search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி பூஜை"

    • அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது.
    • வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம்.

    ஒரு வீடு அல்லது மனை அமைப்புக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் வாஸ்து ரீதியான குறைகள் இருக்கும்போது அதன் உரிமையாளருக்கு பல்வேறு சிக்கல்கள் வரலாம் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். வங்கியில் கடனை வாங்கி வீடு அல்லது மனை வாங்குவது அப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கவா என்ற கேள்வி அனைவருக்கும் வரலாம்.

    அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது. அதனை அனுசரித்து வீடு அல்லது மனை அமைப்பை சரி செய்து, கட்டிடங்களை அமைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் உருவாகும் சிக்கல்களை சமாளிக்கலாம் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    வீடு என்பது மணலும் சிமெண்டும் கூடிய கட்டிடமாக இருப்பினும், இயற்கையின் சக்திகளும் இணைந்துதான் இருக்கிறது. இயங்கும் பூமியின் மீது அமைக்கப்படும் கட்டமைப்புகள் குறிப்பிட்ட வடிவத்தை அடையும்போது இயற்கையின் ஆற்றலால் தாக்கம் பெற்று அதற்கேற்ப செயல்படத் தொடங்கி விடும் என்ற வாஸ்துவின் உட்கருத்தை வல்லுனர்கள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.

    பழமையான கட்டிட சாஸ்திர நூல்கள் வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளன. வீடுகள் இருட்டாக இருப்பது கூடாது. ஒரளவாவது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரவேண்டும். குறிப்பாக, சூரிய வெளிச்சம் வடகிழக்கு வழியாக வீட்டுக்குள் நுழையும்போது- பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு, சூரிய வெளிச்சம் நுழையாத வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பதையும் வாஸ்து சாஸ்திர நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    ஒரு கட்டமைப்பை சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் காலி இடம் இருப்பது சிறப்பு என்பது பிரதான வாஸ்து விதியாகும். அதாவது, காம்பவுண்டு சுவரை ஒட்டியவாறு கட்டிடத்தை அமைக்காமல், சுற்றி வருவதற்கு ஏதுவாக காலியிடம் இருக்கவேண்டும். அதன் மூலம், நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை சக்தி ஓட்டத்துக்கு தடை ஏற்படாமல், மனை அல்லது கட்டிடத்தின் எட்டு பக்கங்களிலும் உள்ள அஷ்ட திசை அதிபதிகளின் நற்பலன்கள் கிடைக்க அது ஏதுவாக அமையும்.

    எந்த திசையை நோக்கிய மனையாக இருந்தாலும், அதற்குரிய திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்பை வடிவமைப்பது முக்கியம். கோண திசையில் உள்ள மனைகளுக்கும் இந்த விதி பொருந்தும். கிழக்கு திசைக்கு இந்திரன், மேற்கு திசைக்கு வருணன், வடக்கு திசைக்கு குபேரன் மற்றும் தெற்கு திசைக்கு எமதர்மன் ஆகியோர் அதிபதிகளாக அமைகிறார்கள்.

    • வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள்.
    • வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

    வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு. இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான். இன்று வாஸ்து நாள். வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாட்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

     வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும். பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜைசெய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். இன்று பூமி காரகனாகிய செவ்வாய்க்கிழமை வாஸ்து செய்வது விசேஷம். இன்று வேறு தோஷங்கள் பார்க்க வேண்டாம். நேரம், வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.12 முதல் 10.42 வரை வாஸ்து செய்ய நல்ல நேரம் ஆகும்.

    • நம்மில் ஒவ்வொருவரின் கனவாக இருப்பது சொந்த வீடு.
    • வாஸ்து பகவானை பூஜிக்காமல் ஆரம்ப பூஜையை செய்வது உகந்தது அல்ல.

