search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டு பிரசுரம்"

    • பேரணி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வேம்பு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா முன்னிலை வகித்தார்.

    பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.

    இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தானம்,ஆசிரியர்கள் அகல்யா, பொற்கொடி, கீதா,வளர்மதி ஆகியோர் திட்டச்சேரி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள், கட்ட மைப்புகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

    • தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது.
    • தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    காங்கயம் :

    தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் அரசு மருத்துவமனை, காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட நகரின் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    துண்டுபிரசுரத்தில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது, சமை–யல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது, சமையல் முடிநதவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். கியாசை பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடிவிட வேண்டும்.

    வீட்டினுள் கியாஸ் கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுககளை பயன்படுத்தக்கூடாது. செல்போன் உபயோகிக்கக்கூடாது. சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணியவேண்டும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகைபிடிக்கக்கூடாது. மக்கள் கூடி உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளி மைதானத்தில் வெடிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருண்டும், போர்வையால் மூடி தீயை அணைக்கவும். தீ புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றவும். பேனா மை, எண்ணெய் போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது. புகை சூழ்ந்து உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்ப நிலையில் அணைக்க தீத்தடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும். உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

    இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்ககளை வினியோகித்தனர்.மேலும் இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் நடத்தப்படும் என காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

    • மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
    • அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்தார் .

    நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவு க்கரசு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர்ரா மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இப்பிரச்சார வாகனம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க ப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்து கிறது. மேலும் பொது மக்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவ ர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிர சுரங்கள் வழங்கப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    • தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு
    • தீ விபத்து தொடர்பாக உடன் தகவல் அளிக்க வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம், காவலூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிக ளிலும், கிராம பகுதியிலும் அடிக்கடி தீ விபத்து நடைபெறு கின்றது. காட்டுப்பகுதிகளில் மர்ம கும்பல் தீவைப்பு சம்ப வங்களும் நடைபெறுகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு ஆலங்காயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மேகநாதன் தலைமையில் ஆலங்காயம் பஸ் நிலையம், மார்க்கெட் வீதி, மலைரோடு உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    அப்போது தீ விபத்து தொடர்பாக உடன் தகவல் அளிக்கவும் பொது மக்களிடம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    • விரைவில் தீர்வு வேண்டுமா சமரச மையத்திற்கு வாருங்கள்.
    • வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சமரச நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்தப் பேரணியில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விரைவில் தீர்வு வேண்டுமா சமரச மையத்திற்கு வாருங்கள், என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை எழுதியபடி பேரணியாக சென்றனர். பேரணியானது ஐ.டி.ஐ மைதானத்தில் முடிவடைந்தது.

