search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியமனம்"

    • பதவி உயர்வு மூலம் 44 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டது.
    • 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதிரி பள்ளி உட்பட 71 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-1 வகுப்பிலும், 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2021-2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 97.20 சதவீதம் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம் பெற்றது. கடந்தாண்டு கல்வியாண்டில் 95.30 சதவீதம் பெற்று மாநில அளவில் 12-ம் இடத்திற்கு பின்னோக்கி சென்றது. தேர்வு விகிதம் குறைந்த தற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது சில மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வராமல் கடைசி நேரத்தில் தேர்விற்கு வந்ததாலும், இது போன்று தலைமையாசிரியர்கள், காலிபணியிடம் உள்ள பள்ளிகளில் தேர்வு விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனை யடுத்து உடனடியாக தலைமையாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    இதில் தற்போது நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் 44 அரசு மேல்நிலைப்பள்ளி களுக்கும் தலைமையாசி ரியர் பணிடங்கள் நிரப்பப் பட்டன. மேலும் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்ளை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அரசு உத்தர விட்டது. அதன்படி மாவட்டத்தில் 90 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தர் நியமிக்கப்பட்டார்.
    • கோவை மாவட்டம், ஒன்றியம், பகுதிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை,

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தரை கட்சியின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் நியமித்துள்ளனர்.மேலும் கோவை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர்.

    கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வருமாறு:-

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோவை மாவட்ட தலைவராக ஜெயராஜ், மாவட்ட செயலாளராக வில்லியம் ஜோஸ், வடக்கு மாவட்ட செயலாளராக ரங்கசாமி, தெற்கு மாவட்ட தலைவராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் சிறு பான்மை பிரிவு மாவட்ட செயலாளராக அக்பர் ெஷரீப், தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளராக நித்யானந்தன், மாவட்ட இணை செயலாளராக சண்முகம், மாவட்ட பொருளாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுபோன்று கோவை மாவட்டம், ஒன்றியம், பகுதிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரின்ஸ் சுந்தருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்
    • பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள 88 திருக்கோவில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படாத கோவில்களுக்கு உறுப்பினர்களை நியமித்து விரைவில் நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால்தான் திருக்கோவில்களில் இருக்கக்கூடிய துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து குடமுழுக்கு நடைபெறாத திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கும் மற்றும் பராமரிக்கப்படாத திருக்கோவில்களை மேம்படுத்தும் பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும். நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில்களை நல்ல முறையில் பராமரித்து கோவில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கே வரக்கூடிய பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

    கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உரிய முறையில் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு அந்த கோவில்களிடம் ஒப்படைத்து அந்த கோவில்களுக்கு கூடுதலாக நிதிகளை பெற்று சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் இந்த நியமன ஆணைகளை பெற்றுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கோவில் நல்ல முறையில் பராமரித்து செயல்பட வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர்கள் ஜெய தேவி, அண்ணக்கொடி,திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், காங்கேயம் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாலமுரளி கடந்த மே மாதம் 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார்.
    • ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.

    திருப்பூர்

    திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த பாலமுரளி கடந்த மே மாதம் 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார்.தற்போது அவர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.

    அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, கோவை, ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    • மாநில துணைத் தலைவராக ராயல் வி.தர்மதுரை இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்
    • ராயல் வி.தர்மதுரையுடன் இணைந்து உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர்

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வர்த்தகர் பிரிவு மாநில தலைவரும் எம்.பி.யுமான விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவின் மாநில துணைத் தலைவராக ராயல் வி.தர்மதுரை இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை சோனியா காந்தி இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தமிழகத்தின் பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி அமைந்திட அனைவரும் மாநிலத் துணைத் தலைவர் ராயல் வி.தர்மதுரையுடன் இணைந்து உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • சிறைத்துறை பயிற்சி முடித்துள்ள 7 துணை தாசில்தார்களுக்கு பணியிடம் அளிக்கப்பட்டுள்ளது.
    • கும்பகோணம் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை, சிறைத்துறை பயிற்சி முடிந்து வரும் துணை தாசில்தார்களுக்கு பணியிடம் வழங்கியும், நிர்வாக நலன் கருதி பொது மாறுதல் வழங்கியும் கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தர விட்டுள்ளார்.

    அதன்படி மாறுதல் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

    சிறைத்துறை பயிற்சி முடித்துள்ள 7 துணை தாசில்தார்களுக்கு பணியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பயிற்சி முடித்துள்ள துணை தாசில்தார் சீனிவாசன், தஞ்சை பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக தனித்துணை கலெக்டர் (வருவாய் நீதிமன்ற) அலுவலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணைதாசில்தார் மீனா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பா ளராகவும், துணைதாசில்தார் பிரான்சிஸ் ஒரத்தநாடு வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், துணைதாசில்தார் மதியழகன், கும்பகோணம் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    துணைதாசில்தார் சுரேஷ், பாபநாசம் வட்ட அலுவலக துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்ப ட்டுள்ளார்.

