search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி பூஜை"

    • சு.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே குருராஜபேட்டையில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜி.இ.செல்வம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    அப்போது ஒன்றிய செயலாளர்கள் பழனி, பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ரூ.1.17 ேகாடி மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் : 

    வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.17 ேகாடி மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி , பள்ளியின் தலைமை ஆசிரியர் பூமாரி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர் சிவன்மலை , பள்ளி மேலாண்மை குழு தலைவர் கங்கா தேவி , பள்ளி கட்டிட வளர்ச்சி குழு தலைவர் சுப்பிரமணியம், அருண் பழனிச்சாமி, செந்தில் சுப்பிரமணியன், ஜோதி ரமேஷ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வேலுமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் வகுப்பறை கட்டிடப்பணி ஒப்பந்ததாரர் என்ஜினீயர் சுகுமாருக்கு , விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பொன்னாடை போர்த்தினார். 

      மேட்டூர்:

      சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கல் பேரூராட்சி 7-வது வார்டு சக்தி நகர் பகுதியில் 15-வது மானிய திட்டத்தின் கீழ் ரூ.11.30 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சுற்று சுவர் கட்டும் பணி மற்றும் 9-வது வார்டு சுப்பிரமணியநகர் பகுதியில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

      இவ்விரு நிகழ்ச்சிகளையும் பேரூராட்சி தலைவர் தெய்வானைஸ்ரீ ரவிச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

      இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியன், துணை சேர்மன் வெங்கடேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலமுரளி, அர்த்தநாரீஸ்வரன், ரமேஷ்வரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

      • செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார்.
      • முடிவில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

      விழுப்புரம்:

      செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் மதிப்பில் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல்பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய குழு தலை வர் விஜயகுமார் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

      நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரிதி, கணேசன், பிரவீன் குமார், பேரூராட்சி செயல் அலு வலர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்

      • ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
      • பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

      பல்லடம்:

      பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்தநிலையில் நாளுக்கு நாள் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதிகரித்துவந்தது.

      இந்த நிலையில் கழிவு நீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டிற்கு விடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

      கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லோகுபிரசாந்த், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலர் சிவகுமார், வார்டு உறுப்பினர்கள், சுகாதார துறையினர், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
      • ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

      உடுமலை:

      மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவாளவாடி, வடபூதிநத்தம், ராகல்பாவி ஆகிய ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

      இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான சி.மகேந்திரன் கலந்து கொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்தில் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

      இந்நிகழ்ச்சியில் உடுமலை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செழியன், மாவட்ட பாசறை செயலாளர் காமாட்சி சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரிய வாளவாடி தேவராஜ், இராகல்பாவி சுமதி செழியன், ஆர்.வேலூர் அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகன்ராஜ், விமலா, ராசாத்தி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

      • 1- வது வார்டு யூகேசி. நகர் பகுதி முதல் அப்துல் ஜாபர் வீடு வரை 115 மீட்டர் அளவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
      • முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

      உடுமலை

      திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி 1- வது வார்டு யூகேசி. நகர் பகுதி முதல் அப்துல் ஜாபர் வீடு வரை 115 மீட்டர் அளவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

      இந்நிகழ்ச்சியில் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரிய கோட்டை முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன் , பெரிய கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் இளம்பிறை சாதிக், செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஜாஹிர் உசேன் , பெரிய கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

      • அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்
      • நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றுவதாக உறுதி

      ஊட்டி,

      நீலகிரி மாவட்டம், உலிக்கல் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நான்சச் சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளியில் 2019-2020 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆனைப்பள்ளம் சாலையினையும், 2022-2023-15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை பிரதான சாலை முதல் வெள்ளாளமட்டம் வரை முடிக்கப்பட்ட சிமெண்டு சாலையினையும் என மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார்.

