search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை"

    • ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது.
    • கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் சிகரெட் விற்பனைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது. தடையை மீறும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) திருத்தம் செய்யப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும், புகையிலை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்காக இந்த திருத்தப்பட்ட மசோதா பொது இடங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.

    சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு, கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    இம்மாதம், தெலுங்கானா அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களையும் தடை செய்ய இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியது. கடந்த ஆண்டு, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹூக்காவை வழங்க அம்மாநில அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    2 கடைக்கு சீல், 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது32), அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (62), பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வடசிறுள்ளூர் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (28), சங்கராபுரத்தை சேர்ந்த ஹரிஷ் (19), திருநாவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (27), கெடிலம் கிராமத்தை சேர்ந்த ராமன் (62), திருநாவலூர் பகுதியை சேர்ந்த சுகுமார் (44), தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விக்ரம் (37), திருநாவலூரை சேர்ந்த வெங்கடேசன் (45), மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்த நதியா (36), சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (70), கதிரவணன் (60) ஆகியோர் அவர்களது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இவர்களிடமிருந்து சுமார் 15 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 13 நபர்கள் மீதும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 9 கைது செய்யப்பட்டனர். 2 கடைகளுக்கு வருவாய் துறையினரால் மூலம் சீல் வைக்கப்பட்டது.

    • பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
    • சிவக்குமார் என்ற பொன்பாண்டி, தங்கராசு ஆகியாரின் கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மேலப்பட்ட முடையார்புரம் நாடார் நடுத்தெருவை சேர்ந்த நயினார் என்பவர் மகன் சிவக்குமார் என்ற பொன்பாண்டி (வயது 51), தேவர் நடுத்தெருவை சேர்ந்த தங்கராசு(36) ஆகியாரின் கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை

    நாகர்கோவில், நவ.26-

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 391 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் வாரத்தில் 3 நாட்கள் கடைகளில் சோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    இதையடுத்து அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. கடைகளில் இருந்த ஒரு கிலோ 750 கிராம் புகையிலை பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈத்தாமொழி, சுண்டப்பற்றிவிளை பகுதியில் சோதனை நடந்தது. இதேபோல் தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? அங்கு காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 97 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9½ கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், குமரி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடைகளில் குட்கா, புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையாக பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 ஆயிரம், 2-வது முறையாக ரூ.10 ஆயிரம், 3-வது முறையாக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தால் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்யாத வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்ததாக மாவட்டம் முழுவதும் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் காலியானது.

    இதனையடுத்து ஜாஸ்மின் ஆன்லைன் மூலம் பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகலில் தயிர்சாதம், சாம்பார் சாதம், பேபி கார்ன் ஆகியவற்றை ஆர்டர் செய்தார்.

    பின்னர் உணவு வந்து சேர்ந்தது. அவருக்கு வந்த உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கினர். திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று ஸ்பூனில் தட்டுப்பட்டது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின் அதனை எடுத்துப் பார்த்தார். அப்போது அது கூல் லீப் எனப்படும் புகையிலை என்பது தெரியவந்தது.

    இதனை பார்த்து ஜாஸ்மின் அதிர்ச்சியடைந்தார். உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடடினயாக அவர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருந்தது.

    உணவில் புகையிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு 10 முறைக்கும் மேல் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

    ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது போன்று அலட்சியமாக உணவு விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல் வெளியானதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் புகையிலை கலந்த உணவை கொடுத்த உணவகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பணியாற்றிய ஊழியர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணியுமாறும், கடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வினியோகிக்கப்பட்ட உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரித்தனர்.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர கடையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறும்போது, சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டோம். உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் விளக்கத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கினார்
    • 10 பாக்கெட்டுகள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டி மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 48). பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக் கெட்டுகள் விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சென்று பெட்டிக்கடையில்சோதனை செய்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டு கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைய டுத்து கடை உரிமையாளர் பார்த்திபனை கைது செய்து, அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • வாலிபர் கைது
    • 32 கிலோ சிக்கியது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா போலீசார் ராமசாமி தெரு பகுதியில் கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 32 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மகேந்திரகுமார் (வயது 23) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார், அரி பால சுப்பிரமணியன் ஓட்டி வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
    • ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் அரி பால சுப்பிரமணியன் (வயது 33). பீடி வியாபாரி.

    இவர் தனது ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவ தாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு புகார் சென்றது.

    இதையடுத்து நேற்று மாலை தனிப்படை போலீசார், குருவன்கோட்டை - துத்தி குளம் சாலையில் அரி பால சுப்பிரமணியன் ஓட்டி வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

    அப்போது, ஆட்டோவில் பீடி மூட்டைகளுக்கு நடுவில் 544 புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரி பால சுப்பிரமணியனை போலீசார் பிடித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அரி பாலசுப்பிர மணியனை ஆலங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? அரி பால சுப்பிரமணியனுக்கு புகையிலை கிடைத்தது எப்படி? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சுழி அருகே 12 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மில் தொழிலாளிகள் கைதானார்.
    • காவல் நிலை யத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தனியார் மில் குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யப்பட்டு வருவ தாக திருச்சுழி காவல் நிலை யத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதனையடுத்து திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையி லான தனிப்படை போலீசார் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழியை அடுத்துள்ள தனியார் மில் குடியிருப்பு பகுதியில் சந்வதேகத்திற் கிடமாக சுற்றிதிரிந்த 2 நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை மேற் கொண்டனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் 2 நபர்களிடமும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சுமார் 12 கிலோ புகையிலை பொருட் கள் இருந்தது தெரியவந்தது.சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து அவ்வப் போது பொது வெளியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இதையடுத்து புகையிலை பதுக்கி விற்றதாக மில் தொழிலாளிகள் மேலகண்ட மங்கலம் மில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜ் (வயது 37). வெள்ளையாபுரம் தெற்கு தெரு பகுதி யை சேர்ந்த ஆழ்வார் சாமி மகன் ஞானகுரு (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
    • நெடுங்காடு நல்லாதூர் குரும்பகரம் பகுதியைச்சேர்ந்த ஷாஜகானை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலையில் உள்ள மளிகை கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரோந்து போலீசார், குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட ரூ.11 ஆயிரத்து 640 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர், நெடுங்காடு நல்லாதூர் குரும்பகரம் பகுதியைச்சேர்ந்த ஷாஜகானை (வயது42) போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூர்-கம்பூர் சாலையில் உள்ள சோதனை சாவடியில் பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் மொபட்டை திருப்பி தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த நபர் பெருந்துறை சீனாபுரத்தை சேர்ந்த பழனிசாமி (40) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் பழனிசாமியை கைது செய்து, அவரிடம் இருந்த 7.90 கிலோ எடையுள்ள புகையிலை, குட்கா பொருட்களையும், மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.

    ×