    துணைதாசில்தார் பைரோஜாபேகம், மாவட்ட கலெக்டர் அலுவலக எல்.ஆர்.பிரிவு தலைமை உதவியாளராகவும், துணைதாசில்தார் சரவணன், ஒரத்தநாடு வட்ட அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பேராவூரணி வட்ட அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் தமயந்தி, பாபநாசம் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தா ராகவும், திருவிடைமருதூர் வட்ட அலுவலக துணை தாசில்தார் (தேர்தல்) சரவணன், கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருவிடைமருதூர் வட்ட அலுவலராக தணை தாசில்தாராக (தேர்தல்), திருவிடைமருதூர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் ராஜ்குமாருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
    • முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா பிரான்செட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அவரது நியமனத்துக்கு சென்ட்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க ராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    தற்போது கடற்படையின் துணை தலைவராக உள்ள லிசா, பணியாளர்களின் தலைமையில் முதல் பெண் உறுப்பினர் ஆவார். கடல் மற்றும் கரையோர அனுபவத்தின் அடிப்படையில் லிசா பிரான்செட்டியை கடற்படை தளபதியாக அதிபர் ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு
    • 5 அறங்காவலர்கள் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கோவை,

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதற்காக பலர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்களை மாநிலகுழு ஆய்வுசெய்து, இதற்கான பரிந்துரை பட்டியலை இந்து சமய அறிநிலைய ஆணையருக்கு அனுப்பி வைத்து உள்ளது. அதன்படி வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்து மகேஷ்குமார், நஞ்சுண்டாபுரம் ஜெயக்குமார், சங்கனூர் பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், தொண்டாமுத்தூர் விராலியூரை சேர்ந்த சுகன்யா ராசரத்தினம் ஆகிய 5 பேர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பரம்பரை சாராத அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் அடுத்த 2 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்துள்ளனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக கிருஷ்ண குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக சிதம்பர பாரதி (ஆவியூர்), சேகர் (குரண்டி), ஜெகன் (செங்குன்றாபுரம்), அய்யனார் (அதிவீரன் பட்டி), கார்த்திகேயன் (விருதுநகர்), திலீபன் மஞ்சுநாத் (சிவகாசி ரிசர்வ் லைன்).

    தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளராக தனுஷ் எம்.குமார் எம்.பி. நியமனம் செய்யப் பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக தங்கம் ரவி கண்ணன் (ஸ்ரீவில்லி புத்தூர்), பாபு (அருப்புக் கோட்டை), பாசறை ஆனந்த் (ராஜபாளையம்), கார்த்திக் (ராஜபாளையம்), கே.கார்த்திக் (வெம்பக்கோட்டை).மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • களப்பணிக்கு செல்வின் பிரபாகரன், சமூக வலைதள பிரிவுக்கு புகழேந்தி, மகளிர் பிரிவுக்கு ஜெயலலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் தெற்கு மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக களப்பணிக்கு செல்வின் பிரபாகரன், சமூக வலைதள பிரிவுக்கு புகழேந்தி, மகளிர் பிரிவுக்கு ஜெயலலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, அருப்புக் கோட்டை நகரத்திற்கு விஜயராஜா, காட்வின் தன்மா, பவித்ரா ஆகியோ ரும், அருப்புக் கோட்டை தெற்கு ஒன்றியத்திற்கு அன்புராஜ், சரவணகுமார், சிந்துஜா, வடக்கு ஒன்றியத்திற்கு பிரவீன், பெரிய கருப்பசாமி, முருகேஸ்வரி, சாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு சோலைமுத்து, பிரவீன்குமார், வைஜெயந்தி, விருதுநகர் கிழக்கு ஒன்றியத்திற்கு கார்த்திக், மணிகண்டன், பானுப்பிரியா, ராஜபாளையம் தொகுதிக்கு பிரபாகரன், சதீஷ், லட்சுமி லக்ஷனா, ராஜபாளையம் நகரம் வடக்கு ஒன்றியத்துக்கு பிரபாகரன், முத்துராஜ், யோக சித்ரா, ராஜபாளையம் நகரம் தெற்கு ஒன்றியத்துக்கு பாலன், மருது பாண்டியன், கவிதா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்திற்கு லிங்கேஸ்வரன், ரூபன் மிசி ஷெல்டன், கற்புக்கரசி, ராஜபாளையம் செட்டியார் பட்டி பேரூராட்சிக்கு சாமுவேல் சகாயம், லெனின், விஜயலட்சுமி, சேத்தூர் பேரூராட்சிக்கு ஜெயசூர்யா, ராஜதுரை, சின்னதாய் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சாத்தூர் தொகுதிக்கு வீர சுப்பிரமணியன், ராகேஷ், செல்வி, சாத்தூர் நகரத்திற்கு முனீஸ்வரன், வினோத், பொன் செல்வி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு வெங்க டேசன், கருப்பசாமி, திவ்யா, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு கணேசன், ரங்கராஜ், ராஜ லட்சுமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றியத்திற்கு மருதுராஜ், முரளி, தமிழரசி, ராஜபா ளையம் கிழக்கு ஒன்றியத்துக்கு முத்துக்கு மாரசாமி, புதியராஜ் ஸ்டாலின், சந்தான சுந்தரி, சாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு ஹரிஹரன்.

