search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரக்கல்புதூர் பேரூராட்சியில் புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
    X

    வீரக்கல் புதூர் பேரூராட்சி தலைவர் தெய்வானைஸ்ரீ ரவிச்சந்திரன் புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    வீரக்கல்புதூர் பேரூராட்சியில் புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

      மேட்டூர்:

      சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கல் பேரூராட்சி 7-வது வார்டு சக்தி நகர் பகுதியில் 15-வது மானிய திட்டத்தின் கீழ் ரூ.11.30 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சுற்று சுவர் கட்டும் பணி மற்றும் 9-வது வார்டு சுப்பிரமணியநகர் பகுதியில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

      இவ்விரு நிகழ்ச்சிகளையும் பேரூராட்சி தலைவர் தெய்வானைஸ்ரீ ரவிச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

      இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியன், துணை சேர்மன் வெங்கடேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலமுரளி, அர்த்தநாரீஸ்வரன், ரமேஷ்வரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

      Next Story
      ×