என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்சட்டசபையில் புகழேந்தி எம்.எல்.ஏ. பேச்சு
- முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.
விழுப்புரம் :
தமிழக சட்டசபையில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி பேசியதாவது:-
எனது கோரிக்கையை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்னியூர் பகுதியில் தீயணைப்பு மீட்பு நிலையம் வழங்கி கடந்த திங்கட்கிழமை அன்று காணொலி கட்சி மூலம் திறந்த முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராமங்களில் குறைந்த மின் பற்றாக்குறை உள்ளதால் காணை ஊராட்சி பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.
கல்பட்டு ஊராட்சியில் இருந்து நத்தமேடு. ஆரியூர் ஊராட்சியில் இருந்து சாணிமேடு, மாம்பழப்பட்டு ஊராட்சியில் இருந்து ஒட்டங்காடுவெட்டி,கெடார் ஊராட்சியில் இருந்து செல்லங்குப்பம், கருவாச்சியிலிருந்து இருந்து புதுகருவாச்சி, பனமலை ஊராட்சியில் இருந்து பனமலைபேட்டை, பனமலை ஊராட்சியில் இருந்து உமையாள்புரம் மற்றும் அய்யூர் அகரம் ஊராட்சியில் இருந்து சிந்தாமணி ஆகிய ஊராட்சிகளை பிரித்து தருமாறு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். விக்கிர வாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்ப ணித்துறை கட்டுப்பா ட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர் தேக்கமாக மேம்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
வாக்கூர் ஊராட்சி மேல்பாதியில் பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தருமாறு நீர்வளத்துறை அமைச்சரை கேட்டு க்கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் கல்பட்டு மற்றும் பனம லைபேட்டை ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவும், வேம்பி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையமாக தரம் உயர்த்தி தரவும். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி (100 மாணவியர்கள்) கட்டிடம் வி.சாலையில் கட்டும் பணிக்கு ரூ.4.10 கோடியும் நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. இந்த 4 பணிகள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்