    நம்மில் ஒவ்வொருவரின் கனவாக இருப்பது சொந்த வீடு. அப்படி வீடு, தொழிற்சாலை போன்ற கட்டிடங்களைக் கட்டும் முன்பாக, வாஸ்து பகவானை வழிபட்டு, பின்னர் அந்தப் பணிகளைத் தொடர வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஒரு வருடத்தில் எட்டு மாதங்களில் எட்டு நாட்கள் மட்டுமே வாஸ்து பகவான் கண் விழிக்கின்றார். மற்ற அனைத்து நாட்களும் அவர் நித்திரையில் இருக்கிறார். வாஸ்து பகவானை பூஜிக்காமல், அடிப்படையான ஆரம்ப பூஜையை செய்வது உகந்தது அல்ல என்கிறார்கள். அத்தகைய சிறப்புக்குரிய வாஸ்து பகவானைப் பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    வாஸ்து புருஷன் தோன்றிய வரலாறு

    அந்தகாசுரன் என்ற அசுரனுடன் பெரும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார், சிவபெருமான். அப்போது சிவனின் உக்கிரமான வடிவத்தில் இருந்து வெளிப்பட்ட வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்தது. அதில் இருந்து தோன்றிய மிகப்பெரிய பூதம் ஒன்று, மிகுந்த பசியுடன் மூன்று உலகங்களையும் விழுங்கக்கூடியதாக இருந்தது. அதைப்பார்த்த சிவபெருமான், "அந்தகாசுரனின் உதிரத்தை உண்டு, உன் பசியை போக்கிக்கொள்" என்று அந்த பூதத்திடம் கூறி மறைந்தார்.

    அதன்படியே செய்த பூதம், அந்தகாசுரன் அழிந்த பிறகு, கடுமையான தவத்தை மேற்கொண்டது. அந்த தவத்தைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள்.

    திருக்கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் மாய அஸ்திரங்களை அனுப்பி அந்த பூதத்தை பூமியில் விழும்படி செய்தார். அப்போதும் அந்த பூதம் தன் வலிமையால், மேலே எழ முயற்சி செய்தது. அப்போது அந்த பூதத்தின் மீது தேவர்கள் பலரும் அமர்ந்தனர். அதன் காரணமாக பூதம் அடங்கியது. மேலும் தேவர்கள் அமர்ந்த காரணத்தால் அந்த பூதம் புனிதமானது.

    அந்த பூதத்திற்கு `வாஸ்து' என்ற பெயர் உண்டானது. இன்னும் சிலர், இந்த பூதம் அழிந்த பின், அதனை அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் சொல்கிறார்கள்.

    முன்பு ஒரு யுகத்தில் மலைகளுக்கு இறகுகள் இருந்ததாம். இறகுகளைக் கொண்ட மலைகள், பறந்து பறந்து பின் பூமியில் இறங்கி பூமியை அதிர்வுக்குள்ளாக்கியும், சேதப்படுத்தியும் தொல்லை கொடுத்தன.

    இதனால் இந்திரன் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தைக் கொண்டு, மலைகளின் இறகுகளை அறுத்து எறிந்தான். இதனால் பறக்க முடியாத மலைகள், குளிகன், மகாபத்மன், பத்மன், கார்கோடகன், ஆனந்தன், தட்சன், சங்கன், வாசுகி போன்ற பல நாகங்களின் மீது விழுந்து அழுத்தின. இதனால் பாரம் தாங்காமல் அந்த நாகங்கள் கக்கிய விஷத்தில் இருந்து வாஸ்து தோன்றியதாகவும் சில புராணங்கள் சொல்கின்றன. வாஸ்து பகவானை `பூமி புத்திரன்' என்றும் அழைப்பார்கள்.

