search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் ரூ.2¾ கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
    X

    தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தக் காட்சி.

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் ரூ.2¾ கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

    • மண் சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    குண்டடம்:

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் 1-வது வார்டு கொக்கம்பாளையம் சாலை முதல் கிழக்கே ருத்ராவதி பேரூராட்சி சாலை வரையும் மற்றும் வார்டு எண் 8 கணபதிபாளையம் சாலை முதல் காளிபாளையம் சாலை வரை உள்ள மண் சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சையது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பூமி பூஜை செய்து ெதாடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×