search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியமனம்"

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாவட்டத்திற்கு தலைவராக வீரசோழனை சேர்்ந்த சவரிமுத்து, துணைத்தலைவராக கீழஉப்பிலிக்குண்டு ராமர், அமைப்பாளராக கல்குறிச்சி கடம்பவனம் துணை அமைப்பாளர்களாக பூலாங்கால் மைதின் அப்துல்காதர், குலசேகரநல்லூர் முத்துராமலிங்கம், சிவகாசி அன்பு முருகன், பொட்டகாசியேந்தல் பிச்சைமணி, மல்லாங்கிணறு ரங்கசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்டத்திற்கு தலைவராக சுந்தரபாண்டியம் பகுதிைய சேர்ந்த சடையாண்டி, துணைத்தலைவராக சமுத்திராபுரம் ஆனந்தா முருகன், அமைப்பாளராக அருப்புக்கோட்டை திருநகரம் அண்ணாதுரை, துணை அமைப்பாளர்களாக சங்கரபாண்டியாபுரம் பாலசுப்பிர மணியன், குருநமசிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மதுரை மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
    • இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 27 -ஆவது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக புகார் அளிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரை 93804 14023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ombudsperson.mdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில செயலாளராக அந்தோணிராஜ் நியமனம் செய்யப்பட்டார்.
    • பகுதி நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை தலைவர் மைக்கேல்ராஜ் பரிந்துரையின்படி மாநில தலைவர் முத்துகுமார், மண்டல துணைத் தலைவராக பணியாற்றிய குட்டி என்ற அந்ேதாணிராஜை, மாநில செயலாளராக நியமித்துள்ளார்.

    அவரை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர்சிவா, மாநில இளைஞரணி தலைவர் ஜெயபால், மதுரை மண்டல, மாநில நிர்வாகிகளான மரிய சுவீட்ராஜன், குணஜீசஸ், வாசுதேவன், பிரபாகரன், கரண்சிங், ஜெயகுமார், தேனப்பன் மற்றும் பகுதி நிர்வாகிகள் வாழ்த்தினர்.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. மகரளிரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    வடக்கு மாவட்டம்

    தலைவர்-லதா கண்ணன், துணைத்தலை வர்-யசோதா, அமைப்பா ளர்-சரஸ்வதி, துணை அமைப்பாளர்கள்-செல்வி, வகிதா ரகுமான், உமா, ராமலட்சுமி, ராதா, வலை தள பொறுப்பா ளர்கள்-சுப ரத்தினா, தேன்மொழி.

    தெற்கு மாவட்டம்

    தலைவர்-சுதர்சனா, துணைத்தலைவர்-ஜெயந்தி, அமைப்பாளர்-சுமதி ராமமூர்த்தி, துணை அமைப்பாளர்கள்-சுப்புலட்சுமி, கல்பனா, கற்பகம், ஸ்ரீமதி சந்தோஷ், கவிதா, புஷ்பம், வலைதள பொறுப்பா ளர்கள்-அனுஷியா, சோனியா.

    மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

    விழாவில் வாசிம்ராஜாவுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    ஊட்டி,

    குன்னூர் நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணை செயலாளராக நியமிக்க பட்டிருக்கும் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜாவுக்கு குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி குன்னூர் நகர தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவில் வாசிம்ராஜாவுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, பொது குழு உறுப்பினர் செல்வம் நகர துணை செயலாளர் வினோத், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர்கான், மன்சூர், குமரேசன், இளைஞர் அணி பத்மநாபன், வெலிங்டன் நகரிய செயலாளர் மார்டின், நகர பொருளாளர் ஜெகநாதராவ், தி.மு.க நிர்வாகிகள் கோவர்தணன், மணிஅல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

    • சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
    • கௌதம் கோயல் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    சேலம்:

    சென்னை தலைமை கூடுதல் செயலாளர் நேற்று ஏ எஸ் பி களுக்கு பதவி உயர்வு மற்றும் துணை கமிஷனர்களை மாறுதல் செய்து உத்தரவிட்டார்.சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக பணியாற்றிய கௌதம் கோயல் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    இதேபோல் வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் துணை சூப்பிரண்டு குணசேகரன் சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். சேலம் மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் பணியாற்றிய மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுவதால் இன்று காலை முதல் சேலம் மாநகரத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • மேலூர் தொகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • நகர செயலாளராக சரவணன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.

