search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை"

    • 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
    • 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையிலான போலீசார் கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அப்துல் ரகுமான் என்பவரது கடையிலும், பாபநாசம் தெற்கு ராஜவீதியில் உள்ள சுகுமார் என்பவரது கடையிலும் தடை செய்யப்பட்ட 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து, பாபநாசம் போலீஸ் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • புவனகிரி பங்களா பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    புவனகிரியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் புவனகிரி பங்களா பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பாபு (வயது 43), சுரேஷ் (43) ஆகியோர் தனித்தனியே நடத்தி வந்த கடைகளில், ஹான்ஸ், பான்பராக் போன்றவைகள் கட்டுகட்டாக இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்து இருந்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் மற்றும் முத்தூர் பகுதியில் வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தூர், ஊடையம் ரோட்டில் வெள்ளகோவில், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்து இருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை அருகே அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த கருப்பையன் (49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    தீவிர நடவடிக்கை

    இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தீவிரமாக கண்காணித்து சீல்வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் புகையிலை பொருட்கள் விற்கப்படும் கடைகளை கண்காணித்து சமீபத்தில் அதிரடி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 13 கடை உரிமை யாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் சேலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டியில் ஒரு மளிகை கடை, ஓமலூர் அருகே செலவடையில் ஒரு மளிகை கடை, எடப்பாடி, ஜலகண்ட ாபுரம் பிரதான சாலையில் ஒரு மளிகை மற்றும் ஒரு பீடா கடை, பெரியசோரகை மாட்டுக்காரன் வளைவில் 2 பெட்டிக்கடைகள், நங்கவள்ளியில் ஒரு பெட்டிக்கடை உள்பட 13 பெட்டி கடைகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இன்றும், நாளையும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ள தால் தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து நாைள மறுநாள் திங்கட் கிழமை முதல் இந்த 13 கடைகளும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரி பேட்டி

    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், கடந்த 2022-2023-ம் ஆண்டில் 33 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் புகையிலை விற்று கடை உரிமையாளர்கள் சிக்கினால் அந்த கடைகள் சீல் வைக்கப்படுவதுடன், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் 13 கடைகள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார். 

    • பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • போலீசார் யாசர் அராபத்(39) என்பவரை கைது செய்தனர்

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பெட்டிக்கடையில் இருந்த 17 பொட்டலம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் யாசர் அராபத்(39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
    • கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பல்லடம்- பெத்தாம்பாளையம் ரோட்டில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியே மோட்டர் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் புகையிலை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மகன் அக்பர் சேட்(37) பல்லடம் மங்கலம் ரோடு இளங்கோ விதியைச் சேர்ந்த சதாம் புதின் மகன் அசாருதீன்(22) என்பதும் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து 89 கிலோ புகையிலை பொருட்களையும், அதனைக் கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் குளத்தூர் முத்துக்குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் குளத்தூர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் குளத்தூர் முத்துக்குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு மூட்டைகளுடன் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முத்துக்குமாரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள்(52), குளத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மாரியப்பன்(38) மற்றும் வெள்ளாரம் பகுதியை சேர்ந்த செல்வம் (65) என்பதும், அவர்கள் முத்துக் குமாரபுரம் பகுதியில் உள்ள ஆட்டுக்கொட்டகையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார், மாரியப்பன், பெருமாள் மற்றும் செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1.86 லட்சம் மதிப்புள்ள 254 கிலோ புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை, எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன், வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், மருத்துவ அலுவலர் சந்தான வித்யா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் திரு மூர்த்தி, சுகாதார ஆய்வா ளர்கள் சதீஸ்குமார், குருபிரகாஸ், கிராம சுகாதார செவிலியர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஊர்வலம் சென்றனர்.

    பின்னர் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் செயல் விளக்கம் அளித்த னர். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வீட்டில் பதுக்கிய வாலிபரை கைது செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையி லான தனிப்படை போலீசார் தமிழ்பாடி பகுதியிலுள்ள ஒத்தவீடு பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.அப்போது ஆறுமுகம் (வயது34) என்பவரது வீட்டில் சோதனை நடத்தி னர். அங்கு 160 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஆறுமு கத்தை கைது செய்தனர். இதையடுத்து திருச்சுழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • திருமங்கலம் அருகே வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேர் தப்பி ஓடினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சோளம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு ஒரு சரக்கு வேன் வந்தது. அதில் 3 ேபர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் வேனில் சோதனையிட்டனர். அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது மொத்தம் 131 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இந்தநிலையில் வேனில் வந்த 2 பேர் தப்பியோடினர். ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கினார்.

    அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் திருச்சுழி அருகே உள்ள கட்டத்தான்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(29) என்பதும், தப்பியோடியவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆவினிப் பட்டியை சேர்ந்த கோவிந்த ராஜ், சானார்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி என்பது தெரியவந்தது. புகையிலை பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்த வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 ேபரை தேடிவருகின்றனர்.

    • திருச்சுழி அருகே புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு பகுதியில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள மளிகைக்கடையில் கணேஷ் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மளிகை கடை உரிமையாளர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகேசனை(42) கைது செய்தனர். பின்னர் அவர் கோர்்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • புகையிலை பொருள், மது விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி மெயின்ேராட்டில் மல்லி போலீசார் ேராந்து சென்றனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். விசாரணையில் அவர் கிருஷ்ணன் கோவில் தெருைவ சேர்ந்த ஜோதிராஜ்(30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் 168 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகாசி இரட்டை பாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தட்டலைப்பட்டி விலக்கு அருகே 2 வாலி பர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தனர். போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது ரூ.40 ஆயிரம் மதிப்புடைய 19 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.

    மேலும் விசாரணை யில் அவர்கள் தாயில் பட்டி யைச் சேர்ந்த கார்த்தீ ஸ்வரன் (24), வரதராஜ் (27) என்பது தெரிய வந்தது. அவர்களி டமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    ×