    முன்னதாக சமரச மையத்தில் நேரடியாக சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது குறித்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்திற்கு அனுப்புவது தொடர்பாகவும் இதன் மூலம் உகந்த தீர்வுகளை எட்டுவது குறித்தும் சமரச மையத்தால் நேரடி பேச்சு வார்த்தைகளில் மனித உறவுகளையும் சமூக உறவுகளையும் மேம்படுத்துவது குறித்தும் சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட தலைவர் இந்திராணி, ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜீவக்குமார், வழக்கறிஞரும் மீடியேட்டருமான ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சமரச மையத்தின் நோடல் ஆபிசர் ஆரோக்கிய ராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுறுத்திலின் பேரில்  மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வாகன சோதனைகள், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் முதுநகரில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் குற்ற பிரிவு சப் -இன்ஸ்பெக்டர்கள் ரகுராமன், ரவி மற்றும் போலீசார் வெளியூருக்கு செல்லும் மக்கள் பாதுகாப்பாக வீடுகளை பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோடை காலம் என்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும் படியாக யாரையாவது பார்த்தால் வாகன பதிவு எண்களை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு கடை மற்றும் அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க செல்லும் போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் குறியீடு எண்களை தெரிவிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வாகனங்கள் மூலமும் முக்கிய சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மணிக்கூண்டு முன்பு நடந்தது.
    • கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை, கடையநல்லூர் நகர தேர்தல் பொறுப்பாளர்கள் இஞ்சி இஸ்மாயில், அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கடையநல்லூர் முன்னாள் நகர செயலாளர் முகமது அலி, நகர்மன்ற உறுப்பினர் முருகன், தி.மு.க. மாநில பேச்சாளர் இஸ்மாயில், உதயசூரியன் படிப்பக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர், பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.
    • சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள மோகூர் விநாயகா பப்ளிக் பள்ளி, மதுக்கூர் ரோட்டரி சங்கம், காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியை மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் மதுக்கூர் ரோட்டரி சங்க தலைவர் தவசு மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுக்கூர் போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    இதற்கு விநாயக பப்ளிக் பள்ளியின் தலைவர் ராமலிங்கம், தாளாளர் அய்யநாதன், முதல்வர் ஜான்பால், துணை முதல்வர் பொன். கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை அடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இதில் மதுக்கூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், காவல் துறையினர், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், மதுக்கூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • முக்கிய வீதிகள் வழியாக சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது.
    • பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், மாவட்ட கலால் துறை அலுவலர் ஹரிதரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரஜினி, பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி, உதவி பேராசிரியர்கள் பிரவினா, பிரகாஷ், பேரணி ஒருங்கிணைப்பாளரும், அரிமா மாவட்ட தலைவருமான சக்திவீரன் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி முக்கிய வீதிகள் வழியே சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

    போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
    • ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி இல்லாத மாவட்டமாக விளங்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, கவின்மிகு தஞ்சை இயக்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டியை நடத்தியது.

    புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் தளத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆணையர் சரவணகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் குணசேகரன், ரவிக்குமார், கவின்மிகு தஞ்சை இயக்கம் டாக்டர் ராதிகா மைக்கேல், இந்தியா ரெட் கிராஸ் துணைத் தலைவர் பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்து கூறினார்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் மற்றும் ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரியில் இறுதிஆண்டு படிக்கும் மாணவிகள் இணைந்து நடத்திய இயற்கை முறையில் வேளாண் சாகுபடி செய்வது மற்றும் சிறு தானியங்கள் உபயோகம் மற்றும் உற்பத்தி செயவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    விவேகானந்தா தொண்டு நிறுவனச் செயலாளர் தங்க.கண்ணதாசன் வழிகாட்டுதலுடன் கோவில் தேவாராயன்பேட்டை, அன்னுகுடி கிராமங்களில் நடைபெற்றது.

    இதில் ஆர்விஎஸ் கல்லூரி மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் களப்பணியாளர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும், அவற்றின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    மேலும் சிறுதானியங்கள் ஏன் பயிரிட வேண்டும், அவற்றின் தொழில் நுட்பங்கள், சரி விகித உணவு வகைகள், சிறுதானியங்கள் சந்தை வாய்ப்புகள் பற்றி கிராமப்புற பெண்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் வேளாண் கல்லூரி முன்னோடி மாணவி ஜனோ அபிஷா தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள், விவேகானந்தா சமூக கல்வி சங்கத் தலைவர் தேவராஜன், சங்க உறுப்பினர் சிவக்குமார் களப்பணியாளர் புனிதவள்ளி மற்றும் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்.
    • ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பினர்.

    தொடர்ந்து எச்சரித்து அனுப்பியும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

    பள்ளி குழந்தைகளுடன் வந்த பெற்றோரை நிறுத்தி, அவர்கள் குழந்தைகளிடம், உங்கள் அப்பாவிற்கு ஹெல்மெட் அணியாததால் நாங்கள் போடும் ரூ.1000 அபராத தொகை தேவையா என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் உங்களால் தாங்க முடியுமா? என்று கேட்டு இனி வரும் நாட்களில் உங்கள் அப்பா ஹெல்மெட் அணிந்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி அனுப்பினர்.

    ×