search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிட மாற்றம்"

    • நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த மணிமேகலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த பாண்டீஸ்வரி திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு தலைமை உதவியாளராகவும், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக இருந்த வளர்மதி மடத்துக்குளம் வட்ட வழங்கல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் கனிமங்கள் துணை தாசில்தாராக இருந்த அருள்குமார் திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    • 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.

     தாராபுரம் :

    தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    • கலெக்டர் உத்தரவு
    • பதவி உயர்வு பெற்றுள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாபு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த லட்சுமி போளூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா திருவண்ணா மலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வீடுகள்), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலராகவும்.

    அதேபோல் திருவண்ணாமலை மாநில ஊரக வாழ்வாதார மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பாண்டியன் கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கோபு புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு போளூர் வட்டார வளர்ச்சி அலுவல ராகவும், திருவண்ணாமலை வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பிரிதிவிராஜன் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
    • ஊராட்சி செயலர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊராட்சி செயலர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி கடம்பத்துார், திருவள்ளூர் தாலுகாவில் 14 ஊராட்சி செயலர்கள், சோழவரம், பூண்டியில் தலா 18 பேர், பள்ளிப்பட்டு -20 பேர், ஆர்.கே.பேட்டை-24 பேர், மீஞ்சூர்-23 பேர், பூந்தமல்லி-7 பேர், எல்லாபுரம்-25பேர், கும்மிடிப்பூண்டி-26 பேர், திருத்தணி-8 பேர், வில்லிவாக்கம்-3 பேர், திருவாலங்காடு-11 பேர் என மொத்தம் 211 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த பணியிட மாறுதல் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல், நடைமுறைக்கு வருகிறது.

    சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள ஊராட்சி செய லர்களை பணியில் இருந்து விடுவித்தது மற்றும் இடம் மாறுதலாகி பணியில் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் விவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    • நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கி ஆணையிடப்படுகிறது.
    • ஓசூர் தனி வட்டாட்சியர் சண்முகம் ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள பணியிட மாறுதல் தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கி ஆணையிடப்படுகிறது.

    அதன்படி சூளகிரி சிப்காட் நிலை 4 தனி வட்டாட்சியர் முருகேசன் ஓசூர் தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியர் ரமேஷ்பாபு சூளகிரி தனி வட்டாட்சியராகவும், ஓசூர் தனி வட்டாட்சியர் சுப்பிரமணி ஓசூர் வட்டாட்சியராகவும், ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துபாண்டி ஓசூர் நிலா வரி திட்ட தனி வட்டாட்சியராகவும், ஓசூர் தனி வட்டாட்சியர் சண்முகம் ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் டாஸ்மாக் துணை மேலாளர் சின்னசாமி கிருஷ்ணகிரி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியராகவும், இப்பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி அஞ்செட்டி தனி வட்டாட்சியராகவும், அஞ்செட்டி தனி வட்டாட்சியராக இருந்த பூவிதன் கிருஷ்ணகிரி நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், அஞ்செட்டி வட்டாட்சியர் தேன்மொழி போச்சம்பள்ளி வட்டாட்சியராகவும், பர்கூர் வட்டாட்சியர் பன்னீர் செல்வி சூளகிரி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல சூளகிரி வட்டாட்சியர் அனிதா அஞ்செட்டி வட்டாட்சியராகவும், போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகம் பர்கூர் வட்டாட்சியராகவும், ஊத்தங்கரை வட்டாட்சியர் கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியராகவும், வட்டாட்சியர் பயிற்சி பெற்று வரும் திருமலைராஜன் பயிற்சி முடித்தவுடன் ஊத்தங்கரை வட்டாட்சியராகவும், சூளகிரி சிப்காட் நிலை 4 அலகு 5 தனி வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி சிப்காட் நிலை 4 அலகு 1 தனி வட்டாட்சியராக கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்.