    வாஸ்து பூஜை செய்யும் முறை

    வாஸ்து பகவான் நித்திரையை விட்டு கண் விழிக்கும் நாளில்தான் இந்தப் பூஜையை செய்ய வேண்டும். வீடு கட்டுபவர்கள், வீடு கட்டுவதற்கான ஆரம்ப பூஜை (கிரக ஆரம்பம்) செய்வதற்கு முன்பாக, இந்த வாஸ்து பூஜையை செய்ய வேண்டியது அவசியம்.

    பொதுவாக, செவ்வாய், சனிக்கிழமைகள் தவிர்த்து சுபவேளையில் மனை தேர்வு செய்த பின் வீடு கட்டத் திட்டமிடலாம். பூமியை தேர்ந்தெடுத்த பின் 'பூ பரிகஷா' என்ற மனை பரிசோதனை செய்தல் நல்லது. ஒரு அடி அகல நீள ஆழம் உள்ள குழி தோண்டி நீர் விட்டு, அதில் வெள்ளை மற்றும் சிவப்பு மலர்களைப் போட்டு பரிசோதிக்க வேண்டும். மனை பூஜைக்கு முன் வாஸ்து பூஜை செய்தல் அவசியம்.

    வாஸ்து புருஷனை பூஜித்து விட்டு, அதன்பின்னர் வீடு அல்லது தொழிற்சாலைகளை கட்டலாம். மனையின் தென்கிழக்கு பாகத்தில் நான்கு செங்கல்களை தேர்ந்தெடுத்து, அதற்கு கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பின்னர் அந்த செங்கல்களை கிழக்கு மேற்காக வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் ஆவாஹனம் செய்து ஷோடச உபசாரம் செய்து பூஜிக்க வேண்டும். தொடர்ந்து ஒன்பது செங்கற்களை கிழக்கு மேற்காக வைத்து, நவக்கிரகங்களை அதில் ஆவாஹனம் செய்து அபிஷேக, ஆராதனை செய்து பூஜிக்க வேண்டும்.

    செங்கற்களை நான்கு, மூன்று, இரண்டு என்ற வரிசையில் வைத்தல் வேண்டும். பூஜைக்கு வாசனை மலர்களைப் பயன்படுத்த வேண்டும். எந்தப் பூஜையும் விநாயகரை ஆராதனை செய்த பின் செய்வது உத்தமம் என்பதால், விநாயகரை பூஜித்தே வாஸ்து பூஜையை செய்ய வேண்டும். மேலும் வாஸ்து பூஜை செய்யும் நாளில் குலதெய்வம், கிராம தெய்வம், இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் நன்மை தரும்.

    முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அதற்கு குங்குமம் வைத்து மலர் சரம் சாற்ற வேண்டும். அப்போது 'ஓம் வக்ர துண்டம் ஆவாஹயாமி', 'ஓம் விக்னராஜம் ஆவாஹயாமி', 'ஓம் கஜானனம் ஆவாஹயாமி', 'ஓம் ஸித்தி விநாயகம் ஆவாஹயாமி' ஆகிய நான்கு நாமங்களை ஆவாஹனம் செய்து, அருகம்புல் மாலை சூட்டி, விநாயகரின் ஷோடச நாமங்களால் அவரை அர்ச்சித்து விக்னங்களும், அந்த மனையில் உள்ள சகல பூத, பிரேத, பிசாசுகளும் விலகவும், அதே இடத்தில் லட்சுமி தேவியின் வாசம் ஏற்படவும், குடும்ப விருத்தி ஏற்படவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பின் வாஸ்து புருஷனை, 'ஓம் பூ: வாஸ்து புருஷம் ஆவாஹயாமி', 'ஓம் புவ: மஹாகாயம் ஆவாஹயாமி', 'ஓம் ஸுவ: க்ருஷ்ணாங்கம் ஆவாஹயாமி', 'ஓம் பூர்புவஸ்ஸுவ: ரக்தலோசநம் ஆவாஹயாமி' என்ற நாமங்களை ஆவாஹனம் செய்து, பின் வீடுகட்ட ஆரம்பிக்கும் இடத்தில் 'ஆத்யேஷ்ட காத்யாஸம்' என்றபடி 9 கற்களை வைத்து, நான்கு திசையில் நான்கு கற்களையும் வைத்து பந்தனம் செய்து, பின் எட்டு திக்குகளிலும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசான தேவர்களுக்கு பூசணிக்காய் பலி சேர்க்க வேண்டும்.

