search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பணை"

    • மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடி வழியாக பில்லூர் அணைக்கு வருகிறது.
    • சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- திருப்பூர் மாநகர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நான்காவது குடிநீர் திட்டத்திற்காக நிதி 1350 கோடி ரூபாய் ஒதுக்கி தந்து திருப்பூர் மக்களின் தாகம் தீர்த்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி,அதற்காக முழு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் ஆகியோருக்கு திருப்பூர் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதே போல் இந்த மாபெரும் திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுஇரவு, பகல் பாராமல் உழைத்திட்டஅதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாகவும், ஊக்கமும், ஆக்கமும்ஆலோசனையும் வழங்கிய மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கும் மக்களின்சார்பாகவும், அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியினைதெரிவித்துக் கொள்கிறோம்.

    அதே நேரத்தில் இந்த சிறப்பான திட்டத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடிவழியாக பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. இச்சூழலில் பவானிக்குசெல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் நமது திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.

    எனவே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டிவரும் தடுப்பணையை உடனடியாக தடுத்து நிறுத்த மாநகராட்சி மாமன்றத்தில் சிறப்புதீர்மானம் கொண்டுவர வேண்டும். மேலும் மத்திய மாநில அரசு கவனத்திற்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் உடனடியாக தடுத்துநிறுத்த மேயர் மற்றும் ஆணையாளர் அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து நேரில் சென்று மேற்படி இடத்தை ஆய்வுசெய்து தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
    • ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெருவில் காவிரியிலிருந்து அரசலாறு பிரிகின்றது.

    இந்த காவிரி ஆற்றின் மூலம் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கரும், அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    இந்த காவிரி-அரசலாறு பிரியும் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல்வேறு பணிகளுக்காக பொதுப்பணித்துறை மூலம் நீட்டித்தல், விரிவாக்குதல், புணர மைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்தப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    இந்த நிதியின் ஒரு பகுதியில் காவிரி-அரசலாறு பிரியும் பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவ தற்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரில் தூர்வாரப்பட்டு வரும் வாய்க்காலையும் பார்வை யிட்ட அவர், இந்த வாய்க்கா லில் மீதமுள்ள 800 மீட்ட ரையும் தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.

    பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியா ளர்கள் முத்துக்குமார், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் நீர் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.
    • மர்மநபர்கள் நீரை திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது.

    கடலூர்:

    வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.  கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தை இணை க்கும் தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.16 கோடியில் கட்ட ப்பட்டது. இந்த தடுப்பணை யால் 4.14 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும்  இந்த தடுப்பணைக்கு கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை நீர் மற்றும் அருகில் இருந்து ஓடை வழியாக தடுப்பணைக்கு வந்து முழு கொள்ளளவை எட்டியயது. கூடலூர் கிராம மக்கள் குருவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தனர்.

    இந்நிலையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தடுப்பணையின் கதவுகளை திறந்து விடுவதும் அதை சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் மூடுவதும் தொடர் கதையாக உள்ளது.திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது இதனால் விவசாயிகளுக்கு பாசன நீர் தற்போது கேள்விக் குறியாக மாறி வருகிறது.5 அடிக்கு மேல் தேங்கியி ருந்த நீர் நிலையில் தற்போது 3 அடி யாக குறைந்துள்ளதால் விவசா யிகள் வேதனை யடைந்துள்ளனர். தடுப்பணை யில் இருந்து தண்ணீரை திறந்து விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளில் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை.
    • கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியுள்ளது. தமிழர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    அட்டப்பாடியில் சித்தூர் சாலையில் கூலிக்கடவு என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதன்மூலம், கோவை மாவட்டத்திற்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை. சிறுவாணி அணையை பராமரிக்க கேரளா அரசுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது.

    ஆனாலும், சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்லும் பாதையை சீரமைக்காமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வுக்குகூட சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்ல முடியாமல், ஆனைக்கட்டி வழியாக சுற்றி செல்லக்கூடிய நிலை உள்ளது.

