை, விஜயநகர், பசவேஸ்வரா நகர், மைசூரு ரோடு, அக்ரஹாரா தாசரஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

    நேற்று மாலை பெய்த மழை, நள்ளிரவு வரை வெளுத்து கட்டியது. மழை வெள்ளம் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளும் மழைநீரில் தத்தளித்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சாலைகள் சேதம் அடைந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு நகரின் மத்திய, கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    நகரின் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ராஜமஹால் குட்டஹள்ளியில் 59 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மாலை 7.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியதால், அலுவலகம் செல்பவர்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன, மீட்புப் பணிகள், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் மற்றும் வீடுகள், நீரில் மூழ்கிய விலையுயர்ந்த கார்கள் போன்ற மழை வெள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த ஆண்டு, பெங்களூருவில் 1,706 மிமீ மழை பெய்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 1,696 மிமீ மழை பதிவானதே அதிகபட்ச அளவாக இருந்து.

    சாமராஜநகர், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, பெங்களூரு ரூரல், சித்ரதுர்கா, ஹாசன், ஷிவமொக்கா, துமகுரு மற்றும் மண்டியா மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சாமராஜநகர், குடகு, ஷிவமொக்கா, பெலகாவி, ஹாவேரி, பாகல்கோட், கலபுர்கி, கொப்பல் மற்றும் பல்லாரி ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    ஏற்கனவே கடந்த மாதம் வரலாறு காணாத மழை வெளுத்து வாங்கியது. அப்போது சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. ஐடி நிறுவன ஊழியர்கள், வெள்ளத்திற்கு நடுவில் டிராக்டர் மூலம் அலுவலகம் சென்றனர்.

    சில பகுதிகளில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த பெரும் பணக்காரர்களையும் மழை தவிக்கவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அலுவலகம் செல்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலை உருவானது. அந்த பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டாக்டர் விகாஸ் ராஜன் கடந்த 10ஆம் தேதி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • காதலி மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் விகாஸ் ராஜன்(வயது 27). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த இவர், சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார். பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அத்துடன், வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

    இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சமுக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். பின்னர், இவர்களின் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிவிக்கப்பட்டு திருமணத்திற்கும் சம்மதம் பெற்றுள்ளனர்.

    இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி விகாஸ் ராஜன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோமா நிலைக்குச் சென்ற அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடந்த சம்பவம் குறித்து விகாஸ் ராஜனின் காதலி மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    மருத்துவர் விகாஸ் தனது காதலியின் நிர்வாண படங்களை இன்ஸ்ட்ராகிராமில் போலி ஐடி ஒன்றை உருவாக்கி பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை சில நண்பர்களுக்கும் அவர் பகிர்ந்துள்ளார். விகாசின் காதலி, தனது நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி விகாஸ்சிடம் கேட்டதற்கு, ஜாலியாக தான் இதை செய்தேன், நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என சமாதானம் கூறியுள்ளார். ஆனாலும் ஆத்திரம் தணியாத அவர் விகாசுடன் சண்டை போட்டுள்ளார். அத்துடன் விகாசை பழிவாங்க வேண்டும், அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதுபற்றி தனது ஆண் நண்பர்களிடம் கூறியுள்ளார். அதன்படி, ஒரு ஆண் நண்பரின் வீட்டுக்கு விசாசை அழைத்து வந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விகாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக விகாசின் காதலி மற்றும் 3 ஆண் நண்பர்களை போலீசார் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

    சேலம்-பெங்களூர் பைபாஸ் சாலையில் லிப்ட் கேட்டு வாலிபரிடம் மொபட்டை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் நேற்று இரவு 10 மணியளவில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றுகொண்டிருந்த 2 பேர் விக்னேசை நிறுத்தி தங்களது வண்டியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், அதனால் விக்னேஷ் வண்டியில் அமர்ந்து கொண்டு வண்டியை இழுத்துச் செல்வதாக கூறியுள்ளனர்.இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் தனது வண்டியை லிப்ட் கேட்டவர்களிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிக் விட்டு பெட்ரோல் தீர்ந்த வண்டியில் அமர்ந்துகொண்டார்.

    அவர்கள் மொபட்டை ஓட்டிக் கொண்டு காலால் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.பெட்ரோல் பங்க் அருகே வந்ததும் மொபட்டை ஓட்டி வந்த நபர்கள் திடீரென மின்னல் வேகத்தில் தப்பி மறந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    நூதன முறையில் மொபட்டை திருடிச் சென்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அந்த நபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளும் வேறு எங்கேயும் திருடி வந்து இருக்கலாம் என்று கருதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    ×