search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ஒன்றியத்தில் ரூ.67½ லட்சத்தில் பணிகளுக்கு பூமி பூஜை
    X

    சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தக் காட்சி. 

    உடுமலை ஒன்றியத்தில் ரூ.67½ லட்சத்தில் பணிகளுக்கு பூமி பூஜை

    • ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
    • ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உடுமலை:

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவாளவாடி, வடபூதிநத்தம், ராகல்பாவி ஆகிய ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான சி.மகேந்திரன் கலந்து கொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்தில் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் உடுமலை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செழியன், மாவட்ட பாசறை செயலாளர் காமாட்சி சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரிய வாளவாடி தேவராஜ், இராகல்பாவி சுமதி செழியன், ஆர்.வேலூர் அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகன்ராஜ், விமலா, ராசாத்தி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×