search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கோப்பு படம் 

    தக்கலை அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை

    • காரணம் என்ன? என போலீசார் விசாரணை
    • கணவன்-மனைவிக்கு இடையில் 2 வாரம் காலமாக தகராறு ஏற்பட்டிருந்ததால் விரக்தி அடைந்த சிவலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 35). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். ராஜன் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து சிவலட்சுமி (33) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று 2 குழந்தை களும் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலையில் சிவலட்சுமியின் மகன் அஜயன் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த போது அவனது தாயார் சிவலட்சுமி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அஜயன் தாத்தாவிடம் சென்று கூறினார். மருமகளின் தற்கொலை குறித்து அவர் விசாரித்தபோது கணவன்-மனைவிக்கு இடையில் 2 வாரம் காலமாக தகராறு ஏற்பட்டிருந்ததால் விரக்தி அடைந்த சிவலட்சுமி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அய்யப்பன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×