என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தக்கலையில் ஜீப்பில் கடத்திய 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
- போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. இது தொடர்பாக போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
நேற்று தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் பரசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு ஜீப் வேகமாக வந்தது.
அந்த ஜீப்பினை நிறுத்தும்படி அதிகாரிகள் கை காட்டினர். ஆனால் ஜீப் நிற்காமல் சென்றது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் விரட்டிச் சென்று ஜீப்பை மடக்கினர். அப்போது ஜீப்பை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதனை தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் மற்றும் ஊழியர்கள் ஜீப்பை சோதனை செய்தனர். அப்போது ஜீப்பில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்து டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கபட்டது. ஜீப் வட்ட வழங்கல் அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்