search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்டம்"

    • மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
    • கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேநீர் விருந்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு கொடி நாள் நிதி வசூல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நாளில் தேசத்தின் குடிமக்களாகிய நாம் அனைவரும் முப்படை வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்விற்கு உதவும் வகையில் நிதியினை வாரி வழங்கும் நாள்.

    அடுத்த கொடிநாள் வரை முழு ஆண்டும் கொடிநாள் நலநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகை முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பலவேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக கொடிநாள் நிதி வசூல் புரிவதில் தமிழ்நாடு முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இது படைவீரர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் காட்டும் மதிப்பும் மரியாதையையும் அளவிடுகிறது.

    மேலும், கடந்த ஓராண்டில் முன்னாள் படைவீரர் , சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.

    இவ்விழாவில் ரூ.5,27,100 மதிப்பிலான, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    2021 கொடி நாள் ஆண்டில் அரசு இலக்கு ரூ.68,44,000. அதில் ரூ.1,59,53,500 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 233.10 சதவீதம் ஆகும். கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இலக்கு ரூ.72,29,000 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வசூல் தொகையினை விட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட மாவட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்வதுடன், பொது மக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.
    • தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.

    நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், சாமிநாதன், ஜி.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலை, இலக்கிய பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வ முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா.முருகன், சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, தி.மு.க. நிர்வாகிகள் முத்துகுபேரன், முருகன், ஜெ.கே.செந்தில், கோடங்குடி.சங்கர், மற்றும் பலர் பங்கேற்றனர்.

    முடிவில் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக்கூறினார்.

    • பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி தி.மு.க. கொடியேற்றி வைத்தார்.

    பின்பு, போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,

    அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், வழக்கறிஞர் அணி அன்பரசு, மாவட்ட மாணவரணி செந்தாமரை செல்வன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்றார்.

    தலைமை கழக பேச்சாளர்கள் இடி முழக்கம் இளமுருகன், தீப்பொறி ராமலிங்கம் ஆகியோர் கட்சியின் வரலாறு தொடர்பாக விளக்க உரையாற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்எல்ஏ பேசியபோது கூறியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்டிக் காத்து வருகிறார்.

    கட்சியின் பொன்விழா என்று நினைவாக இந்த கூட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    விரைவில் தமிழகத்தின் ஆட்சியைப் கைப்பற்றும். இவ்வாறு கூறினார்.

    நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்பு செயலாளர் சிவா.இராஜமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், திருவாரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட கழகப் பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ஆர்.பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யூ.மணிகண்டன், செந்தில் வேல், திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் கூரியர் மதி, திருவாரூர் மாவட்ட ஒன்றிய துணைத் உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொன்விழா என்று நினைவாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • பயணப்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.
    • வங்கி கணக்கு மூலம் காப்பீட்டு பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பயிற்சி வழங்கினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் முன்னிலையில், மத்திய அரசின் கோயம்புத்தூர் மத்திய தொழிலாளர் கல்வி மண்டல அலுவலக அலுவலர் எஸ். சேரன், வெள்ளகோவில் பகுதியில் உள்ள நலவாரிய உறுப்பினர்களுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களான பென்ஷன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு, வங்கி கணக்கு மூலம் காப்பீட்டு பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பயிற்சி வழங்கினார்.

    இந்த பயிற்சி இன்று 12ந்தேதி, நாளை மறுநாள் 14 ந்தேதி, மற்றும் 17ந்தேதி ஆகிய தேதிகளில் 4 வகுப்புகளாக நடைபெற உள்ளது.இந்த விழிப்புணர்வு பயிற்சியானது ஒவ்வொரு வகுப்பிலும் 25 உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை, பயணப்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வாசுதேவநல்லூர் மற்றும் குருவிகுளம் வட்டார வேளாண்மை துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி மாவட்டத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்ட நெல் 4663 ஹெக்டேர், சிறுதானியங்கள் 3001 ஹெக்டேர், பயறு வகைகள் 1338 ஹெக்டேர், பருத்தி 962 ஹெக்டேர், கரும்பு 1436 ஹெக்டேர், எண்ணெய் வித்து 1183ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.

    மழை அளவு நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் பாரத பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கும், திட்ட மானிய தொகை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் ஒரு பயனாளிக்கும் பவர்டிரில்லர் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 47,370 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பொறுப்பு கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண்மை துணை இயக்குனர்,வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கிருஷ்ணகுமார், உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்குதல்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திறந்து வைத்து மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்ததாவது-

    வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது உலக வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும்.

    திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி வட்டத்தில் 51 கிராம ஊராட்சிகளிலும், வலங்கைமான் வட்டத்தில் 50 கிராம ஊராட்சிகளிலும், நீடாமங்கலம் வட்டத்தில் 44 கிராம ஊராட்சிகளிலும், முத்துப்பேட்டை வட்டத்தில் 29 கிராம ஊராட்சிகளிலும் மொத்தம் 174 கிராம ஊராட்சிகளில் இத்திட்டமானது செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    முந்தைய திட்டங்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள், வளங்கள் மற்றும் திறன்களை கொண்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குடும்பங்களே இத்திட்டத்தின் முதன்மை இலக்கு ஆவர்.

    இத்திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்தி றனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    தொழில் முனைவோ ருக்கும் தொழில் நிறுவனங்க ளுக்கும் வணிக மேம்பாட்டு உதவி சேவைகளை வழங்கு வதற்காக திட்டத்தின் மூலம் "மகளிர் வாழ்வாதார சேவை மையம்" தொடங்கப்பட்டுள்ளது.

    இம்மையத்தின் மூலம் மகளிர், இளைஞர்கள், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்குதல், ஊரகப்பகுதிகளில் உள்ள புதிய மற்றும் பழைய தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவர்களது தொழில் வளர்ச்சிக்கு தேவையான வணிக மேம்பாட்டு சேவைகளை வழங்குதல், போன்ற பணிகள் மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் செயல்படுத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து 11 மகளிர் குழுவை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளும், 2 மகளிர் சுயவுதவி குழுவிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தொழில் முதலீட்டு கடனுதவியும், 10 தொழில் முனைவோர்களுக்கு சிறு, குறு தொழில் தொடங்குவதற்கான அங்கீகார சான்றிதழ் என மொத்தம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நீடாமங்கலம் ஒன்றிய சேர்மன் சோம.செந்தமிழ்செல்வன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல் அலுவலர் செல்வம், வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை அறிந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என பேசினார்.
    • திரளான பொதுமக்கள், மாணவ , மாணவிகள் அரங்குகளை பார்வையிட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் ''நியூ மாடல் கேம்ப்'' தொடக்க விழா நடந்தது.

    முகாமை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய்பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், இந்த முகாமில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் அரங்குகள் அமைத்து செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர் மூலம் செயல் விளக்கம் அளிப்பதுடன் கையேடுகளும் விநியோகிக்கப்படுகிறது .

    இதனை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    முகாமில் நீதித்துறை (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு), வருவாய்த் துறை , காவல் துறை (குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு), பொது சுகாதாரத் துறை, சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், மாவட்ட காசநோய் மையம், தொழுநோய் பிரிவு, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சைல்டு லைன் , மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளர் நலத்துறை, முதியோர் உதவி எண் 14567, நகராட்சி நிர்வாகத் துறை ஆகிய 18 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது .

    விழாவில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன் , போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்- சார்பு நீதிபதி பரமேசுவரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1. அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 சத்தியநாராயணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைசாமி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    திரளான பொதுமக்கள், மாணவ , மாணவிகள் அரங்குகளை பார்வை யிட்டனர்.

    • முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர்.
    • ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார் என்று ஆர்.பி.உதய குமார் கூறினார்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அ.தி.மு.க 50-வது ஆண்டு பொன்விழா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    நிகழ்ச்சிக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சுப்புலட்சுமி சந்திரன் தலைமை தாங்கினார். எட்டயபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.பின்னர் ராஜினாமா செய்தார்.

    அதன் பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். பின் தி.மு.கவுடன் இணைந்து சட்டமன்றத்தில் அ.தி.மு.கவிற்கு எதிராக வாக்களித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

    முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் போது ஓ.பி.எஸ். மவுன யுத்தம் நடத்தினார். இதனால் அ.தி.மு.க செல்வாக்கு 5 சதவீதம் சரிந்தது.

    மவுன யுத்தம்

    எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்க வில்லையோ அப்போது எல்லாம் ஒரு மவுன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார்.ஓ.பி.எஸ் மவுனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம் .

    சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர்.

    எப்போது எல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓ.பி.எஸ் உருவாக்குவார். அதற்காக போராடுவார், தர்மயுத்தத்தினை நடத்துவார்.அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர ஓ.பி.எஸ்க்கு வெற்றி தராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சிவபெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வேலுச்சாமி,ஊராட்சி குழு தலைவி சத்யா, மகளிர் அணி ரத்தினம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனி ராஜீ, அ.தி.மு.க புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, எட்டயபுரம் பேரூராட்சி கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, வார்டு செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கார்ட்டன் பிரபு, ஒன்றிய நகர, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை எழும்பூரில் உள்ள 'தி மெட்ராஸ் கிராண்ட்' ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.
    • இதில் சிறப்பு விருந்தினர்களாக பலர் கலந்துக் கொண்டனர்.

