search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 பவுன் நகை கேட்டு புதுப்பெண் சித்ரவதை
    X

    100 பவுன் நகை கேட்டு புதுப்பெண் சித்ரவதை

    • 100 பவுன் நகை வேண்டும் என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
    • கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவது தொடர்பாக ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காயத்திரி தேவி புகார் செய்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் விஷ்ணு நகரைச் சேர்ந்தவர் காயத்திரி தேவி (வயது 27). இவருக்கும், கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 35 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கியு ள்ளனர்.

    சரவணன் திருப்பூரில் செய்யப்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் 8 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பின்னர் மேலும் 100 பவுன் நகை வேண்டும் என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதில் மனவேதனை அடைந்த காயத்திரி தேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்து காப்பாற்றியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காயத்திரி தேவி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவது தொடர்பாக கடந்த 13.09.2021 அன்று ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காயத்திரி தேவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சரவ ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து காயத்திரி தேவி 1.12.2021 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் மரியபாக்கி யம், காயத்திரி தேவியின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் மீனா, கமலா, தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×