search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagadish Shettar"

    • ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர்.
    • கடந்த ஆண்டு தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். இவர் கடந்த ஆண்டு பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னர்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இன்று டெல்லி சென்ற ஷெட்லர், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை சந்தித்தார். அதன்பின் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    68 வயதாகும் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவிடம் சீட் கேட்டார். பா.ஜனதா அவருக்கு சீட் வழங்க மறுத்துவிட்டது.

    இதனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மத்திய ஹூப்ளி-தர்வாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் பா.ஜனதா வேட்பாளரால் சுமார் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதாவின் தோல்விக்கு காரணமானவர்கள் மாயமாகிவிட்டனர்.
    • பா.ஜனதாவில் தற்போது சரியான தலைவர்கள் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா போட்டியிட டிக்கெட் கிடைக்காததை அடுத்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்து, உப்பள்ளி-தார்வார் தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரசில் எனக்கு உரிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரசில் சேரும்போது நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இன்னும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதனால் எனக்கு பதவி கிடைக்கும்.

    நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. அந்த தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பா.ஜனதா என் ஒருவரை தோற்கடிக்க பணியாற்றியது. ஆனால் ஒட்டுமொத்தமாக அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது.

    கட்சியில் எனது பங்கு என்ன என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். காங்கிரஸ் எந்த பதவி கொடுத்தாலும் அதை சரியான முறையில் நிர்வகிப்பேன். மந்திரிசபையில் வட கர்நாடகத்திற்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

    முக்கியமான 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைத்திருக்க வேண்டும். அவரை புறக்கணித்தது சரியல்ல. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெலகாவியில் சுவர்ண சவுதா கட்டிடம் திறக்கப்பட்டது. அந்த கட்டிட திறப்பு விழாவுக்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியை அழைத்து திறந்தோம். பாராளுமன்ற புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறப்பது தான் சரியானது.

    எனது தோல்விக்கு காரணம் யார் என்பதை தற்போது பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. எனக்கும், லட்சுமண் சவதிக்கும் மந்திரி பதவி கிடைத்திருக்க வேண்டும். பா.ஜனதாவின் தோல்விக்கு காரணமானவர்கள் மாயமாகிவிட்டனர். பா.ஜனதாவில் தற்போது சரியான தலைவர்கள் இல்லை. தேசிய கட்சியாக இருக்கும் அக்கட்சிக்கு இந்த நிலை வந்திருக்க கூடாது.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    • இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர்.
    • பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர்.

    பெங்களூரு :

    தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தனக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தார்வார்-உப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    லிங்காயத் தலைவரான எடியூரப்பா கடந்த பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். ஆனால் அவரை வலுக்கட்டாயப்படுத்தி பா.ஜனதா பதவி விலக வைத்தது. மேலும் அவரை அக்கட்சி ஓரங்கட்டியது. எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை உயர்மட்ட குழு கூற வேண்டும்.

    நான் காங்கிரசில் இணைந்ததால் தான் வடகர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர். தம்மய்யா, லட்சுமண் சவதி உள்பட பல லிங்காயத் தலைவர்களை பா.ஜனதா மதிக்கவில்லை. அவர்களை யாரும் சமாதானப்படுத்தவில்லை. பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர். பி.எல்.சந்தோஷ் பா.ஜனதா தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார். இதனால் என்னை ஓரங்கட்டினர். தற்போது என்னை குறிவைத்து பா.ஜனதாவினர் தோற்கடித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் ஆதரவு இருக்கும் வரை ஒருவர் அரசியலில் தொடர்ந்து இருக்கலாம்.
    • பா.ஜனதா ஆட்சியில் நான் மந்திரி பதவி வேண்டாம் என்று கூறினேன்.

    பெங்களூரு

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பளிக்காததால் அவர் காங்கிரசில் சேர்ந்திருந்தார். 6 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்ததாலும், வயதாகி விட்டதாலும், தேர்தல் அரசியலில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டரை ஓய்வு பெறும்படி பா.ஜனதா தலைவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதுபோன்ற காரணங்களால் தான் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகினார். இந்த விவகாரம் குறித்து உப்பள்ளியில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களின் ஆதரவு இருக்கும் வரை ஒருவர் அரசியலில் தொடர்ந்து இருக்கலாம். மக்களின் ஆசீர்வாதம் இருக்கும் போது அரசியலில் தொடர்ந்து இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. பா.ஜனதா ஆட்சியில் நான் மந்திரி பதவி வேண்டாம் என்று கூறினேன். இது எனது அரசியல் அனுபவம், முதிர்ச்சிக்காக எடுத்த முடிவாகும்.

