search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
    X

    வாசுதேவநல்லூர் அருகே புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

    • அரியூர் கிராம ஊராட்சியில் புதிய ரேஷன் கடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அரியூர் ஊராட்சி தலைவர் கலா ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அரியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், துணைத்தலைவர் முருகையாபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் லில்லி புஷ்பம், விமலா மகேந்திரன், முனியராஜ், உதவி பொறியாளர் அருள் நாராயணன், கிளை செயலாளர் முருகையா, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×