    மதன்குமார், மகேஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு செந்தில்குமார், ஆனந்தகுமார், கலைஞர் சுதந்திர ராணி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்திற்கு அஜ்மல் கான், விக்னேஸ்வ ரன், காளீஸ்வரி, ஸ்ரீவில்லி புத்தூர் ஒன்றியத்துக்கு தன்ராஜ், சுந்தர்ராஜன், சீதாலட்சுமி, வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு வள்ளிநாயகம், வீர அழகு, இந்துஜா, மம்சாபுரம் பேரூராட்சிக்கு வல்லரசு, மாரிசெல்வம், சந்தான புஷ்பம், வ.புதுப்பட்டி பகுதிக்கு சஞ்சய் குமார், வில்லா ராஜா, விஜய லட்சுமி, வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு வீரக்குமார், விஜய பிரகாஷ், பஞ்சு, எஸ்.கொடிக்குளம் பகுதிக்கு மனோ சுந்தர், சாதிக் அலி, மகாலட்சுமி, சுந்தரபாண்டியம் பகுதிக்கு விக்னேஷ், நாகராஜ், முத்துலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் நியமனம் செய்யப்பட்டார்.
    • அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் நகராட்சி 31-வது வார்டு கவுன்சிலர் எம்.முகம்மது ஜஹாங்கீர். முதுகலை பட்டதாரியான இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் கூறிய தாவது:-

    தமிழக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநில ஹஜ் கமிட்டி உறுப்பி னராக என்னை நியமனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக் கும், நான் சார்ந்துள்ள தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி தொடர்பு டைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இதற்காக பரிந்துரைத்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக பதவி ஏற்றவு டன் மாநில அளவில் ஹஜ் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்துதர பாடு படுவேன். இந்தியாவில் முன்மாதிரியான திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், சிறுபான்மையினரின் நலனை பேண அவரது உரிமைகளை காக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    ஹஜ் பயணிகள் சிரமம் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள சலுகைகளை செய்து வருகிறார். மத்திய அரசு ஹஜ் மானியத்தை ரத்து செய்தாலும் நமது தமிழக அரசு மானியத்தை வழங்கி வருகிறது. இதனால் பல ஏழை முஸ்லிம்களின் ஹஜ் பயண கனவை தி.மு.க. அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது

    சிறுபான்மையினர் நலனுக்காக இன்னும் பல திட்டங்களை கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் அடையும் வகையில் மதசார்பற்ற சமூக நல்லிணக்கமான சமத்துவ ஆட்சியை அவர் தந்து கொண்டிருக்கிறார். அதேபோல் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்த 31-வது வார்டு மக்களின் கோரிக்ககைளையும் முழு வதுமாக நிறைவேற்ற நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் மற்றும் நகராட்சி பணியா ளர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

    குறுகிய காலத்திற்குள் ரேசன் கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்ற நகர்மன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன். எனது மக்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் என வார்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளை ஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருதுநகர் மாவட்ட புதிய பா.ஜ.க. நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரதீய ஜனதாவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் பால கணபதி, மாவட்ட பார்வையாளர் வெற்றி செல்வன் ஆகியோரின் ஒப்புதலின்படி விருதுநகர் மாவட்டத்தில் புதிய பா.ஜ.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    அதன்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட மாவட்ட துணைத்தலைவர்களாக ராஜ்குமார், ராமஜெயம், ராஜேஸ்வரி, சங்கரேஸ்வரி, குமரேசன், முருகன், மாவட்ட பொதுச் செயலாளர்களாக ராஜா, அழகர்சாமி, சீத்தாராமன், மாவட்டச் செயலாளர்களாக சத்தியபாலன், காளீஸ்வரி, கவுரி, முருகன், பால முருகன், சிவா, மாவட்ட பொருளாளராக புஷ்ப குமார் நியமிக்கப்பட்டுள்ள னர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×