search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசவராஜ் பொம்மை"

    • தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும்.
    • காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்பு வெளியான கருத்து கணிப்பு முடிவுகளுக்கும், அரசியல் சூழ்நிலைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் பா.ஜனதா ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள நிலை குறித்து, வாக்காளர்களின் மனநிலை பற்றியும் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது. அதன்படி, இந்த தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.

    எங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பலத்திலேயே ஆட்சி அமைப்போம். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது.

    தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை. அதனால் தான் அந்த கட்சியின் தலைவர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாகவே வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீதே, அந்த கட்சியின் தலைவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதன்படி, தலைவர்கள் ஆலோசிக்கிறார்கள். இது வழக்கமானது தான். எல்லா கட்சிகளின் தலைவர்களும் கூடி ஆலோசனை நடத்துவது சகஜமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது.
    • பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என முதல் மந்திரி தெரிவித்தார்.

    பெங்களூரு:

    முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

    கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். எங்கள் கட்சிக்கு அனைவரின் ஆசிர்வாதமும் உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதி. சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் தொலைக்காட்சி பேட்டியை பார்த்தேன். காங்கிரசில் எதுவும் சரியாக இல்லை என்பது தெரிகிறது.

    மக்களுக்கு ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் முயற்சி செய்துள்ளனர். இது போன்ற நாடகம் பா.ஜ.க.வில் நடக்காது. ஏனெனில் எங்கள் கட்சியில் ஒற்றுமை உள்ளது. எங்களுக்கு மக்களின் ஆதரவும் உள்ளது.

    மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயல்படுவது என்பது மிக முக்கியமானது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறேன். சிக்காவி தொகுதியில் எனது குடும்பத்தினருடன் வாக்களிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் 10-ந் தேதி நடக்கிறது.
    • காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகமாக நடைபெற்றது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஹாவேரி மாவட்டம் ஹானகல் தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இரட்டை என்ஜின் அரசு கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பிரதமர் அவாஸ் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன.

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஆண்டுக்கு 13 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் சமூக நீதி குறித்து பேசியே மக்களை கிணற்றில் தள்ளியுள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். ஆனால் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்துவதாக கூறியுள்ளது. நாங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 40 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளோம். இந்தியா தற்போது பாதுகாப்பான நாடாக திகழ்கிறது. சித்தராமையா ஆட்சியில் அதிகளவில் மதக்கலவரங்கள் நடைபெற்றன. கற்பழிப்புகள், விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்றன. நமது பிரதமர் நாட்டை பாதுகாப்பாக வைத்துள்ளார்.

    அமெரிக்காவில் இப்போதும் கொரானா பயத்தால் முககவசம் அணிகிறார்கள். பிரதமர் மோடி இங்கு கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகமாக நடைபெற்றது. காங்கிரசார் தற்போது உத்தரவாத அட்டையை வழங்குகிறார்கள். முதலில் காங்கிரசுக்கு உத்தரவாதம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    • கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
    • விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

    இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.

    உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

    விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

    ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

    அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.

    கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.

    மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

    • கர்நாடக சட்டசபை தேர்தல் 10-ந் நடக்கிறது.
    • பா.ஜனதா மிகப்பெரிய கட்சி.

    உப்பள்ளி :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சட்டசபை தேர்தல் எதிர்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இதற்கு முன்பாக அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்பதாகவும், பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இதன் காரணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளார். ஜே.பி.நட்டா கூறி இருப்பது குறித்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீது இருக்கும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக எங்கள் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, அவ்வாறு கூறி இருக்கிறார். அதனை பூர்த்தி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பேன். பா.ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த கடுமையாக உழைப்பேன். பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. பா.ஜனதா கட்சியை பொறுத்தமட்டில் யார் முதல்-மந்திரியாக இருக்கிறாரோ, அவரது தலைமையில் தேர்தலை சந்திப்பது தான் வாடிக்கையாக நடந்து வருகிறது.

    தற்போது கர்நாடகத்தில் பா.ஜனதா முதல்-மந்திரியாக நான்(பசவராஜ் பொம்மை) இருந்து வருகிறேன். எனது தலைமை மற்றும் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து செயல்படுவோம். அடுத்த முதல்-மந்திரி யார் என்பதை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும், பா.ஜனதா மேலிட தலைவர்களும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். கட்சி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூருவுக்கு வந்த போது, கட்சியின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பா.ஜனதா கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார். பா.ஜனதா மிகப்பெரிய கட்சி. அந்த கட்சியின் பொறுப்பை, எனக்கு வழங்கி இருப்பது நான் செய்த புண்ணியம் ஆகும்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமி ஹெப்பால்கர், 50 காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்த தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். ஒரு திருடர்களின் மனசு, திருடர்களுக்கு மட்டுமே தெரியும். கர்நாடகத்தில் மழை வெள்ளத்தின் போது பிரதமர் மோடி வரவில்லை என்று பிரியங்கா காந்தி கூறி இருக்கிறார். அவர் யாரோ எழுதி கொடுத்ததை பேசுகிறார்.

    மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் உள்ளார். பிரதமர் மோடி பற்றி தரம் குறைவாக பேசி வருகிறார். கர்நாடகத்தில் ஒரு நாளுக்கு 5 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாகவும் கூறி இருக்கிறார். ஒரு மூத்த தலைவர், தனது அனுபவத்தின்படி பேச வேண்டும். பிரதமர் மோடி பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு யானை பலம் கிடைத்துள்ளது.

    அதனை சகித்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். ஒரே நாளில் 5 இடங்களில் பிரசாரம் செய்யும் சாமர்த்தியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. பா.ஜனதாவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்புக்கு ரூ.130 கோடி செலவிடப்பட்டது.
    • எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கியுள்ளோம்.

    யாதகிரி :

    யாதகிரி மாவட்டம் ஷாகாப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுப்படுத்தியது. பிறகு சமுதாயத்தை உடைக்க முயன்றது. வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க நினைத்த முயற்சியும் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை. தற்போதும் காங்கிரசார் மீண்டும் தவறு செய்கிறார்கள். இடஒதுக்கீடு விவகாரத்தில் அக்கட்சி தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

    கர்நாடகத்தில் காவி அலை வீசுகிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்ற அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்திற்கு வரட்டும். உள்ளூர் தலைவர்களும் வரட்டும். ஆனால் காவி அலையை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி நாட்டை ஆண்டுள்ளது. இனி அந்த கட்சியின் விளையாட்டும், பொய்யும் மக்களிடம் எடுபடாது.

    சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்புக்கு ரூ.130 கோடி செலவிடப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை அமல்படுத்தவில்லை. அதனை அமல்படுத்த காங்கிரசாருக்கு வலிமை இல்லை. நாங்கள் எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். சமுதாயத்தை உடைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை.

    எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கியுள்ளோம். தேன்கூட்டில் கை வைக்காதீர்கள் என்றனர். ஆனால் தேனீக்கள் கடித்தாலும் பரவாயில்லை என மக்களுக்கு எனது தலைமையிலான பா.ஜனதா அரசு நல்லது செய்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உடைந்துவிட்டது. அனைத்து சமுதாயத்தினரும் பா.ஜனதாவை ஆதரிக்கின்றனர். இதனால் காங்கிரசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி தருவது உத்தரவாத அட்ைட அல்ல. தேர்தலுக்கு பிறகு அது இருக்காது. ஆட்சி, அதிகாரத்திற்காக சமுதாயத்தை பிளவுப்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் அதிகார போதையில் இருந்து வெளியே வரவில்லை.
    • கர்நாடகம் கலாசாரத்தை கொண்ட நாடு.

    பெங்களூரு :

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நான் எனது தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் ஆதரவை கேட்கிறேன். அதனால் என்னை மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். தேசத்துரோகிகள், பயங்கரவாதிகள், அமைதியை சீர்குலைப்பவர்களுக்கு பிரதமர் மோடி சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். நாட்டின் பிரதமர் மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். காங்கிரஸ் கீழ்மட்டத்திற்கு இறங்கியுள்ளது.

    காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் அதிகார போதையில் இருந்து வெளியே வரவில்லை. முன்பு இருந்த அதிகார போதையில் இருப்பது போலவே இப்போதும் பேசுகிறார்கள். கர்நாடகம் கலாசாரத்தை கொண்ட நாடு. அனைவரையும் கன்னடர்கள் மதிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நாங்கள் எதிர்த்தாலும், மூத்த தலைவர்கள் என்பதால் அவரை நாங்கள் மதிக்கிறோம்.

    ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் இவ்வாறு தரக்குறைவாக பேசலாமா?. பா.ஜனதா வெற்றி பெறும் என்பதால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரக்தியில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியின் உள்துறை மந்திரி அமித்ஷா மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி என்ன நடைபெறுமோ அது நடக்கும். காங்கிரசாரின் புகாரில் உண்மை இல்லை. அந்த புகார் மனு நிராகரிக்கப்படும். காங்கிரஸ் கட்சி பண பலத்தை கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறது. முன்பு எங்கள் கட்சி தொண்டர்கள் பலர் அடி-உதை வாங்கியுள்ளனர். அவ்வாறு தற்போது நடைபெறக்கூடாது என்பதால் நாங்கள் முன்எச்சரிக்கையாக கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.