    சென்னையில் இருக்கும் ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்களின் கல்வி, உணவு, வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த டேக் கேர் இண்டர்நேஷ்னல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள 'தி மெட்ராஸ் கிராண்ட்' ஹோட்டலில் இன்று காலை நடைப்பெற்றது.

     

    இந்நிகழ்ச்சிக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான செளந்தர் ராஜா, லிட்டில் ஃபிளவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான் சேவியர் தங்கராஜ், நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சுந்தரபாண்டி, இந்திய தொழில்துறை தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டி செந்தமிழன், சுதா ஃபவுண்டர் நிஷா தொட்டா, சாண்ட்விச் ஸ்கொயர் நிறுவனர் தன்வீர், போஸ் க்ளாத்திங் ஃபவுண்டர் உஸ்மான், வாசன் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் இயக்குனர் வேனுகோபால் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

    • ராகுல் காந்தி தனது மூன்று நாள் கேரள பயணத்தின் கடைசி நாளான இன்று இரவு டெல்லி திரும்புகிறார்.
    • மலப்புரம் வண்டூர் பகுதியில் இருந்து பல அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ், சாலை அமைக்கும் தொடக்க விழா நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி பங்கேற்றார். மலப்புரம் வண்டூர் பகுதியில் இருந்து பல அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (பிஎம்ஜிஎஸ்ஒய்) திட்டத்தின் கீழ் ஒவ்வொறு மாநிலத்தின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் என்றும் அதை மறுபரிசீலனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அவர்கள் அதை சாதகமாக பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், கிளமோரா மாநாட்டு மையத்தில் சம்ஸ்காரிகா சாஹிதியால் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, உதவியைப் பெறத் தகுதியுள்ள ஒரு பெண் அவளுடைய மாறுபட்ட சித்தாந்தத்தின் காரணமாக அசாங்கம் வீடு வழங்கவில்லை. அந்த பெண் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்பதுதான் அதற்கு காரணம். அதனால் நாங்கள் அவருக்கு உதவி செய்தோம் என்றார்.

    ராகுல் காந்தி தனது மூன்று நாள் கேரள பயணத்தின் கடைசி நாளான இன்று இரவு டெல்லி திரும்புவதற்கு முன் மலப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    • மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க மின்னகம் சேவை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
    • ஏராளமான சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிறார். அந்த வகையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர் கார் மூலம் கரூருக்கு வருகை தந்தார். பின்னர், 80,755 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர் பொது மக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பேசாமல் அப்படியே கொஞ்ச நேரம் நின்று கொண்டு உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் கடல் அலையை இங்கே நான் பார்க்கிறேன்.

    கடல் இல்லாத இந்த கரூருக்கு, மக்கள் கடலையே உருவாக்கி இருக்கிறார் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி. இங்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்திற்குள்ளே நுழைந்ததில் இருந்தே நான் பார்க்கிறேன், பார்க்கும் இடமெல்லாம் மக்கள்! நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.

    மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க மின்னகம் சேவை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 316 துணை மின் நிலையங்கள் ஆகிய மாபெரும் சாதனைகளைச் செய்து அந்த துறையை மீட்டெடுத்து வருகிறார்.

    அதே நேரத்தில், கரூர் மாவட்டத்தை மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்று அந்த மாவட்டத்தையும் சேர்த்துக் கவனித்து, எங்கும் எந்தத் தொய்வும் இல்லாமல் அவர் செயல்பட்டு வருகிறார். இத்தகைய ஆற்றலை அனைவரும் பெற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துக் கொண்டு வருகிறார்.

    அந்த வரிசையில்தான், 80 ஆயிரத்து 755 பேருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கும் விழா, 28 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 95 பணிகளை திறந்து வைக்கும் விழா, 582 கோடி ரூபாய் மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா என சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான விழாவாக இது அமைந்திருக்கிறது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 26 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 பணிகளுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 பணிகளும், பேரூராட்சித்துறையின் சார்பில் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கும், கலை பண்பாட்டுத் துறை சார்பில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பணிக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 387 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 பணிகளுக்கும், மாநகராட்சித் துறை சார்பில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 பணிகளுக்கும், நீர்வளத்துறை சார்பில் 91 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 பணிகளுக்கும் என மொத்தம் 582 கோடி ரூபாய் மதிப்பிலான 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் விரைவில் உறுதியாக நான் வந்து திறக்கப் போகிறேன். விரைவாக, அந்த உறுதியை நான் முன் கூட்டியே வழங்க விரும்புகிறேன்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 திட்டப்பணிகளும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் ஒரு பணியும், நில அளவைப் பதிவேடுகள் துறை சார்பில் 3 திட்டப்பணிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைசார்பில் 33 திட்டப்பணிகளும், கூட்டுறவுத் துறை சார்பில் 14 திட்டப்பணிகளும், பொதுப்பணித்துறை சார்பில் 9 திட்டப்பணிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2 திட்டப்பணிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (சத்துணவு) சார்பில், 6 திட்டப்பணிகளும், நபார்டு மற்றும் கிராம சாலைகள் சார்பில் 3 திட்டப்பணிகளும், நீர்வளத்துறை சார்பில் 19 திட்டப்பணிகளும் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு என்னவென்று கேட்டால் 28 கோடி ரூபாய்.

