search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டம்"

    • பனை விதைகள் சேகரிக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
    • இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள 38 ஊராட்சிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தை பாலம் தொண்டு நிறுவனம் முன்னெடுப்பில் டெல்டா பனை மர பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்துகிறது.

    இத்திட்டத்தை கடந்த வாரம் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதுவரை 22 ஆயிரத்து 640 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இப்பணியில் சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள் ஈடுபட்டு வருகிறனர்.

    தொடர்ந்து பனைவிதை சேகரிப்பும், நடவு பணியும் நடைபெற்று வருகிறது.இதில் பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தனியாக சென்று இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
    • குன்னூர் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி கூடுதல் பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யாமல் உள்ளதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை விரிவாக்கம் செய்ய தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    குன்னூரில் ரூ.13 கோடியில் ஹைட்ராலிக் கார் பார்க்கிங் திட்டம், 350 வாகனங்கள் நிறுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    குன்னூர் பஸ் நிலை யத்தை விரிவாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முதல் கட்டமாக ரூ.1 கோடியும், 2-வது கட்டமாக ரூபாய் 11.90 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் குன்னூர் பஸ் நிலையம் விரிவாக்கப்பட்டு 26 பேருந்துகள் நின்று செல்ல கட்ட திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஆற்றோரத்தில் எவ்வாறு பஸ் நிலையம் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    மேலும் இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும், துறை அதிகாரிகளிடமும் மாவட்ட கலெக்டருடனும் பேசி ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும.

    மேலும் இங்குள்ள தீயணைப்பு துறை அலு வலகத்தையும் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆற்று ஓரப் பகுதி என்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின், துணைத் தலைவர் வாசிம் ராஜா, குன்னூர் கோட்டாட்சியர் பூஷண குமார், தாசில்தார் கனிசுந்தரம். பொறுப்பு ஆணையாளர் ஏகராஜ், நகர செயலாளர் ராமசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது.
    • வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், காலிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி, வெளியேறும் உபரிநீர் தான் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பருவமழையை நம்பிதான் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

    இது குறித்து நீர்வளத்துறையினர் கூறுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென் மேற்கு பருவமழையை கணக்கிட்டு திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில் தென் மேற்கு பருவமழை பொய்த்தது. வட கிழக்கு பருவமழையின் போது போதிய மழை பெய்து, நீர் வரத்து இருக்கும் போது தான் திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வர முடியும் என்றனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறுகையில், கடந்த ஆண்டே இத்திட்டம் 90 சதவீதம் முடிந்துவிட்டது.கடந்த நான்காண்டாக நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து பவானியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கடந்தாண்டு 620 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அப்போதே வெள்ளோட்டம் முடித்து திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது. நீலகிரி மலைத்தொடரில் பெருமழை பெய்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே உபரி நீர்வெளியேறும். அதன் வாயிலாக திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறுகையில், நீலகிரி மலையில் பெய்யும் மழையை நம்பியே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இடைபட்ட நேரத்தில் திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

    • புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க ரூ.2,195 கோடியில் புதிய திட்டம்
    • அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சிக்கு கடந்த 1994-ம் ஆண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருச்சி ஜீயபுரம், காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனை சரி செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் சீரமைத்து ரூ.75.06 கோடியில் குடிநீர் அபிவிரு த்தி திட்ட பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி திருவப்பூ ரில் நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2195 கோடி மதிப்பீட்டில் 23 லட்சம் மக்கள் பயன்படக்கூடிய அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க அனைத்து நடவடி க்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியை தவிர தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு குடி தண்ணீர் கொடுப்பதற்கு வடகிழக்கு பருவமழை மிக சிறப்பாக பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • திருப்பூர் சுற்றுப்பகுதியில் 300க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • புதிய பணியாளர் திடீரென பணியில் சேர்ந்து அனைத்து பணிகளையும் செய்ய முடியாது.

    திருப்பூர்

    திருப்பூர் சுற்றுப்பகுதியில் 300க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. மத்திய, மாநில அரசு மானிய உதவியுடன் , பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. சாய ஆலைகளில் சாயமிடுவதில் பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    தரமாக சாயமிடுவதற்காக உப்பும் பயன்படுத்தப்படுகிறது. சாயம், ரசாயனம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியிருப்பதால் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே அப்பணிகளை செய்ய முடிகிறது.

    இதேபோல் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒவ்வொரு பிரிவிலும், தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்த நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். மற்ற தொழில்களை போல் சாய ஆலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

    புதிய பணியாளர் திடீரென பணியில் சேர்ந்து அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. நீண்ட நாள் பணி செய்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அதற்காக பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை அதற்கான பயிற்சி மையம் திருப்பூரில் இல்லை.

    இந்நிலையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்துடன் (சிட்ரா) இணைந்து திருப்பூரிலேயே சாயமிடும் தொழில்நுட்பம் குறித்த தொழிற்பயிற்சி மையம் அமைக்க திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சிட்ராவின் தர பரிசோதனை கூடமும் சங்க வளாகத்தில் இயங்கி வருகிறது.

    • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • செம்பனார்கோயில்- தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை, மரக்கன்றுகள் நடுதல், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் மயிலாடு துறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு செம்பனா ர்கோயில் - தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சா லையில் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீரங்கத்தில் கான்பரன்ஸ் ஹால், வணிக வளாகத்துடன் ரூ.11 கோடி செலவில் அமையும் புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது
    • விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது

    திருச்சி, 

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமை க்க உத்தரவிட்டார். அதை த்தொடர்ந்து திருச்சி மாநக ராட்சி நிர்வாகம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகாமையில் ஒரு ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பெங்களூர் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது.பின்னர் அந்த நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் ஒப்படை த்தது. பின்னர் அந்த அறி க்கையை மாநகராட்சி நிர் வாகம் நிதி அனுமதிக்காக நகராட்சி நிர்வாக இயக்குன ரகத்துக்கு ரஅனுப்பி உள்ள னர்.அதன்படி அங்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ. 11 கோடியே 10 லட்சம் செலவாகும் என மதிப்பி டப்பட்டுள்ளது.தரைத்தளத்தில் வணிக வளாகம் அமைக்கப்படு கிறது. அதில் 16 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. முதல் தளத்தில் சிறிய நிகழ்ச்சிகளை நட த்தும் வகையில் கான்பரன்ஸ் ஹால் அமைக்க முன்மொ ழியப்பட்டுள்ளது.8 பஸ்களை நிறுத்தி வை க்கவும், பயணிகள் பஸ்களில் ஏறி இறங்குவதற்கு தனி வசதி அமைக்க ப்படுகிறது.ஒரு கேண்டீன் மற்றும் நேர கண்காணிப்பு அலுவ லகம், ஆண் பெண் இருபா லருக்கும் தனித்தனி கழி ப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் இந்த பஸ்லயத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 80 பஸ்களை கையாள உள்ளன.நிதி ஒதுக்கியதும் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க உள்ளனர்.இது தொடர்பாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தற்போது அனுப்பி உள்ள விரிவான திட்ட அறிக்கை முன்மொ ழிவுக்கு நிர்வாக அனுமதி கிடைத்ததும் தொழில்நுட்ப அனுமதிக்கு அனுப்பப்படும்.அதன் பிறகு மாநகராட்சி திட்டத்துக்கான டெண்டரை வெளியிடுவோம். அனேக மாக டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் தொட ங்கப்படும் என எதிர்பார்க்கி றோம் என்றனர்.

    • 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.
    • இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், காமாட்சி மூர்த்தி, பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்து, பயனா ளிகளுக்கு திட்டத்தின் வங்கி கணக்கு பற்று அட்டை வழங்கி பேசினார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடும் விதமாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற பல திட்டங்கள் மூலம் பெண்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டில் 39 லட்சத்து 40 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை, அமைப்புசாரா தொழி லாளர் உதவித்தொகை என மாதம் ரூ.1200 வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடி யாக 1 கோடியே 45 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற்ற வருகின்றனர்.

    ஆகவே, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

    நமது மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் வழங்க இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யப்பட்டது.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுக வினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கண்மணி நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-

    உறுதிமொழி

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1,772 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சுகாதாரமான சூழல்

    அரசுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொருவரும் உங்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம்

    செலுத்திட வேண்டும். பள்ளி வயது பருவத்திலேயே தன் சுத்தம், உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்றிட வழிவகுக்கும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தித் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களும் கூட்டு முயற்சியுடன் ஒவ்வொரு பள்ளியையும் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக திகழச் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகள் கலெக்டர் முன்னிலையில் நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாமன்ற உறுப்பினர் சங்கீதா நீதிவர்மன், தலைமை ஆசிரியை அனந்த லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த திட்டம் மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி விரிவு படுத்தப்பட்டது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்ப டுத்தப்படுகிறது. இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள னர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றி யம் நெரிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் கலெக்டர் கார் மேகம் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும் ஓமலூர் ஒன்றியம் மாங்குப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ததுடன் ஊழி யர்களிடமும் கேட்டறிந்தார்.

    ஆணைக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் கார்மேகம் அந்த பகுதியில் மாணவர்க ளுடன் அமர்ந்து உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் துணை கலெக்டர் தலைமையிலான அதிகாரி கள் திடீர் ஆய்வு செய்தனர். 

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம்.
    • இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நடை பெற்ற ஒரு திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அஞ்சா நெஞ்சன் அழகிரி பிறந்த இந்த பட்டுக்கோட்டையில் நடைபெறுகின்ற இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் தனது மகனுக்கு அழகிரி பெயரை சூட்டியுள்ளது மூலம் இந்தப் பட்டுக்கோட்டைக்கும் நமது கலைஞருக்கும் உள்ள நெருக்கம் தங்களுக்கு புரியும்.மணமக்கள் இருவரும் மருத்துவர்கள் அது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஏனென்றால் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    நம் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராகும் கனவை தான் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை கொண்டு வந்து எப்படி எல்லாம் பாழாக்குகிறது என்பது உங்களுக்கு நன்றி தெரியும்.

    5 நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம் .

    தி.மு.க. ஆட்சி அமைந்து 2 வருடங்களில் பல்வேறு நலத்திட்டங்களை நமது திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருக்கிறது. உங்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது மிக முக்கியமான திட்டம் 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திருக்குவளையில் ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

    அரசு பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள், 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கியதன் மூலம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    இத்திட்டத்திற்காக மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் தமிழக முதல்வரை பாராட்டி வருகின்றனர்.

    இப்படி ஒரு சிறந்த திட்டத்தை நமது தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.

    இப்படிப்பட்ட திராவிட மாநில அரசின் சாதனைகளை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.
    • அமைச்சர் ராமச்சந்திரன் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஏற்கனவே 63 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 290 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் தொடக்க விழா இன்று காலை குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டட்டி சுங்கம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    குழந்தைகளுக்கும் அவர் உணவு ஊட்டி விட்டார். இதனால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியுடன் காலை உணவை சாப்பிட்டனர்.

    இதுபற்றி அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி காலை உணவுதிட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதளா பேரூராட்சி பெட்டட்டி சுங்கம் அரசு பள்ளியில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்தில் உள்ள 187 ஊராட்சி பள்ளிகளிலும், 80 பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளிலும், 23 நகரசபைக்கு உட்பட்ட பள்ளிகளிலும் என மொத்தம் 290 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×