    இடஒதுக்கீடு விவகாரத்தில் மக்களிடம் பொய் சொன்ன ஒரே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவார். என்னை அரசியலில் இருந்து ஓய்வு பெற பா.ஜனதா தலைவர்கள் கூறினார்கள். பிரதமர் மோடி 4 முறை முதல்-மந்திரியாகவும், 2 முறை பிரதமராகவும் இருந்துள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?. பிரகலாத் ஜோஷி 4 முறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்துள்ளதால், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார்.
    • காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும், பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெங்களூரு

    முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சீட் கொடுக்காத காரணத்தால், அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்துள்ளார். ஆனாலும் உப்பள்ளியில் உள்ள ஜெகதீஷ் ஷெட்டரின் அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் புகைப்படங்களும், மோடி, அமித்ஷாவுடன் ஜெகதீஷ் ஷெட்டர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அகற்றப்படாமல், அப்படியே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும், பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், 'ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேர்ந்ததும், உடனடியாக முந்தைய கட்சி தலைவர்களின் புகைப்படங்களை அகற்றுவது சரியானது இல்லை. நான் அப்படி முந்தைய கட்சியின் தலைவர்களின் புகைப்படங்களை மாற்ற மாட்டேன்' என்றார். அதே நேரத்தில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் வெற்றி பெறுவதற்காக பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்களை ஜெகதீஷ் ஷெட்டர் அகற்றாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • நான் உப்பள்ளி மக்களின் இதயத்தில் இருக்கிறேன்.
    • அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர், உப்பள்ளி மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், கட்சியில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பது என்னுடைய பொறுப்பு என்றும் கூறி இருந்தார். இதுகுறித்து கொப்பலில் ஜெகதீஷ் ஷெட்டரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவேன் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகின்றனர். நான் உப்பள்ளி மக்களின் இதயத்தில் இருக்கிறேன். உப்பள்ளி மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்கு தெரியும். நான் எப்படிப்பட்டவன் என்பது பற்றி தொகுதி மக்களுக்கு தெரியும். அதனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. என்னை தோற்கடிக்க இது குஜராத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல் அல்ல. கர்நாடகத்தில் நடக்கும் தேர்தல். இதனை பா.ஜனதா தலைவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    • கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடக்கிறது.

    உப்பள்ளி

    பா.ஜனதா மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் தனக்கு டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை வீழ்த்த பா.ஜனதா தலைவர்கள் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் துரோகி என்றும், எனது ரத்தத்தில் எழுதுகிறேன் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைவார் என்றும் கூறியிருந்தார். இது பெரும் விவாதப்பொருளாகி வருகிறது.

    இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டரான மஞ்சுநாத் என்.யந்துருவி, ஜெகதீஷ் ஷெட்டர் மீதான அபிமானத்தில் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் வெற்றி பெறுவார் என ரத்தத்தில் எழுகிறேன். இந்த முறை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும். ஜெய் காங்கிரஸ் என குறிப்பிட்டுள்ளார்.

    • எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர்.
    • எடியூரப்பா எனக்கு டிக்கெட் கிடைக்க கடைசி வரை போராடினார்.

    உப்பள்ளி :

    உப்பள்ளி டவுனில் நேற்று உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு லிங்காயத் தலைவரை ஒழிக்க இன்னொரு லிங்காயத் தலைவர் முதுகில் துப்பாக்கி வைத்து மிரட்டும் வேலையை பா.ஜனதா தற்போது செய்து வருகிறது. இவ்வாறு எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர். பா.ஜனதா சமுதாயத்தில் பிரிவினையை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.

    எனக்கு பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு பி.எல்.சந்தோஷ் தான் காரணம் என்றேன். இதுவரை அவர் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் வேறொருவர் மூலம் என்னை விமர்சிக்க வைக்கிறார். போர் என்றால் அவர் என்னுடன் நேருக்குநேர் மோத வரட்டும்.

    எடியூரப்பா எனக்கு டிக்கெட் கிடைக்க கடைசி வரை போராடினார். எனக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சிக்கு பாதிப்பு வரும் என கூறினார். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் பற்றி நான் ஒரு போதும் தவறாக பேசவில்லை. இதை எடியூரப்பா புரிந்துகொள்ள வேண்டும். உப்பள்ளியில் 50-60 உறுப்பினர்களை கூட்டி எடியூரப்பா என்னை விமர்சித்துள்ளார். அதை நான் ஆசீர்வாதமாக தான் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் நான் இந்த அளவுக்கு வளர்வதற்கு அவரும் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றுகிறேன்.
    • பா.ஜனதாவில் என்னை போன்ற தலைவர்களை வெளியே அனுப்புகிறார்கள்.

    உப்பள்ளி :

    கர்நாடக சட்டசபை தேர்தலிலில் போட்டியிட வாய்ப்பு நிராகரித்ததை அடுத்து சமீபத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்து, உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். உப்பள்ளியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜனதா காரணமே இல்லாமல் எனக்கு திடீரென டிக்கெட் வழங்க மறுத்தது எனது சுயமரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும் எனது தொகுதி மக்களுக்கும் அது வேதனையை ஏற்படுத்தியது. எனக்கு மந்திரி பதவியோ அல்லது முதல்-மந்திரி பதவியோ வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் இதை பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. அதனால் பா.ஜனதாவில் இருந்து விலகினேன்.

    நான் தேசிய கட்சியில் இருந்தவன் என்பதால் இன்னொரு தேசிய கட்சியான காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று காங்கிரசில் கேட்டு கொண்டேன். தற்போது காங்கிரசார் எனக்கு அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளிக்கிறார்கள். நான் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றுகிறேன். சமத்துவம், நல்லிணக்க கொள்கைகளை பின்பற்றுகிறவர்களுக்கு எந்த கட்சியிலும் பிரச்சினை ஏற்படாது.

    ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரசில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை வரவேற்றது. அப்போது அந்த கட்சியில் கொள்கை எங்கே போனது?. நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவன் என்றாலும், காங்கிரசில் இருப்பதால் எனக்கு எந்த இக்கட்டான நிலையை ஏற்படவில்லை. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மீது எனக்கு மரியாதை உள்ளது.

    ஆனால் கர்நாடக பா.ஜனதா பி.எல்.சந்தோஷ் என்ற ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் மீண்டும் பா.ஜனதாவில் சேருவது என்பது முடிந்துபோன அத்தியாயம். பிரதமர் மோடியே அழைத்தாலும் நான் மீண்டும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன். இந்த பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்து நடந்து முடிந்த கடைசி சட்டசபை கூட்டத்தொடரில் பேசினேன். மதவாதம் குறித்த விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

    பா.ஜனதாவில் என்னை போன்ற தலைவர்களை வெளியே அனுப்புகிறார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகார நாற்காலியில் அமர சிலர் முயற்சி செய்கிறார்கள். 25 முதல் 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதாக லிங்காயத் சமூகத்தினர் கூறியுள்ளனர். இது பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    • தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜ.க.வில் இருந்து விலகினார் ஜெகதீஷ் ஷெட்டர்.
    • பா.ஜ.க.வில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சமீபத்தில் இணைந்தார்.

    இதற்கிடையே, ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி-தர்பாத் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகா வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ஜெகதீஷ் ஷெட்டர்

    முதல் முறையாக இன்று சந்தித்தார். அப்போது தேர்தல் நிலவரம் குறித்து இருவரும் உரையாடினர்.

    • ஜெகதீஷ் ஷெட்டர் தனது சுயநலத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்றுவிட்டார்.
    • சட்டசபை தேர்தல் களத்தில் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம்.

    பெங்களூரு :

    உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் ஜெகதீஷ் ஷெட்டர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.

    இந்த நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா லிங்காயத் சமூக மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் நிராகரித்து அதன் மூலம் அந்த சமூகத்தை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் சொல்கிறது. உப்பள்ளி-தாா்வார் மத்திய தொகுதி பா.ஜனதாவின் பாரம்பரியமான வலுவான தொகுதி ஆகும். பா.ஜனதாவுக்கு அது பாதுகாப்பான தொகுதி. அது தொடர்ந்து அவ்வாறே இருக்கும். அதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டரின் தோல்வியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள்.

    வலுவான பா.ஜனதாவால் தான் ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். அவர் ஒன்றும் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர் கிடையாது. அவர் பா.ஜனதாவை ஏமாற்றிவிட்டு காங்கிரசுக்கு சென்றுள்ளார். இதனால் பா.ஜனதா தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் தெங்கினிகாயும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்.

    பா.ஜனதாவுக்கு லிங்காயத் சமூகத்தின் பெரிய தலைவர் எடியூரப்பா மற்றும் மந்திரி சோமண்ணா, பசனகவுடா பட்டீல் யத்னால் உள்ளிட்டோரின் ஆதரவு உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் அதே சமூகத்தை சேர்ந்தவர் தான். காங்கிரசில் சேர்ந்த லட்சுமண் சவதியால் கடந்த 2018-ம் ஆண்டு தனது தொகுதியான அதானியில் வெற்றி பெற முடியவில்லை.

    ஆனால் அவருக்கு எம்.எல்.சி. பதவி வழங்கி துணை முதல்-மந்திரி ஆக்கினோம். ஜெகதீஷ் ஷெட்டருக்கும் அனைத்து மரியாதையும் வழங்கினோம். ஆனால் அவர் தனது சுயநலத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்றுவிட்டார். சட்டசபை தேர்தல் களத்தில் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். இதனால் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

    இந்த முறை மைசூரு மண்டலத்திலும் பா.ஜனதா வெற்றி பெறும். அந்த மண்டலத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சி.டி.ரவி எம்.எல்.ஏ. போன்றோர் போட்டியிடுவதால், அது எங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். பல்வேறு வளர்ச்சி குறியீட்டில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. அதனால் இந்த தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கும். 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை நாங்கள் அடைவோம்.

    இவ்வாறு அருண்சிங் கூறினார்.

    • ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம்.
    • எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது. பா.ஜனதா மீது ஜெகதீஷ் ஷெட்டர் சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    பொதுவாக ஒருவர் கட்சியை விட்டு விலகி செல்லும்போது, இவ்வாறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கட்சி மீது சுமத்துகிறார்கள். அவரது 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கட்சி அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. அவரை ஓரங்கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் கட்சியை விட்டு சென்றுள்ளார்.

    அதனால் எங்கள் கட்சியை அவர் விமர்சித்துள்ளார். அவர் திரும்பி வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். அங்கு முதலில் வரவேற்று பாராட்டுவார்கள். அதன் பிறகு அவமதிப்பார்கள். அவரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    ×