search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பறக்கும் படை"

    • பொதுமக்களின் புகாரை யாரும் அலட்சியப்படுத்த கூடாது.
    • அரசியல் கட்சியினரின் வாகனங்கள் அனைத்தையும் கண்டிப்பாக சோதனையிட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகளும், தோழமை கட்சியினரும் உடன் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்று உள்ளன.

    இதனால் பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

     இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி, கலால் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாநில செலவினப் பார்வையாளர்களும் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் இதுவரை 109 கோடிக்கு மேல் பணம், நகை, பொருட்கள் பிடிபட்டு உள்ள நிலையில் பணப்பட்டு வாடாவை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பறக்கும் படையினர் ஒரே இடத்தில் நின்று சோதனையில் ஈடுபடாமல் பல பகுதிகளுக்கும் சென்று சோதனையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    சிவிஜில் செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து 1822 புகார்கள் வந்துள்ளதால் அவ்வாறு பெறப்படும் புகாரின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

    பொதுமக்களின் புகாரை யாரும் அலட்சியப்படுத்த கூடாது. இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்று சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அரசியல் கட்சியினரின் வாகனங்கள் அனைத்தையும் கண்டிப்பாக சோதனையிட வேண்டும். எந்த வாகனமும் அதில் விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார்.

    இதனால் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையும் தீவிரம் அடைந்துள்ளது.

    • பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    திருவாரூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வரும் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதனை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், கீரனூர் சோதனை சாவடியில் தலைமை காவலர் கிறிஸ்துராஜ், புஷ்பா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் பஸ்சில் பயணம் செய்த ஒருவரின் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவரை விசாரித்த போது, மன்னார்குடியை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 40) என்பது தெரியவந்தது.

    ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக சோதனை சாவடியில் இருந்த போலீசார் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரேசன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.12.85 லட்சம் ஆகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசு பஸ்சில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சித்தளம்பட்டு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தயாநிதி மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தளம்பட்டு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தயாநிதி மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பறிமுதல் சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 2 லட்சத்து 68 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில் காரில் வந்தவர் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் என்பது தெரியவந்தது, பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.

    • தேர்தல் நேரத்தில் நபர் ஒருவருக்கு 3 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்றாக உள்ளது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 16-ந்தேதியில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன? என்பது பற்றிய கணக்கையும் கேட்டுப்பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தேர்தல் நேரத்தில் அரங்கேறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு அளவுக்கு அதிகமான மதுபோதையே காரணம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டு உள்ளது.

    தேர்தல் நேரத்தில் நபர் ஒருவருக்கு 3 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்றாக உள்ளது. அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கி விட்டு வெளியே செல்பவர்கள் எத்தனை மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்? விதிகளை மீறி அவர்களுக்கு மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி பறக்கும் படையினர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகளின் போது டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில் இருப்பை கணக்கிடும் அதிகாரிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 16-ந்தேதியில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன? என்பது பற்றிய கணக்கையும் கேட்டுப்பெற்றுள்ளனர்.

    கடந்த 2 வாரங்களில் விற்பனையான மதுபாட்டில்களின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டு பார்த்து கூடுதலாக மொத்தமாக மதுவிற்பனை நடைபெற்று உள்ளதா? என்கிற விசாரணையிலும் இறங்கி உள்ளனர்.

    டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக நடைபெறும் மது விற்பனையை விட 30 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மதுவிற்பனை நடைபெற்றிருப்பதால் அதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகள் கேள்வி எழுப்புவது இல்லை. அதே நேரத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக மதுவிற்பனை நடந்திருந்தால் அதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் விசாரித்து வருகிறார்கள்.

    அதே நேரத்தில் சென்னையில் பல இடங்களில் இந்தத் தேர்தல் விதிமுறைகளை மீறி டாஸ்மாக் கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் மொத்தமாக வாங்கி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுபோன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    • கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தெற்கு குருவி குளம் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.73 ஆயிரத்து 700 இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் பொரிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர்.

    ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி தாசில்தார் சரவணப் பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் ரூ.60 ஆயிரத்து 400 இருப்பது தெரியவந்தது. எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகளை விற்ற பணம் என்று வாகனத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்.

    இருந்தபோதிலும் உரிய ஆவணம் இல்லாததால் தொடர்ந்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி தாசில்தார் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.

    • ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார்.
    • குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    ஸ்ரீவைகுண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் அம்மாள்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து வருவதாக ஏரல் தாசில்தாருக்கு புகார் சென்றது.

    அதன் அடிப்படையில் ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று பார்த்தபோது அம்மாள் தோப்பு பகுதியில் உள்ள ஒரு குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தியபோது வெள்ள நிவாரண பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறினர். எனினும் இதுதொடர்பாக இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    தொடர்ந்து அந்த குடோனுக்கு பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சீல் வைத்து ஆவணங்களை ஏரல் தாசில்தார் கோபாலிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது அவர் அடிக்கும் காமெடி கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.

    மன்சூர் அலிகான் என்றாலே மக்கள் தானாக சிரிக்கும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன. நேற்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக மன்சூர் அலிகான் காரில் சென்றார்.

    மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த மன்சூர் அலிகான் காரை வழிமடக்கி சோதனையிட்டனர்.

    காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் முகத்துக்கு போட்டுக் கொள்ளும் பவுடர் தான் இருக்கிறது.. பூசி கொள்கிறீர்களா... என அதிகாரிகளை பார்த்து கேட்டார்.

    அதனை கேட்டதும் சிரித்துக்கொண்டே அதிகாரிகள் அவரது காரை விடுவித்தனர்.

    • மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்த்திட வேண்டும்.

    சிவகங்கை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இதுவரை மட்டும் மாவட்டத்தில் ரூ.24½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, சிவகங்கை மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால், நேற்று (26.03.2024) வரை ரொக்கம் ரூ.24 லட்சத்து 47ஆயிரத்து 900 உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாக கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு தொடர்புடைய கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டி.எச்.ரோடு டோல்கேட் மெட்ரோ அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சுரேசிடம் இருந்த ரூ.6 லட்சம் 38 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும்படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. புதுவண்ணாரப்பேட்டை டி.எச்.ரோடு டோல்கேட் மெட்ரோ அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது கட்டுகட்டாக ரூ.6 லட்சம் 38 ஆயிரம் பணம் இருந்தது. விசாரணையில் அவர், திருவொற்றியூர் தேரடி துலுக்கானம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்பதும் தனியார் வங்கியில் ஏஜெண்டாக பணியாற்றும் அவர் லோன் கட்ட வேண்டிய நபர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து சுரேசிடம் இருந்த ரூ.6 லட்சம் 38 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் டோல்கேட் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் சோதனையில் ஈடுபட்டபோது ஏழுகிணறு சீனிவாசஐயர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் இருந்து ரூ.78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பயணிகள் போர்வையில் ரெயில்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் குழுவினர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்- பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பயணிகள் போர்வையில் ரெயில்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் அந்த குழுவினர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபாளையம் கணபதி நகரில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், அவ்வழியாக வந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது, வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று வரை ரூ.37 லட்சத்து 14 ஆயிரத்து 797-ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.43 லட்சத்து 84 ஆயிரத்து 490-ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 170-ம், பெருந்துறை தொகுதியில் ரூ.15 லட்சத்து 79 ஆயிரத்து 480-ம், பவானி தொகுதியில் 7 லட்சத்து ஆயிரத்து 650-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 950-ம், கோபி தொகுதியில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.49 லட்சத்து 6 ஆயிரத்து 238-ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 16 ஆயிரத்து 740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 825 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • கண்டமனூர் ராமச்சந்திராபுரத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
    • சிரப்பாறையைச் சேர்ந்த பலசரக்கு வியாபாரி சுருளிராஜ் என்பவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ரூ.98,450 பணத்தை கொண்டு சென்றார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் ராமச்சந்திராபுரத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது கண்டமனூரைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 55) என்பவர் காரை மறித்து சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.80 ஆயிரம் பணம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.

    தான் ஏலக்காய் எஸ்டேட்டில் வேலை பார்த்து வருவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தும் அதிகாரிகள் கேட்காமல் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சிரப்பாறையைச் சேர்ந்த பலசரக்கு வியாபாரி சுருளிராஜ் என்பவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ரூ.98,450 பணத்தை கொண்டு சென்றார். அவரது வாகனத்தையும் மறித்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதன் பின்பு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,78,450 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    ×