திருத்துறைப்பூண்டி பகுதியில் 22 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளது

பனை விதைகள் சேகரிக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறனர். இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் 22 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளது
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் உள்ள 38 ஊராட்சிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை பாலம் தொண்டு நிறுவனம் முன்னெடுப்பில் டெல்டா பனை மர பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தை கடந்த வாரம் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இதுவரை 22 ஆயிரத்து 640 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இப்பணியில் சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள் ஈடுபட்டு வருகிறனர்.

தொடர்ந்து பனைவிதை சேகரிப்பும், நடவு பணியும் நடைபெற்று வருகிறது.இதில் பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தனியாக சென்று இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com