    மேலூர்

    மேலூர் தொகுதி தே.மு.தி.க. புதிய நிர்வாகிகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் பரிந்துரையின் பேரில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலூர் நகர செயலாளராக எஸ். சரவணன் 2-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவராக ஜெயம் மனோகர், பொருளாளராக அபுதாகிர், துணைச் செயலாளராக பாண்டி முருகன், லட்சுமி காந்தன், பத்ரி நாராயணன், கற்பகம் மாவட்ட பிரதிநிதிகளாக ரவி, சதீஷ்குமார், முரளி கிருஷ்ணன், திவாகர்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக விட்டி கண்ணன், அவை தலைவராக சிவானந்தம், பொருளாராக வெள்ளையன், துணைச் செயலாளர்களாக புகழேந்தி, சிவக்குமார், ராஜன், முத்துலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகளாக பாஸ்கரன், கோவிந்தராஜன், கலையரசன், ஜானகிராமன் ஆகியோரும், மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளராக காளீஸ்வரன், அவைத்தலைவராக பாலசுப்பிரமணியம், ஒன்றிய பொருளாளராக முருகேசன், துணைச்செயலாளர்களாக தியாகராஜன், கண்ணப்பன், ஆண்டிச்சாமி, சின்னம்மாள், மாவட்ட பிரதிநிதிகளாக முனிச்சாமி, பாண்டிபிரபு, முத்துச்சாமி, கருப்பையா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அ.வல்லாளப்பட்டி பேரூர் செயலாளராக ஆறுமுகம், அவை தலைவராக மணிகண்டன், பொருளாளராக விஜயகுமார், துணைச்செயலாளர்களாக பாண்டித்துரை, பிரபு, முத்துமணி, கார்த்தி, மாவட்ட பிரதிநிதிகளாக கார்த்திக், பாண்டிசாமி, பழனிச்சாமி, பாண்டி ஆகியோரும், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளராக பரசுராமன், அவைத் தலைவராக சின்னையா, பொருளாளராக அருணகிரி, துணைச் செயலாளராக கண்ணன், சசிகுமார், முருகன், புவனேசுவரி, மாவட்ட பிரதிநிதிகளாக ராஜமாணிக்கம், ஜபுர் அலி, சங்கர், கனகராஜ் ஆகியோரும் கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக பட்டூர் சந்தன பீர் ஒலியுல்லா, அவைத்தலைவராக ரவி, பொருளாளராக சின்னையா, துணைச் செயலாளராக நிறை செல்வம், முருகேசன், அய்யனார், முத்துலட்சுமி, மாவட்ட பிரதிநிதியாக சேமராஜ், குமார், செல்லையா, ஆண்டி எட் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.
    • இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நிய மிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சேலம் மாநகர் காவல் துறையில், 12 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று பணியில் சேர்ந்தனர்.

    மீதி 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் பணியில் இணைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்

    27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை

    உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் slmombuds@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், அவரை அறை

    எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்-636001 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்

    புதுக்கோட்டை:

    மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக ரகோத்தமன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
    • திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் கமிஷனர் முகமது சம்சுதீனுக்கு பிறகு இதுவரை நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படவில்லை.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது வெள்ளக்கோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக இருந்து வந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக அப்துல் ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டுளளார். திருத்துறைப்பூண்டி கமிஷனராக பணியாற்றி வந்த இவர், திருமுருகன்பூண்டிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை (திங்கட்கிழமை) திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக 2-வது முறையாக பேராசிரியர் ராம சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    வாடிப்பட்டி


    பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக 2-வது முறையாக  பேராசிரியர் ராம சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 


    2014-ல் தமிழக பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டு மாநில செயலாளராக கட்சி பணியை தொடங்கிய இவர் கடின உழைப்பால் கோட்ட பொறுப்பாளராகவும், பெரும் கோட்ட பொறுப்பாளராகவும், மாநில பொது செயலாளராகவும் உயர்வு பெற்றார்.  

    தற்பொழுது  இவரை, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 2-வது முறையாக நியமித்துள்ளார். பேராசிரியர் சீனிவாசனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து தெரிவித்தனர்.
    ×