search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் தொகுதி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.
    • விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.

    தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.

    கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது.

    மேலும், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.
    • குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு இன்று (ஏப்ரல் 17) மாலையுடன் ஓய்ந்தது. நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.

    தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

     


    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
    • குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
    • சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் இன்று கடைசிநாள் பிரசாரத்துக்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    ஆள்பலம், பணபலம் இல்லாமல் தேர்தலில் நான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். 1980-ல் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனாப் அப்துல்சமது சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.

    அதே பள்ளப்பட்டி தான் எனக்கு சொந்த ஊர். அங்கு தான் நான் படித்து வளர்ந்தேன். மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவினை கொடுத்து வருகிறார்கள். எனவே நான் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன். பாரதிய ஜனதாவிடம் பணம் வாங்கி கொண்டு வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தலில் நிற்கிறேன் என வதந்தி பரப்புகிறார்கள்.

    ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள். பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக உள்ளனர். அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    வேலூர்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

    எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.


    இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தொகுதி முழுவதும் மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    வேலூர்:

    பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளரை தாக்கிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பைக்கில் மன்சூர்அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
    • அ.தி.மு.க. கட்சியை தவறாக பேசிய மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பசுபதி நேற்று குருவராஜபாளையம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

    அப்போது, வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் வேப்பங்குப்பம் நோக்கி வந்தார்.

    அப்போது குருவராஜபாளையத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதியை பார்த்து மன்சூர்அலிகான், 'வணக்கம் பசுபதிசார் அவர்களே' தோற்று போக போகும் நீங்கள் வாக்கு சேகரித்துக் கொண்டு இருக்குறீர்களே, நீங்கள் தோற்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்'. அம்மாவை கொன்று விட்டு ஓட்டு கேட்க வந்துட்டீங்களே பாவிகளா? எனக் கூறிவிட்டு பிரசார வேனில் நின்றபடி வேகமாக சென்றார்.


    இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பைக்கில் மன்சூர்அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.

    அதற்குள் அவர் வேப்பங்குப்பத்தில் உள்ள பள்ளிவாசல் உள்ளே தொழுகை செய்வதற்காக சென்று விட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பள்ளிவாசல் முன் நின்று அ.தி.மு.க. கட்சியை தவறாக பேசிய மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.


    மேலும் மன்சூர்அலி கானை வெளியே வரச் சொல்லுங்கள், அடிக்காமல் விட மாட்டோம். எங்கள் ஊருக்கு வந்து இந்த மாதிரி பேசுகிறார். அவரை அடிக்கிற அடியில் சென்னைக்கு ஓடி விடுவார் என மிரட்டல் விடுக்கும் பாணியில் கூச்சலிட்டு கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இரு தரப்பினரையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது அவர் அடிக்கும் காமெடி கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.

    மன்சூர் அலிகான் என்றாலே மக்கள் தானாக சிரிக்கும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன. நேற்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக மன்சூர் அலிகான் காரில் சென்றார்.

    மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த மன்சூர் அலிகான் காரை வழிமடக்கி சோதனையிட்டனர்.

    காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் முகத்துக்கு போட்டுக் கொள்ளும் பவுடர் தான் இருக்கிறது.. பூசி கொள்கிறீர்களா... என அதிகாரிகளை பார்த்து கேட்டார்.

    அதனை கேட்டதும் சிரித்துக்கொண்டே அதிகாரிகள் அவரது காரை விடுவித்தனர்.

    • வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இதையடுத்து வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், என்ன எல்லாம் பளபளப்பாக வந்து இருக்கீங்க? 1000 ரூபாய் தான் காரணமா? என பேசுவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.

    ஆனால் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், என்ன பளபளப்பாக வந்து இருக்கீங்க ? என கதிர் ஆனந்த் கேட்க, அங்கிருந்த மக்கள் 1000 ரூபாய் தான் என சொல்ல... அதற்கு கதிர் 1000 ரூபாய் தான் காரணம் என பதில் பேசுகிறார். மேலும், "தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என கதிர் ஆனந்த் கூறினார். இதனால் அங்குள்ள மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்...

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    • மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கான பரிசீலனை இன்று நடந்தது.

    தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    பின்னர் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை முடிந்து மன்சூர் அலிகான் வெளியே வந்தார்.

    தமிழகத்தில் முதல் நாளில் நான்தான் மனுத்தாக்கல் செய்தேன். எனக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் வருகிற 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம்.

    அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும். நான் எந்த கட்சிகளையும் வேறுபாடு பார்க்க மாட்டேன். அனைவரையும் தாக்கி பேசுவேன் என்றார்.

    முன்னதாக வேட்பு மனு பரிசீலனைக்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் மன்சூர் அலிகான் சென்றார்.

    எதிரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதியில் நீங்கள் (தி.மு.க) தான் வெற்றி பெறுவீர்கள். ஆனால் வேலூர் தொகுதியில் மட்டும் நான் வெற்றி பெறுவேன் என்றார். அதற்கு கதிர் ஆனந்த் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்துவிட்டு சென்றார்.

    • 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார் கதிர் ஆனந்த்.
    • வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது.

    அதில் முக்கியமானவர் கதிர் ஆனந்த்... அமைச்சர் துரைமுருகன் மகனான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.

    கதிர் ஆனந்த் கட்சி பணி மற்றும் மக்கள் பணி இரண்டிலும் சிறப்பான வகையில் செயல்பட்டதாலேயே மீண்டும் ஒருமுறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது.

    அதன்படி அவரின் முக்கிய செயல்பாடு என எடுத்துக் கொண்டால், எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது, வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது போன்றவை மிக முக்கியமானவையாகும். வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது என கூறினால் அது மிகையாகாது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்திருக்கிறார்.

    இதனாலேயே அவரை மீண்டும் வேட்பாளராக கட்சி தலைமை தேர்வு செய்ய வைத்துள்ளது.

    ×