    இவ்வாறு கிருஷ்ணகிரி கலெக்டர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நிர்வாக நலன் கருதி நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 9 தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

    பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தாசில்தாராகவும் (பறக்கும்படை), அங்கு பணிபுரிந்த கோட்டீஸ்வரன் வேலூர் உதவிகமிஷனர் (கலால்) அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த செல்வி வேலூர் கோவில் நிலங்கள் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சுரேஷ்குமார் வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த சுமதி கே.வி.குப்பம் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ரமேஷ் முத்திரைக்கட்டண தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சத்தியமூர்த்தி வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த நரசிம்மன் வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராகவும், வேலூர் தாலுகா தேர்தல்பிரிவு துணை தாசில்தார் சிவசண்முகம் பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார். புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும் இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்.

    பணியிட மாறுதல் குறித்து மேல்முறையீடோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்று கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வீடியோ குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
    • தலைமை காவலர் கோவிந்தனை, ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய தலைமை காவலர் கோவிந்தன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அமைச்சர் ஆதரவோடு செயல்படுவதாக தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த வீடியோ குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதன் அடிப்படையில் தலைமை காவலர் கோவிந்தனை, ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    • கல்வித்துறை அலுவலர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.
    • முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் பாலாஜி, மண்டபம் முருகம்மாள் முன்னிலை வகித்தனர்.

    3 ஆண்டுகளுக்கு மேலாக முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் 110 இடங்களை கலந்தாய்வில் தேர்வு செய்தனர். இன்று (30-ந் தேதி) ஆன்லைனில் மாவட்டம் விட்டு மாவட்டம் தேர்வு செய்யும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு விழாவில் மின்சாரம் தடைபட்டதால் நடவடிக்கை
    • 10 நிமிடங்கள் கடந்தும் மின்சாரம் வரவில்லை

    வேலூர்:

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

    தொடர்ந்து காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதிலும் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சைக்கிள் வழங்கி பேசினார்.

    அப்போது 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்ற நினைவு குறித்தும் தனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியர் குறித்து மாணவர்களிடம் மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். உடனே கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் மின்வாரிய அதிகாரிகளை பதட்டத்துடன் தொடர்பு கொண்டனர்.

    10 நிமிடங்கள் கடந்தும் மின் இணைப்பு வரவில்லை. இதனால் அமைச்சர் துரைமுருகன் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் காட்பாடி, தாராப்படவேடு ஆகிய பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய 2 பேரை காட்பாடி வடுகன்தாங்கல் துணை மின் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜசேகர் திருப்பூர் மாநகருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர்:

    காவல்துறையில் மேற்கு மண்டல அளவில் 48 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகர வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த தெய்வமணி கோவை மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த செந்தில்பிரபு திருப்பூர் மாநகருக்கும், திண்டுக்கல்லில் இருந்த ராஜசேகர் திருப்பூர் மாநகருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த உதயகுமார் திருப்பூர் மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சிவகாமி–ராணி திருப்பூர் மாநகருக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருப்பாச்சேத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கவிதா திருப்பூர் மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த காமராஜ் கோவை சரகத்துக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த முரளிதரன் கோவை சரகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார்.

    • கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம்
    • சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

    புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் பதவியில் இருந்த ரவி கடந்த 31ம் தேதி பணி ஓய்வு பெறறார். அந்த பதவி காலியாக உள்ளது. ஆவடி ஆணையர் அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், தற்போது, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராக இருந்த அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தாம்பரம் இரண்டாவது காவல் ஆணையராக பதவியேற்கிறார்.

    இதேபோல் அண்மையில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படையின் ஐஜியாக அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புததாக உருவாக்கப்பட்ட சைபர் கிரைம் செல் போன்ற பதவிகளுக்கும் கண்காணிப்பாளர்கள் நிமியக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த மாதம் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக போலீசாரின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

    துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசாரின் எப்.ஐ.ஆரில், துணை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் சேகர் ஆகியோரின் உத்தரவின் பெயரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எப்.ஐ.ஆரிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் மாற்றி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
    ×