என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை
- ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
- பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்தநிலையில் நாளுக்கு நாள் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதிகரித்துவந்தது.
இந்த நிலையில் கழிவு நீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டிற்கு விடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லோகுபிரசாந்த், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலர் சிவகுமார், வார்டு உறுப்பினர்கள், சுகாதார துறையினர், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்