என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
- அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
- கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பல்லடம்- பெத்தாம்பாளையம் ரோட்டில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியே மோட்டர் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் புகையிலை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மகன் அக்பர் சேட்(37) பல்லடம் மங்கலம் ரோடு இளங்கோ விதியைச் சேர்ந்த சதாம் புதின் மகன் அசாருதீன்(22) என்பதும் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து 89 கிலோ புகையிலை பொருட்களையும், அதனைக் கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்