search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • திருமங்கலம் அருகே வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேர் தப்பி ஓடினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சோளம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு ஒரு சரக்கு வேன் வந்தது. அதில் 3 ேபர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் வேனில் சோதனையிட்டனர். அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது மொத்தம் 131 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இந்தநிலையில் வேனில் வந்த 2 பேர் தப்பியோடினர். ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கினார்.

    அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் திருச்சுழி அருகே உள்ள கட்டத்தான்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(29) என்பதும், தப்பியோடியவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆவினிப் பட்டியை சேர்ந்த கோவிந்த ராஜ், சானார்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி என்பது தெரியவந்தது. புகையிலை பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்த வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 ேபரை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×