என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "temple trustees"
- இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்
- பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள 88 திருக்கோவில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படாத கோவில்களுக்கு உறுப்பினர்களை நியமித்து விரைவில் நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால்தான் திருக்கோவில்களில் இருக்கக்கூடிய துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து குடமுழுக்கு நடைபெறாத திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கும் மற்றும் பராமரிக்கப்படாத திருக்கோவில்களை மேம்படுத்தும் பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும். நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில்களை நல்ல முறையில் பராமரித்து கோவில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கே வரக்கூடிய பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உரிய முறையில் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு அந்த கோவில்களிடம் ஒப்படைத்து அந்த கோவில்களுக்கு கூடுதலாக நிதிகளை பெற்று சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் இந்த நியமன ஆணைகளை பெற்றுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கோவில் நல்ல முறையில் பராமரித்து செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர்கள் ஜெய தேவி, அண்ணக்கொடி,திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், காங்கேயம் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சித்திரை பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது.
- சித்திரை திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் ஸ்ரீ வரபத்திர காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் சித்திரை பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேவஸ்தான பொறுப்பில் இருக்கும் தேங்காய்திட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த பூவராகவன் என்பவர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது: தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் வசிக்கும் விநாயகமுருகன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வாட்ஸ் அப் குருப் ஒன்றில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கோவிலின் சித்திரை பவுர்ணமி திருவிழாவில் அறங்காவலர் வாரியத்தினர் கலந்து கொண்டால் அவர்களை அடித்து விரட்டுவோம். போலீசார் வந்தாலும் அவர்களையும் தாக்குவோம் இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்திரை திருவிழாவிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்