search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண்"

    • கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர்.
    • ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). இவர் ஓட்டல் நடத்தி வருகின்றார்.இவரது மகள் சந்தியா (21). இவருக்கும் கோவை கணபதி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (27) என்பவருக்கும் திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    அதன் பிறகு சந்தியா, வினோத்குமார் ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 8-ந் தேதி கோவையில் இருந்து கரூர் அழைத்து சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சந்தியா சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவர் வெள்ளகோவிலில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்தார்‌.

    இந்த நிலையில் நேற்று காலை சந்தியாவின் பெற்றோர் ஓட்டலுக்குசென்று விட்டனர். இதனால் சந்தியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு மதியம் பெற்றோர் வந்து பார்க்கும் போது ஜன்னல் கம்பியில் சேலையால் சந்தியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சந்தியாவை மீட்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தியாவுக்கு திருமணமாகி 5 மாதம் மட்டுமே ஆவதால் தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

    • சேலம் மாவட்டம் மல்லூர் பச்சனம் பாளையம் பகுதியில் கல்லூரிக்கு சென்ற புதுப்பெண் மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் பச்சனம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தனது உறவினர் பிரியா(வயது 20) என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    பிரியா ஆண்டாகளூர் கேட் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு சென்றார். பின்னர் பிரியா மாலை வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிபோன உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அவர் என்ன ஆனார் ? என இதுவரையிலும் தெரியவில்லை. இதையடுத்து மல்லூர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பின்னலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரகோத்தம்மன். அவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர்களுக்கு திருமணமாக 6 மாதம் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காயத்திரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய காயத்திரி அலறிதுடித்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் உடனே காயத்திரி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருமணத்துக்கு பிறகு மனோஜின் உறவினர்கள் அபிராமிக்கு சிறு சிறு தொந்தரவுகளை செய்து வந்ததாக தெரிகிறது
    • திருமணமாகி 4 மாதங்களே ஆனதால் நாகர்கோவில் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி அறுகுவிளையை சேர்ந்தவர் வினு. இவரது மகள் அபிராமி. இவருக்கும் பூதப்பாண்டி அருகே ஞாலம் காலணியை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு மனோஜின் உறவினர்கள் அபிராமிக்கு சிறு சிறு தொந்தரவுகளை செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அபிராமி தனது தந்தை வினுவிடம் கூறியுள்ளார். வினு மகளை சமாதானப் படுத்தி வந்தார்.

    இந்த நிலையில் அபிராமி திடீரென அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 மாதங்களே ஆனதால் நாகர்கோவில் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டார். அபிராமியின் கணவர் மனோஜ் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அபிராமி தற்கொலை செய்வதற்கு முன்னர் செல்போனில் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

    அந்த ஆடியோவை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். அதை முக்கிய சாட்சியமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு
    • நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி அருகுவிளையை சேர்ந்தவர் வினு. இவரது மகள் அபிராமி.

    இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் காலனியை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனோஜின் தாயாரும், அவரது உறவினர்களும் அபிராமிக்கு சிறு சிறு தொந்தரவுகளை செய்து வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அபிராமி தனது தந்தை வினுவிடம் கூறியுள்ளார். வினு மகளை சமாதானப்படுத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அபிராமி திடீரென அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பூதப்பாண்டி போலீசுக்கும் அபிராமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தூக்கில் பிணமாக தொங்கிய அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வினு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணமான 4 மாதத்தில் புது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 14-ந் தேதி திருமணம் நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணியக்குடி வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சிந்துஸ்டன் குமார் (வயது 31). கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் களியக்காவிளையை சேர்ந்த மேரி ஜாஸ்மின் (19) என்பவருக்கும் கடந்த 14-ந் தேதி திருமணம் நடந்தது.

    கடந்த 25-ந் தேதி இரவு இருவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர். மறுநாள் காலை சிந்துஸ்டன்குமார் எழுந்து பார்க்கும்போது மேரி ஜாஸ்மினை காணவில்லை. உடனே அவர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. திருமணமான 12-வது நாளில் புதுப்பெண் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து சிந்துஸ்டன் குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் மேரி ஜாஸ்மினை தேடி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் திடீரென இறந்தார்.
    • விழுப்புரம் சென்று அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ளஅன்னியூரை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி பிரதீபா (வயது 22). இவர்கள் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். கடந்த 13. 6. 2022 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் விழுப்பு ரம் சென்று அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளனர். இந்நிலையில் இரவு 11.30 மணிக்கு பிரதீபாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்ப ட்டுள்ளது. உடனடியாக அவரை அதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று காட்டும் போது டாக்டர்புட் பாய்சன் என்று கூறியதாக தெரி கிறது. இதனால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து கஞ்சனூர் போலீ சார் விசாரணை செய்த வருகிறார்கள்

    • 100 பவுன் நகை வேண்டும் என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
    • கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவது தொடர்பாக ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காயத்திரி தேவி புகார் செய்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் விஷ்ணு நகரைச் சேர்ந்தவர் காயத்திரி தேவி (வயது 27). இவருக்கும், கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 35 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கியு ள்ளனர்.

    சரவணன் திருப்பூரில் செய்யப்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் 8 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பின்னர் மேலும் 100 பவுன் நகை வேண்டும் என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதில் மனவேதனை அடைந்த காயத்திரி தேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்து காப்பாற்றியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காயத்திரி தேவி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவது தொடர்பாக கடந்த 13.09.2021 அன்று ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காயத்திரி தேவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சரவ ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து காயத்திரி தேவி 1.12.2021 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் மரியபாக்கி யம், காயத்திரி தேவியின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் மீனா, கமலா, தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற மல்லிகா வீடு திரும்பவில்லை.
    • கருப்பசாமி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நேரு நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 32). இவரது மனைவி மல்லிகா என்ற மாரியம்மாள் (25). கருப்பசாமிக்கும், மல்லிகாவுக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற மல்லிகா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து 12 நாட்களில் காணாமல் போன புதுப்பெண் மல்லிகாவை தேடி வருகின்றனர்.

    ×