search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: இதுவரை ரூ.1.84 கோடி பறிமுதல்
    X

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: இதுவரை ரூ.1.84 கோடி பறிமுதல்

    • வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபாளையம் கணபதி நகரில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், அவ்வழியாக வந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது, வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று வரை ரூ.37 லட்சத்து 14 ஆயிரத்து 797-ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.43 லட்சத்து 84 ஆயிரத்து 490-ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 170-ம், பெருந்துறை தொகுதியில் ரூ.15 லட்சத்து 79 ஆயிரத்து 480-ம், பவானி தொகுதியில் 7 லட்சத்து ஆயிரத்து 650-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 950-ம், கோபி தொகுதியில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.49 லட்சத்து 6 ஆயிரத்து 238-ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 16 ஆயிரத்து 740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 825 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×