    கோவிலாக இருந்தால் 'மூர்தேஷ்ட காத்யாஸம்' என்றபடி கடைசி கல் பிரம்மா பாதத்தில் வைக்க வேண்டும். ஆத்யேஷ்ட காத்யாசம் செய்யும் முன் 'ரத்ஷையாசம்' என்றபடி நவமணிகள் என அழைக்கப்படும், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம் வைடூர்யம், மாணிக்கம் முதலியவற்றை வைக்கவும். அதோடு நவதானியங்களை, சுமங்கலி பெண்களைக் கொண்டு சேர்ப்பது விசேஷமானது.

    மேலும் செப்பு, வெள்ளி தகட்டில் ஷட்கோணமும், நடுவில் வாஸ்து மூல எழுத்தும், வட்டமும் வரைந்து, அதன் மேல் அஷ்ட தளம் எழுதி, இந்திரன் முதல் ஈசானன் வரை எழுதி, நான்கு பக்கத்திலும் நான்கு வாஸ்து பிரதான நாமங்களை எழுதி பூஜித்து வாஸ்து யந்திர ஸ்தாபனமும் செய்யலாம்.

    இந்த வருடத்தில் வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), (மாசி மாதம் 22-ந் தேதி) காலை 8 நாழிகைக்கு வாஸ்து புருஷன் கண் விழிக்கிறார். இந்த நாளில் வீடு கட்டுபவர்கள், அதற்கான பூஜையை செய்யலாம். வருகிற 5-ந் தேதி காலை 10.06 மணிக்கு மேல் 10.42 மணிக்குள் வாஸ்து பூஜை செய்வது விசேஷ நன்மைகளை தரும். (இது சூரிய உதயத்தில் இருந்து அந்தந்த ஊருக்கு ஏற்றபடி கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.)

    இதில் எமகண்டம் ஒன்பது மணி முதல் 10.30 மணி வரை இருப்பதால், 'அந்த நேரத்தில் செய்ய வேண்டாம்' என்று நினைப்பவர்கள், 10.30 மணிக்கு மேல் ஆரம்பித்து செய்யலாம். பொதுவாக வாஸ்து பூஜைக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருந்தால் போதும்.

    செவ்வாய்க்கிழமை, சனிக் கிழமை, அஷ்டமி, நவமி, மரண யோக தோஷங்கள் பார்க்க வேண்டியது இல்லை. ஆனால் கிரக ஆரம்பத்திற்கு இவை அனைத்தையும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

    விசேஷ வாஸ்து தியானம்

    வாஸ்து புருஷோ மஹா காயோ க்ருஷ்ணாங்கோ

    ரக்த லோசந ரக்தாநநோ த்விபாஹூச்ச

    பப்பருவாஹ பராங்க்க:

    ஸயாநம் நீலதிக் பாதமை சாந்யே ந்யஸ்த மஸ்தக:

    என்ற மந்திரத்தை உச்சரித்து வாஸ்து பகவானை தியானிக்க வேண்டும். அவரை தியானிப்பது சகல நன்மைகளையும் கொடுக்கும். மேலும் வன்னி, வில்வம், அரசு, ஆல், அத்தி, புரசை, கருங்காலி ஆகிய ஏழு சமித்துக்கள் வாஸ்து ஹோமத்திற்கு விசேஷமானவை ஆகும். வாஸ்து பகவானுக்கு வெண் பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. மனையில் சங்கு ஸ்தாபனம் செய்து ஸல்லியம் பார்ப்பது போன்றவையும் மிகவும் விசேஷமானது.

