search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்-அமைச்சர் பேச்சு
    X

    நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்-அமைச்சர் பேச்சு

    • அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்றார்.

    தலைமை கழக பேச்சாளர்கள் இடி முழக்கம் இளமுருகன், தீப்பொறி ராமலிங்கம் ஆகியோர் கட்சியின் வரலாறு தொடர்பாக விளக்க உரையாற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்எல்ஏ பேசியபோது கூறியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்டிக் காத்து வருகிறார்.

    கட்சியின் பொன்விழா என்று நினைவாக இந்த கூட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    விரைவில் தமிழகத்தின் ஆட்சியைப் கைப்பற்றும். இவ்வாறு கூறினார்.

    நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்பு செயலாளர் சிவா.இராஜமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், திருவாரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட கழகப் பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ஆர்.பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யூ.மணிகண்டன், செந்தில் வேல், திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் கூரியர் மதி, திருவாரூர் மாவட்ட ஒன்றிய துணைத் உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொன்விழா என்று நினைவாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×