      மேலும், அவர் 2022-2023 நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.23 கோடி மதிப்பில் முத்தநாடு ரோல் மட்டம் முதல் பவானி வரையிலும், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பனாட்டி பிரிவு முதல் இருட்டு சோலை, கொலக்கொம்பை முதல் முத்தநாடு வரையிலும், ரூ.1.83 கோடி மதிப்பில் ட்ரூக் முதல் நான்சச் தேயிலை தொழிற்சாலை வரை சாலை மேம்பாட்டு பணிகள் என மொத்தம் ரூ.4.06 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள பணிக ளுக்கு பூமி பூஜைகளை தொடங்கிவைத்தார்.

      செங்கல்புதூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணியினை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

      தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

      குறிப்பாக தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ளும் விதமாக பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • அரியூர் கிராம ஊராட்சியில் புதிய ரேஷன் கடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
      • நிகழ்ச்சியில் அரியூர் ஊராட்சி தலைவர் கலா ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

      வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில் அரியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், துணைத்தலைவர் முருகையாபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் லில்லி புஷ்பம், விமலா மகேந்திரன், முனியராஜ், உதவி பொறியாளர் அருள் நாராயணன், கிளை செயலாளர் முருகையா, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • மண் சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
      • இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

      குண்டடம்:

      குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் 1-வது வார்டு கொக்கம்பாளையம் சாலை முதல் கிழக்கே ருத்ராவதி பேரூராட்சி சாலை வரையும் மற்றும் வார்டு எண் 8 கணபதிபாளையம் சாலை முதல் காளிபாளையம் சாலை வரை உள்ள மண் சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

      இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சையது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பூமி பூஜை செய்து ெதாடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

      • ரூ.4 கோடியில் கட்டப்பட உள்ளது
      • விரைந்து முடிக்க எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்

      காவேரிப்பாக்கம்:

      ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரைப்பெ ரும்பாக்கம் பகுதியில், கொசத்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய உயர் மட்ட மேம்பால பணிக்கு பூமி பூஜை விழா இன்று காலை நடைபெற்றது.

      நிகழ்சிக்கு சோளிங்கர் ஏ. எம்.முனிரத்தினம் எம்.எல்ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

      அப்போது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த, இந்த உயர் மட்ட மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

      இதில் ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைபுத்தீன், வெங்கடேசன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமு ருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்லக்கிளி மூர்த்தி, திவ்யபாரதி தினேஷ் காந்தி, சுலோச்சனா பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர் இந்திரா, மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, காங்கிரஸ் கட்சி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரகாஷ், நகர செயலாளர் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      • ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
      • விஜயநகரம் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் ரூ.5.60 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள் கட்ட பூமி பூஜை போட்டப்பட்டது.

      மேட்டுப்பாளையம்,

      மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஐ.டி.சி நிறுவனம், கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் வெள்ளியங்காடு ஊராட்சியில் ஆதிமாதையனூர் கிராமத்தில் ரூ.7.49 லட்சம் மதிப்பிலும், பங்களா மேடு பகுதியில் ரூ.8.78 லட்சம், கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் மேடூர் பகுததியில் ரூ.8.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிவறைகள் திறப்பு விழாவும், சாலைவேம்பு அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளயில் ரூ.4.90 லட்சம் மதிப்பில், விஜயநகரம் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் ரூ.5.60 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள் கட்ட பூமி பூஜை போட்டப்பட்டது.

      இதற்கு ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். தேக்கம்பட்டி ஐ.டி.சி பி.எஸ்.பி.டி தொழிற்சாலை தலைமை பொறுப்பாளர் வெங்கட்ராவ், நிர்வாக தலைவர் மகிந்தர்பாபு, கிராமிய அபிவிருத்தி இயக்க தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் காரமடை ஊராட்சி ஒன்றியக்குக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன் ஊராட்சி தலைவர்கள் ஜெயமணி (வெள்ளியங்காடு), செல்வி நிர்மலா (கெம்மாரம்பாளையம்) உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமிய அபிவிருத்தி இயக்க மேலாளர் அபிநந்தன் செய்திருந்தார்.

      ×