    'வாஸ்து புருஷத்யாம்நம்:-

    வாஸ்து புருஷோ மஹாகாயோ க்ருஷ்ணாங்கேர ரக்தலோசந:

    ஏகாந நோ த்விபாஹுஸ்ச பப் ருவாஹ:

    பராங்கக: ஸயாநம் நீலதிக்பாதம் ஐஸாந்யே ந்யஸ்த மஸ்தக:

    குதாஞ்ஜலி புடோ த்யாயேத் பஸம்வத் இஷ்டார்த்த ஸித்தே யே!'

    என்பது, திருவல்லிக்கேணி, திருப்பதி போன்ற ஆலயங்களில் சொல்லப்படும் வாஸ்து தியானம் ஆகும்.

    • கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம்.
    • ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    கோத்தகிரி:

    தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது நிழலாக பின் தொடர்ந்தவர் சசிகலா.

    இவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இருவரும் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்வதற்கு வழக்கம்.

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுத்தனர்.

    அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதில் இன்னும் மர்மம் விலகவில்லை.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கொடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு வருகை தந்தார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். அவரை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து சசிகலா நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டு மண்டபம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் எஸ்டேட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், நாங்களும் ஒரு குடும்பமாகவே இருந்து வந்தோம்.

    கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இங்கு தனியாக வர முடியவில்லை. தற்போது தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்துள்ளேன்.

    இந்த நல்ல நாளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளேன். சுற்றுலாதலமான கொடநாடு காட்சி முனை அருகே இந்த இடம் இருப்பதால் நினைவு மண்டபத்தை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார்.

    3 நாள் பயணத்தை முடித்து கொண்டு நாளை கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் புறப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்.

    • மிகவும் பழுதடைந்த சாலைகளை அப்பகுதி மக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
    • புதியதாக தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    குளித்தலை

    கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பஞ்சப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சபட்டியில் மிகவும் பழுதடைந்த சாலைகளை அப்பகுதி மக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டம் 2022-23-ன் கீழ், ரூ.55.91 லட்சம் மதிப்பில் பஞ்சப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி முதல் தாதம்பட்டி வரை புதியதாக தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளித்தலை மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில், கிருஷ்ணராயபுரம் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகாலன், பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி சத்தியமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சரவணன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், பஞ்சப்பட்டி சந்திரசேகர், மற்றும் ஒப்பந்தகாரர் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

    • திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
    • பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் ரோடு அமைத்தல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நலத்திட்ட பணிகளை திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் பல்லடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ஒன்றியக்குழு தலைவர்கள் பல்லடம் தேன்மொழி, பொங்கலூர் வக்கீல் குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், பல்லடம் நகர மன்ற முன்னாள் தலைவர் பி.ஏ. சேகர், நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி. சுப்பிரமணியம், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதாச்சலமூர்த்தி, செயலாளர் சுரேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பரமசிவம், துரைமுருகன், அன்பரசன், பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார்
    • நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம்-மேல் ஒலக்கூர். தொண்டூர் செல்லும் சாலையை ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கும், நாட்டார்மங்கலம் தொண்டூர் சாலை பாலம் கட்டுதல் பணிக்கும், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டார் மங்கலம் தொண்டூர் இடை யில் மேம்பாலம் கட்டும் பணிக்கும், மொடையூர் சாலை ரூ. 40 லட்சம் மதிப் பில் சீர் செய்யவும் ஜெயங் கொண்டான் பேரணி சாலையை ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் விவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைப்பதற்கும் பூமி பூஜை விழா நாட்டா மங்கலம், புதுசொரத்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியம்மாள் மாணிக்கம், அசோக் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பக்தவச்சலம், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் அக்பர் அலி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பணிகள் செய்வதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, துரை, இளம்வழுதி, இளநிலை பொறியாளர்கள் ஏழுமலை சேகர் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பத்மநாபன், விஜயா கண்ணன், கலைவாணி கிருஷ்ணமூர்த்தி , சிலம்பரசி பாண்டியராஜன் அமைப்பு சாராதொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்வண்ணன், உள்ளிட் ேடார் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேஷ் ஏற்பாடு
    • ஆற்றில் உயிர்பலியை தடுக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களுக்கு முன்பு கோவை பகுதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த 10 கல்லூரி மாணவர்களின் 5 மாணவர்கள் ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறந்தனர்.