    இந்நிலையில், கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியுள்ளது. தமிழர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே, கேரளா அரசின் இந்த போக்கை கண்டித்து கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பஸ் நிலையத்தில் நடைபெறும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் வக்கீல் தாமஸ், இந்மிய கம்யூனிஸ்ட் சார்பில் சிவசாமி, ம.தி.மு.க. சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் சுசி. கலையரசன், இலக்கியன், வணிகர் சங்கம் சார்பில் மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்ராகீம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சர்புதீன், எஸ்.டி.பி.ஐ சார்பில் ஆசிப், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஸ்டான்லி உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும்.
    • கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும்

    கடலூர்:

    தமிழக சட்ட சபையில் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் பேசியதாவது:-

    கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும். கடலூரில், தடைப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் நடைபெற ஆவண செய்ய வேண்டும். சென்னை-கடலூர் ெரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். ங்கனாங்குப்பம், உச்சிமேடு, முதல் குண்டு உப்பலவாடி இடையே பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும். கடலூர் புதுப்பாளையம் - ஓட்டல் தேவி வரை போக்குவரத்துக் கழகத்தை இணைக்கும் விதமாக கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும். பெண்ணையாறு - கெடிலம் மலட்டாறு போன்ற ஆறுகள் கடலில் கலக்கும் இடமாக கடலூர் உள்ளதால் குறைந்தது கடலிலிருந்து 10 கி.மீ. தூரத்திற்குள்ளாவது ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ,தேவைப்படும் இடங்களில் சிமெண்ட் சுவர் அமைத்துத் தர வேண்டும். கெடிலம் ஆற்றில் கடலூர் நகரப் பகுதி - கம்மியம்பேட்டை முதல் சாவடி வரை இரண்டு கரைகளையும் பலப்படுத்தி, சுமார் 2 கி.மீ. வரை சாலை அமைத்து, பஸ்பேக்குவத்தைக் தொடர்வசதி செய்து தர வேண்டும். கடலூர் சில்வர் கடற்கரையை சுற்றுலாத் தலமாக ஆக்கிட வேண்டும். செம்மண்டலம் மாதா கோயில் அருகே சுற்றுவட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் பகுதியில், நவீன வசதிகளுடன் வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும். பெண்ணையாற்றின் குறுக்கே - வெள்ளப்பாக்கம் - அழகியநத்தம் ஆகிய இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும். கடலூர் அரசு பெரியார் கல்லூரியில், புதிய பாடப்பிரிவுகள் எம்.எஸ்.சி (மைக்ரோ பயாலஜி), பி.எஸ்.சி (பயோ டெக்னாலஜி) (பயோ கெமிஸ்ட்ரி) போன்ற புதிய பாடப் பிரிவுகளில் பயிலும் வகையில் புதிய வகுப்புகள் தொடங்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம் , துறைமுகம் பகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் வகையில் 17-ம் நூற்றாண்டில் சுரங்கப்பாதை இருந்ததாக தெரிய வருகிறது. சிதலமடைந்த மாளிகையை, கட்டிடங்களை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தி புதுப்பித்து சீரமைத்து அழகுப்படுத்தி சுற்றுலாத்தலமாக அமைத்து தர வேண்டும்.கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகியவற்றில் தூண்டில் வளைவு ஏற்படுத்தி, மீனவப் மக்களைப் பாதுகாத்திட ஆவண செய்ய வேண்டும். நாணமேடு, உச்சிமேடு, பகுதியில் குளிர்ப்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். 2009- ம் ஆண்டு தொடங்கப்பட்ட, பாதாள சாக்கடைத் திட்டத்தை முடித்திட வேண்டும். கடலூர் தொகுதியில், மழைநீர் வடிகால் வாய்க்கால் புதைவட மின்சார பணிகள் முழுமையாக முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • தற்போது 75 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.
    • நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் பாதையில் பெரியபள்ளம் பகுதியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கியது.

    இந்த நிலையில் தடுப்பணை கட்டும் பணிகள் விறுவிறுவென நடைபெற்று தற்போது 75 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.

    இன்னும் 10 தினங்களில் தடுப்பணை கட்டும் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    தோலம்பாளையம் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்டினால் மழைக்காலங்களில் வீணாகும் மழை நீரை சேமித்து வைக்க இயலும்.

    இதனால் தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும்.

    இதனால் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என தாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியில் தடுப்பணை கட்ட அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பகுதியில் நீர் வழித்தடங்கள் புதர் மண்டி காணப்படுகிறது.

    இதனை அகற்றினால் மட்டுமே இப்பகுதியில் தடுப்பணை கட்டுவதன் நோக்கம் நிறைவேறும். அதனை செய்யாமல் தடுப்பணை கட்டி என்ன பயன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.

    விழுப்புரம் :

    தமிழக சட்டசபையில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி பேசியதாவது:-

    எனது கோரிக்கையை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்னியூர் பகுதியில் தீயணைப்பு மீட்பு நிலையம் வழங்கி கடந்த திங்கட்கிழமை அன்று காணொலி கட்சி மூலம் திறந்த முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராமங்களில் குறைந்த மின் பற்றாக்குறை உள்ளதால் காணை ஊராட்சி பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.

