search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கலை"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
    • மீன்சந்தை அருகே காலியிடத்தில் ரூ. 1.5 கோடியில் காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    கன்னியாகுமரி:

    வாகனங்களின் அதிக ரிப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக களியக்காவிளை பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முந்தைய அ.தி.மு.க. அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுத்தது.

    இதற்காக பஸ் நிலை யத்தின் அருகில் உள்ள காய்கனி சந்தையையும் இணைத்து விரிவாக்கப் பணி மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு காய்கனி சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து மீன்சந்தை அருகே காலியிடத்தில் ரூ. 1.5 கோடியில் காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்ததையடுத்து காய்கனி சந்தை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து புதிய சந்தை கட்டிடம் திறப்பு விழா களியக்கா விளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரமாதேவி, விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரிப்பன் வெட்டி காய்கனி சந்தையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா, களியக்காவிளை பேரூராட்சி இளநிலை பொறியாளர் பத்மதேவன், பேரூராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ரிபாய், வின்சென்ட், உமா மகேஸ்வரி, சுனிதா, விஜய குமாரி, தாஸ், விஜயா, நிஷா, டெல்பின் ஜலீலா, வர்த்தகர் சங்க மாநில துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீகலா. இவர்கள் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புலியூர்குறிச்சி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஸ்ரீகலா கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலி செயிைன பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டு பின் தொடர்ந்தனர். எனினும் திருடர்கள் வேகமாக தப்பி சென்றனர். இது குறித்து ஸ்ரீகலா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இரணியர் அருகே நெல்லியரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி அஜிஷா (வயது 27). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை அஜிஷா மோட்டார் சைக்கிளில் அவரது தாயார் வீடான தக்கலை அருகே பாலப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அஜிஷா அணிந்திருந்த 5½ பவுன் தாலி செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் நேற்று மாலை தக்கலை அருகே வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் திருட்டில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரணம் என்ன? என போலீசார் விசாரணை
    • கணவன்-மனைவிக்கு இடையில் 2 வாரம் காலமாக தகராறு ஏற்பட்டிருந்ததால் விரக்தி அடைந்த சிவலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 35). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். ராஜன் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து சிவலட்சுமி (33) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று 2 குழந்தை களும் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலையில் சிவலட்சுமியின் மகன் அஜயன் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த போது அவனது தாயார் சிவலட்சுமி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அஜயன் தாத்தாவிடம் சென்று கூறினார். மருமகளின் தற்கொலை குறித்து அவர் விசாரித்தபோது கணவன்-மனைவிக்கு இடையில் 2 வாரம் காலமாக தகராறு ஏற்பட்டிருந்ததால் விரக்தி அடைந்த சிவலட்சுமி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அய்யப்பன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆட்டோ டிரைவர் கைது
    • 2 பேருக்கு வலை வீச்சு

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள புலிப்பணம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 57), இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று பணி முடிந்து திரும்பும் போது சுவாமியார் மடத்தில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

    இந்நிலையில் போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போது ஆட்டோவை எடுக்கும் போது சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி உள்ளனர். இதனால் சப்-இன்ஸ்பெக்டருக்கும், 3 பேர் கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கருணாகரனை தாக்கி, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கருணாகரன் தக்கலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கருணாகரன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியது காட்டாத்துறையை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலில் 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • தக்கலை - ராமன்பரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
    • உண்ணாவிரதம் இருக்கலாம் ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்த போலீசாருடன் கடும் வாக்கு வாதம்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் நகரட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தக்கலை - ராமன்பரம்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிபட்டு வந்தனர், சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கவுன்சிலர் கீதா பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை.

    இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தக்கலை பஸ் நிலையம் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாரதிய ஜனதாவினர் பேராட்டத்திற்கு திரண்ட னர். உண்ணாவிரதம் இருப்பவர் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்தனர்.

    இதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பந்தலை அகற்ற பாரதிய ஜனதாவினர் மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உன்னி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்துக்கு பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ், மாவட்ட நிர்வாகிகள் குமரி ரமேஷ், டாக்டர் சுகுமாரன், ஷண்முகம், துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. இது தொடர்பாக போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.

    நேற்று தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் பரசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு ஜீப் வேகமாக வந்தது.

    அந்த ஜீப்பினை நிறுத்தும்படி அதிகாரிகள் கை காட்டினர். ஆனால் ஜீப் நிற்காமல் சென்றது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் விரட்டிச் சென்று ஜீப்பை மடக்கினர். அப்போது ஜீப்பை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதனை தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் மற்றும் ஊழியர்கள் ஜீப்பை சோதனை செய்தனர். அப்போது ஜீப்பில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.

