search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏரலில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வைத்திருந்த குடோனுக்கு சீல் வைப்பு
    X

    பரிசு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தபோது எடுத்த படம்.

    ஏரலில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வைத்திருந்த குடோனுக்கு "சீல்" வைப்பு

    • ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார்.
    • குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    ஸ்ரீவைகுண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் அம்மாள்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து வருவதாக ஏரல் தாசில்தாருக்கு புகார் சென்றது.

    அதன் அடிப்படையில் ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று பார்த்தபோது அம்மாள் தோப்பு பகுதியில் உள்ள ஒரு குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தியபோது வெள்ள நிவாரண பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறினர். எனினும் இதுதொடர்பாக இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    தொடர்ந்து அந்த குடோனுக்கு பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சீல் வைத்து ஆவணங்களை ஏரல் தாசில்தார் கோபாலிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×