search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கத்தில் ரூ.11 கோடி செலவில் புதிய பஸ் நிலையம்
    X

    ஸ்ரீரங்கத்தில் ரூ.11 கோடி செலவில் புதிய பஸ் நிலையம்

    • ஸ்ரீரங்கத்தில் கான்பரன்ஸ் ஹால், வணிக வளாகத்துடன் ரூ.11 கோடி செலவில் அமையும் புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது
    • விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது

    திருச்சி,

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமை க்க உத்தரவிட்டார். அதை த்தொடர்ந்து திருச்சி மாநக ராட்சி நிர்வாகம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகாமையில் ஒரு ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பெங்களூர் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது.பின்னர் அந்த நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் ஒப்படை த்தது. பின்னர் அந்த அறி க்கையை மாநகராட்சி நிர் வாகம் நிதி அனுமதிக்காக நகராட்சி நிர்வாக இயக்குன ரகத்துக்கு ரஅனுப்பி உள்ள னர்.அதன்படி அங்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ. 11 கோடியே 10 லட்சம் செலவாகும் என மதிப்பி டப்பட்டுள்ளது.தரைத்தளத்தில் வணிக வளாகம் அமைக்கப்படு கிறது. அதில் 16 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. முதல் தளத்தில் சிறிய நிகழ்ச்சிகளை நட த்தும் வகையில் கான்பரன்ஸ் ஹால் அமைக்க முன்மொ ழியப்பட்டுள்ளது.8 பஸ்களை நிறுத்தி வை க்கவும், பயணிகள் பஸ்களில் ஏறி இறங்குவதற்கு தனி வசதி அமைக்க ப்படுகிறது.ஒரு கேண்டீன் மற்றும் நேர கண்காணிப்பு அலுவ லகம், ஆண் பெண் இருபா லருக்கும் தனித்தனி கழி ப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் இந்த பஸ்லயத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 80 பஸ்களை கையாள உள்ளன.நிதி ஒதுக்கியதும் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க உள்ளனர்.இது தொடர்பாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தற்போது அனுப்பி உள்ள விரிவான திட்ட அறிக்கை முன்மொ ழிவுக்கு நிர்வாக அனுமதி கிடைத்ததும் தொழில்நுட்ப அனுமதிக்கு அனுப்பப்படும்.அதன் பிறகு மாநகராட்சி திட்டத்துக்கான டெண்டரை வெளியிடுவோம். அனேக மாக டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் தொட ங்கப்படும் என எதிர்பார்க்கி றோம் என்றனர்.

    Next Story
    ×