என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 211 ஊராட்சி செயலர்கள் அதிரடி பணியிட மாற்றம்
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
- ஊராட்சி செயலர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊராட்சி செயலர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி கடம்பத்துார், திருவள்ளூர் தாலுகாவில் 14 ஊராட்சி செயலர்கள், சோழவரம், பூண்டியில் தலா 18 பேர், பள்ளிப்பட்டு -20 பேர், ஆர்.கே.பேட்டை-24 பேர், மீஞ்சூர்-23 பேர், பூந்தமல்லி-7 பேர், எல்லாபுரம்-25பேர், கும்மிடிப்பூண்டி-26 பேர், திருத்தணி-8 பேர், வில்லிவாக்கம்-3 பேர், திருவாலங்காடு-11 பேர் என மொத்தம் 211 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த பணியிட மாறுதல் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல், நடைமுறைக்கு வருகிறது.
சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள ஊராட்சி செய லர்களை பணியில் இருந்து விடுவித்தது மற்றும் இடம் மாறுதலாகி பணியில் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் விவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்