என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வீட்டில் பதுக்கிய வாலிபரை கைது செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையி லான தனிப்படை போலீசார் தமிழ்பாடி பகுதியிலுள்ள ஒத்தவீடு பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.அப்போது ஆறுமுகம் (வயது34) என்பவரது வீட்டில் சோதனை நடத்தி னர். அங்கு 160 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஆறுமு கத்தை கைது செய்தனர். இதையடுத்து திருச்சுழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×