    ஏராளமான சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

    உணவு தானியக் கிடங்குகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் துணை சுகாதார நிலையக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கிறது.

    இவை அனைத்தையும் நான் இங்கே ஊர் வாரியாக சொல்லத் தொடங்கினால், நேரம் அதிகமாகும். அதனால், ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு ஊருக்கும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது. புதிதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டும் இருக்கிறது.

    இந்த ஓராண்டு காலத்தில் ஓய்வில்லாமல் மக்கள் பணியை ஆற்றி வருகிறோம் என்பதற்கு இந்த கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகளே சாட்சியாக அமைந்திருக்கிறது.

    துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் காலம், முதல் ஆறு மாத காலம். அடுத்த ஆறு மாத காலம் என்பது திட்டமிடும் காலமாக அது அமையும். இரண்டாவது ஆண்டுதான் செயல்படுத்தத் தொடங்கும் காலமாக அமையும். ஆனால் ஆட்சிக்கு வந்த நொடியில் இருந்து செயல்படுத்தும் காலமாகத் தொடங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.

    உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி. ஏனென்றால் தலைவர் கலைஞர் அவர்கள் என்னுள் இருந்து என்னை இயக்கிக் கொண்டு இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தால், என்ன நினைப்பார், என்ன சிந்திப்பார், எப்படிச் செயல்படுத்துவார் என்று நித்தமும் சிந்தித்து, நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

    மக்கள் கையில் கொடுத்துள்ளோம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள காலமாக இந்த ஓராண்டு காலம் அமைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கரூர் மாவட்டத்திற்கென்று அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை, அனைத்தையும் அல்ல, பலவற்றை, இந்த ஓராண்டிலேயே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

    இந்த ஓராண்டு காலத்தில் இந்த கரூர் மாவட்டத்திற்கு செய்திருக்கக்கூடிய சாதனைகள் மட்டுமல்ல, இதேபோல் மற்ற மாவட்டங்களுக்குச் செய்திருக்கக்கூடிய சாதனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் பார்க்கும்போது நான் மனநிறைவை அடைகிறேன்.

    இந்த ஓராண்டு காலமானது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஒவ்வொருவருக்கும் அவரது மனச்சாட்சிதான் நீதிபதி என்று சொல்லுவார்கள். அந்த வகையில் எனது மனசாட்சி அளிக்கும் தீர்ப்பு இது!

    இதுதான் மக்களுடைய மனங்களிலும் இருக்கிறது என்பதன் அடையாளம் தான் உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி. நான் செல்கின்ற இடமெல்லாம் மக்கள் அலையலையாக வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அந்த மக்களின் முகங்களில் நான் மலர்ச்சியைப் பார்க்கிறேன், மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்.

    'உன்னுடைய ஆட்சிக் காலத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்று அவர்கள் முகங்கள் சொல்கின்றது.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இந்த முகங்களின் மூலமாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை என்பதை தெளிவாக அறிய முடிகிறது. அதனால்தான் நான் வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. அதற்கு நேரமில்லை.

    "மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அடிக்கடி சொல்வார். அப்படி மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தைப் பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

    தி.மு.க. ஆட்சியானது எப்படிச் செயல்படுகிறது என்பதை இதுபோன்ற மனிதர்கள் முன்னால் மைக்கை நீட்டாமல், தமிழ்நாட்டு மக்கள் முன்னால் மைக்கை நீட்டித் தெரிந்துகொள்ளுங்கள், யாருக்கு சொல்கிறேன், இதோ இங்கே இருக்கக்கூடிய ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன். யார் யாரிடமோ மைக்கை நீட்டுகிறீர்களே, மக்களிடம் சென்று மைக்கை நீட்டிப் பாருங்கள். மிகவும் உரிமையோடு உங்களிடத்தில் கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×