    கல்பட்டு ஊராட்சியில் இருந்து நத்தமேடு. ஆரியூர் ஊராட்சியில் இருந்து சாணிமேடு, மாம்பழப்பட்டு ஊராட்சியில் இருந்து ஒட்டங்காடுவெட்டி,கெடார் ஊராட்சியில் இருந்து செல்லங்குப்பம், கருவாச்சியிலிருந்து இருந்து புதுகருவாச்சி, பனமலை ஊராட்சியில் இருந்து பனமலைபேட்டை, பனமலை ஊராட்சியில் இருந்து உமையாள்புரம் மற்றும் அய்யூர் அகரம் ஊராட்சியில் இருந்து சிந்தாமணி ஆகிய ஊராட்சிகளை பிரித்து தருமாறு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். விக்கிர வாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்ப ணித்துறை கட்டுப்பா ட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர் தேக்கமாக மேம்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

    வாக்கூர் ஊராட்சி மேல்பாதியில் பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தருமாறு நீர்வளத்துறை அமைச்சரை கேட்டு க்கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் கல்பட்டு மற்றும் பனம லைபேட்டை ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவும், வேம்பி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையமாக தரம் உயர்த்தி தரவும். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி (100 மாணவியர்கள்) கட்டிடம் வி.சாலையில் கட்டும் பணிக்கு ரூ.4.10 கோடியும் நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. இந்த 4 பணிகள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து அவ்வப்போது மர்ம நபர்கள் தண்ணீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலசபாக்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் நீர் செய்யாற்றில் செங்கம், காஞ்சி, கடலாடி, மாதிமங்கலம், எலத்தூர், பழங்கோவில், பூண்டி கலசபாக்கம், போளூர், ஆரணி வழியாக செல்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடுவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதன்படி முதல் கட்டமாக கலசபாக்கம் அருகே ஆணைவாடி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டன. இதன் மூலம் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றன. இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றன.

    இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியை அடைந்து வருகின்றனர்.தற்போது மழை நின்ற காரணத்தால் தடுப்பனையில் சுமார் 7 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இந்த தண்ணீரை மர்ம நபர்கள் மணல் கொள்ளை அடிப்பதற்காகவும் மற்றும் மீன்பிடிப்பதற்காகவும் இரவில் தடுப்பணையில் உள்ள ஷட்டரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் குறைந்து தற்போது 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது சம்பந்தமாக விவசாயிகள் கலசபாக்கம் தாசில்தார் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    • தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
    • ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன.

    மேலும் மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில், கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.

    இந்த தடுப்பணை மூலம் அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இந்த புதிய தடுப்பணை உதவும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பணியை தொடங்கி வைத்தார்
    • 1,345 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படுகிறது

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளி லிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடி மதிப்பீட்டில், 1,345மீட்டர் நீளத்திற்கு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இந்த திட்டத்தின் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர்ந்து கூடுதலாக தண்ணீர் கிடைக்க பெறும்.

    மேலும் விவசாய கிணறுகள், மற்றும் குடிநீர் ஆழ்துளை கிணறுகளுக்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் மெய்யழகன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, பேரூராட்சி செயலாளர் நரசிம்மன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • நந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • குறைதீர் கூட்டம்

    அரியலூர்:அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள நத்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.ச.கலைவாணி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள்:அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும்போது, அதிக விலைக்கு உரம் விற்கப்பட்டு வரும் தனியார் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியில் மாமூல் பெறும் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் பேசும் போது, தூத்தூர் - வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கை கதவணையுடன் கூடிய தடுப்பணை, பாலம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே பொய்யூர் பகுதியில் தடுப்பனைக் கட்டுவதை கால தாமதம் இல்லாமல் கட்டி முடிக்க வேண்டும்.ராயம்பரம், நக்கம்பாடி ஆகிய ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுக்கிரன் ஏரியில் காவிரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே சுண்டக்குடிக்கு கிழக்கேவைப்பூருக்கு வரை அடந்துள்ள வேலிகருவ முள்செடிகளை அகற்றி மருதையாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானியத்தில முந்திரி கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செந்துறை தாலுக்கா விவசாயிகளுக்கு உளுந்துக்கான காப்பீடு தொகை மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையினை பெற்று தரவேண்டும் என்றார்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி,அவைகைளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்துள்ள திரளி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஹம்சவர்தணி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டு சென்ற குமரேசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் திரளி கவுண்டமா நதி தடுப்பணை அருகே ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இதுதொடர்பாக போலீ சார் விசாரணை நடத்திய போது தடுப்பணை யில் இறந்து கிடந்தது குமரேசன் என தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×