    எங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்கிறோம். ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது. தேர்தல் ஆணையம் தனது பணியை ஆற்றும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • எலகங்கா தொகுதியில் இருந்து இன்று முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
    • நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பா.ஜனதாவின் அணை உடைந்து, தண்ணீர் காலியாகி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். முதலில் காங்கிரஸ் குளத்தில் தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தண்ணீர் எப்படி பாய்ந்து ஓடும். முதலில் காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை டி.கே.சிவக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா கட்சி பற்றி அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

    எங்கள் கட்சியின் மேலிடம் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. கட்சிக்குள் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை சரிசெய்யும் சாமர்த்தியம் இருக்கிறது. எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி ஷோபாவை கட்சியில் இருந்து ஒழிக்க சதி நடப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. சித்தராமையாவை காங்கிரஸ் கட்சியினர் எப்படி முடக்கினார்கள் என்பது தெரியவில்லையா?.

    கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம். தற்போது கூட வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார், அக்கட்சியின் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இது இந்த நாட்டுக்கே தெரிந்த விஷயம். கடந்த 2013-ம் ஆண்டு லிங்காயத் சமூகத்தை அழிப்பதற்காக, தனி மத அங்கீகாரம் கொடுப்பதாக கூறினார்கள். தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

    டி.கே.சிவக்குமாரின் பேச்சு காரணமாக இந்த முறை லிங்காயத் சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். லிங்காயத் சமூகத்தை பலப்படுத்தும் வேலையை காங்கிரசாரே செய்கின்றனர். அதுபற்றி பா.ஜனதா கவலைப்படவில்லை.

    சவதத்தி-எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. யாருடைய வேட்பு மனுவை ஏற்க வேண்டும், யாருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம், அதிகாரிகளின் பணியாகும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய சாத்தியமில்லை.

    டி.கே.சிவக்குமார், தனது வேட்பு மனு விவகாரத்தை 2 நாட்கள் கையில் எடுத்து அரசியல் செய்தார். நாளை முதல் (அதாவது இன்று) எலகங்கா தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். சுதீப் எங்கெல்லாம் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் முதல் மந்திரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 15-ம் தேதி சிக்காவி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஷிகான் தொகுதியில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்கு முன்பு அவர் ஆயிரக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.

    மனு தாக்கலின் போது பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடக்கிறது.
    • வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(புதன்கிழமை) மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மனு தாக்கலுக்கு முன்பு அவர் ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க உள்ளது.

    இன்று அமாவாசை என்பதால் பசவராஜ் பொம்மை பெயருக்காக ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம்.
    • எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது. பா.ஜனதா மீது ஜெகதீஷ் ஷெட்டர் சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    பொதுவாக ஒருவர் கட்சியை விட்டு விலகி செல்லும்போது, இவ்வாறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கட்சி மீது சுமத்துகிறார்கள். அவரது 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கட்சி அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. அவரை ஓரங்கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் கட்சியை விட்டு சென்றுள்ளார்.

    அதனால் எங்கள் கட்சியை அவர் விமர்சித்துள்ளார். அவர் திரும்பி வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். அங்கு முதலில் வரவேற்று பாராட்டுவார்கள். அதன் பிறகு அவமதிப்பார்கள். அவரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • சிக்காவி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா சார்பில் சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் சிக்காவி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை வெளியிட்டு இருந்தார். பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ.49.70 கோடி சொத்து இருப்பதாக பசவராஜ் பொம்மை கூறி உள்ளார்.

    ரூ.5.98 கோடிக்கு அசையும் சொத்துகளும், ரூ.1.57 கோடிக்கு தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பசவராஜ் பொம்மையின் மனைவி சென்னம்மா பெயரில் ரூ.1.14 கோடி, மகள் அதிதி பெயரில் ரூ.1.12 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது மகன் பரத் பொம்மைக்கு ரூ.14.74 லட்சம் கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தனது மகன் பெயரிலான சொத்துக்களை இதில் குறிப்பிடவில்லை.

    மேலும் தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.42.15 கோடிக்கும், ரூ.19.2 கோடிக்கு குடும்ப சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரூ.5.79 கோடி கடன் இருப்பதாகவும், மொத்தத்தில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் சேர்த்து ரூ.52.12 கோடி சொத்து இருப்பதாக பசவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி கடந்த ஆண்டு(2022) மார்ச் மாதம் 26-ந் தேதி தார்வார் மாவட்ட உப்பள்ளி தாலுகா தாரிஹாலா கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    ×