    இதையடுத்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அப்பகுதியை பார்வையிட்டார்.

    ஆற்றில் உயிர் பலியை தடுக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேசன் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைத்து தருவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல் படியும், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனை படியும் நகர செயலாளர் சுதாகர் முன்னிலையில் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    எஸ்டேட் மேலாளர், மற்றும் தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேஷ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.  

    • காவேரிப்பட்டினத்தில் காமராஜர் திறந்து வைத்த நூலகத்தை கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கப்பட்டது.
    • டாக்டர் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் 1956-ம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், பெருந்தலை–வருமான காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் சிதலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலக கட்டிடத்தினை இடித்து விட்டு புதியதாக நூலகம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் காங்கி–ரஸ் எம்.பி. டாக்டர் செல்லக்–குமாரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.

    இதனையடுத்து கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து சுமார் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிதலமடைந்த காணப்படட நூலகத்தை புது பொலிவுடன் கட்டுவதற்காக பூமிபூஜை காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது.

    இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் தேவநாராயணன் தலைமை தாங்கினார். முன்னால் மாவட்டத் தலை வர் காசிலிங்கம், மாவட்டத் துணைத்தலைவர் சேகர், கலை இலக்கிய மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, எஸ்.சி., எஸ்.டி., பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர் குமார், வட்டார தலைவர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, முன்னாள் வட்டார தலைவர் ஆர்மி ராமன், முன்னாள் நகர தலைவர்கள் சுப்பிரமணி, பச்சப்பன்,சிறுபான்மை வட்டாரத் தலைவர் முஸ்தபா சேவா தள தலைவர் தேவராஜன், நகர செயலாளர் ஸ்ரீராம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சம்பத்குமார், சிவகுமார், கதிர்வேல், சுடர் வேல், பூபாலன், கணபதி, ஸ்ரீராமுலு, சுப்பையன், ராமராஜ், ஜெயபால், குணா, குருசாமி, கருணாமூர்த்தி சிவன் ஐயா, கவுரன் ஆசிரியர், மல்லிகா ராமன், மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் கடந்த பல ஆண்டுகளாக காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட நூலகம் மீண்டும் புதுபொலியுடன் கட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் டாக்டர் செல்லக்குமார் எம்.பி.க்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம்,ரேஷன் கடை, சிமெண்ட் சாலை, தார் சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட பணிகளுக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி வரவேற்றார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி சீனிவாசன், ஊராட்சி செயலாளர் வேலவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், வேணு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி பழனிவேல் நன்றி கூறினார்.

    • பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து,
    • தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து, பின்னர் பச்சாபாளையம் குட்டையை அடையும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அடிக்கடி கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பட்டேல் வீதியில் வரும் கழிவு நீரை கருப்புராயன் கோவில் வீதி வழியாக செல்லாமல், பட்டேல் வீதி வழியாகவே செல்லும் வகையில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.4 லட்சம் மதிப்பில் இப்பணி நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் கவிதா மணி தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர் மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, திமுக .,விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், ஒப்பந்ததாரர்கள் வெள்ளியங்கிரி, கார்த்திகேயன், தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி என்ற குமரேசன் தலைமை வகித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட ஏழுஎருமை பள்ளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ். ரூ.45.60 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இதற்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி என்ற குமரேசன் தலைமை வகித்தார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக பங்கே ற்றார். காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×