    இதையடுத்து வாகனத்து டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கபட்டது. ஜீப் வட்ட வழங்கல் அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
    • அஜாக்கிரதையாக இருந்ததால் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிவளங்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தக்கலைப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நெல்லையிலிருந்து தக்கலை வழியாக அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த வாகனத்தை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இப்புகார் தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வாகன சோதனையின் போது போலீசார் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனத்தை கவனிக்காமல் விட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு பணியில் இருந்த 2 போலீசாரை உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • மோட்டார் சைக்கிளில் வரும் போது திடீரென நிலை தடுமாறி மின் கம்பம் மீது மோதி அருகில் உள்ள குளத்தில் விழுந்தார்.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்தாண்டம் கீழபம்மம் பகுதியை சேர்ந்தவர் டான் சந்திர சுதன். இவரது மகன் பிரின் அனுக் (வயது27).

    பொறியியல் பட்டதாரியான இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று பணிமுடிந்து மாலை வீட்டுக்கு புறப்பட்டார். தக்கலை அருகே காட்டாத்துறை கொக்கிடிகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வரும் போது திடீரென நிலை தடுமாறி மின் கம்பம் மீது மோதி அருகில் உள்ள குளத்தில் விழுந்தார். நெடுநேரம் ஆகியும் பிரின் அனுக் மீட்க படாததால் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்தார்.

    இந்த தகவலை அறிந்த அப்பகுதியில் உள்ளவர்கள் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக இவரது தந்தை டான் சந்திர சுதன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிட பணிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்
    • அனைத்து பணி களையும் தரமானதாகவும், உறுதியானதாகவும் கட்ட வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட திட்ட மிடப்பட்டுள்ளது.

    ரூ.3.46 கோடி மதிப்பில் நடைபெற உள்ள இந்த பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா கோழிப்போர் விளை பழைய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்து பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பொது மக்களுக்கும் பயனுள்ள திட்டங்களை அறிவித்து, அது மக்களை சென்றடைய வேண்டு மென்ற நோக்கில் செயல் படுத்தி வருகிறார். மேலும் மக்களின் தேவைகளை அறிந்து புதிய அரசு அலுவலகங்கள். சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, தக்கலையில் இன்றையதினம் வட்டார வளர்ச்சி அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்க ப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு பேரூராட்சி க்குட்ட திருநந்திகரை பகுதி யில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.1.46 கோடி மதிப்பில் கலைஞர் நவீன நகர்புற மயானம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிணந்தோடு பகுதியில் ரூ. 12 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விலவூர் கோணம், வேங்கோடு குளத்தில் ரூ.37 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. சுருளகோடு ஊராட்சி பகுதி யில் வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.15.55 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்ப ட்டு உள்ளது.

    புதிய கட்டிட பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகள் என மொத்தம் ரூ.5.56 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகள் திறந்தும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பணி களையும் தரமானதாகவும், உறுதியானதாகவும் கட்ட வேண்டும். அவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர வேண்டு மெனவும் அறிவு றுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, அன்பு, முளகுமூடு பேரூராட்சி தலைவர்அனுஷா ஜோன், உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் ராணி, அருளானந்தம் ஜார்ஜ், ரமேஷ்பாபு, ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே பத்மனாபபுரம் செக்கால தெருவை சேர்ந்தவர் நடராஜபிள்ளை. இவரது வீட்டுக்கு பின்புறம் கோழி கூடு உள்ளது. இன்று காலை கோழி கூட்டை திறக்க சென்ற போது ஒரு கோழி செத்து கிடந்தது. கூண்டு வழியாக பார்த்த போது ஒரு பாம்பு நெளிந்த படி இருந்தது.

    உடனே தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு அலுவலர்ஜீவன்ஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது விஷம் கூடிய 6 அடி நல்ல பாம்பு என தெரியவந்தது. உடனே பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை-நாகர்கோவில் வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் அதிக பயணிகள் கூட்டம் அரசு பேருந்துகளில் நிரம்பி வழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக் கட்டில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் எந்த பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பேருந்து ஸ்டாப்புக்கு முன்னரோ, பின்னரோ இறக்கி விட்டு மட்டும் செல்கின்றனர்.

    இதனால் யாரும் ஏறவும் முடியாது.இதில் அரசு பேருந்து ஓட்டுனர்களை குறை கூறி எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பேருந்தில் நிற்க கூட இடமில்லாத நிலை உள்ளது. இலவச பேருந்து சேவை வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு செல்லும் இலவச பேருந்தை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதால், முக்கிய பணிகளுக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இலவச பேருந்தில் ஏற முடியாத நிலை உள்ளது. மார்த்தாண்டத்திலிருந்தே பேருந்தில், நாகர்கோவில் வருபவர்களும் பல இன்னலுக்கு உள்ளாவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே காலை-மாலை வேளைகளில், குறிப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52).

    இவர் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட முருகன் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று மாலை ஊருக்கு செல்வதாக கூறி மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் தக்கலை பஸ் நிலையம் வந்தபோது மயங்கி விழுந்தார்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் தக்கலை போலீசார் விரைந்து சென்று முருகனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×