search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதுவண்ணாரப்பேட்டையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்
    X

    புதுவண்ணாரப்பேட்டையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்

    • டி.எச்.ரோடு டோல்கேட் மெட்ரோ அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சுரேசிடம் இருந்த ரூ.6 லட்சம் 38 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும்படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. புதுவண்ணாரப்பேட்டை டி.எச்.ரோடு டோல்கேட் மெட்ரோ அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது கட்டுகட்டாக ரூ.6 லட்சம் 38 ஆயிரம் பணம் இருந்தது. விசாரணையில் அவர், திருவொற்றியூர் தேரடி துலுக்கானம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்பதும் தனியார் வங்கியில் ஏஜெண்டாக பணியாற்றும் அவர் லோன் கட்ட வேண்டிய நபர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து சுரேசிடம் இருந்த ரூ.6 லட்சம் 38 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் டோல்கேட் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் சோதனையில் ஈடுபட்டபோது ஏழுகிணறு சீனிவாசஐயர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் இருந்து ரூ.78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×