search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது
    X

    புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது

    • திருச்சுழி அருகே புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு பகுதியில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள மளிகைக்கடையில் கணேஷ் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மளிகை கடை உரிமையாளர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகேசனை(42) கைது செய்தனர். பின்னர் அவர் கோர்்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×