search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காத்திருப்போர் அறை அமைக்க பூமி பூஜை
    X
    காத்திருப்போர்  அறை அமைக்க பூமிபூஜை நடைபெற்றபோது எடுத்தபடம். 

    பல்லடம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காத்திருப்போர் அறை அமைக்க பூமி பூஜை

    • கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்கு வரும் புற நோயாளிகள் தங்குவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் காத்திருப்போர் அறைஅமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல் வரவேற்றார். இந்த பூமி பூஜை நிகழ்ச்சியின்போது காத்திருப்போர் அறை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதை தொடர்ந்து உகாயனூர் ஊராட்சியில் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலும் கான்கிரீட் சாலை அமைப்பிற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. மேலும் நாச்சிபாளையம், பெருந்தொழுவு, மசநல்லாம்பாளையம் ஆகிய அரசு பள்ளிகளுக்கு ரூ. 4லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கான இருக்கைகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாலசுப்ரமணியம், செல்வராஜ், மதிவதநேசன், தர்மராஜ், வலுப்பூர் அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிதம்பரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அனந்த கிருஷ்ணன், சந்திரன், சின்னச்சாமி மற்றும் ஆவின் இயக்குனர் குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×