என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சைவம்"
- மாலைப்பொழுது, டீயுடன் வடை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும்.
- சக்கரவள்ளி கிழங்கில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சக்கரவள்ளி கிழங்கு - 2,
ப.மிளகாய் - 3
வெங்காயம் - 1
நிலக்கடலை - ஒரு கப்,
அரிசி மாவு - 2 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடாயில் நிலகடலையை போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சக்கரவள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி விட்டு துருவிக்கொள்ளவும்.
துருவிய சக்கரவள்ளிக்கிழங்குடன் பொடித்த நிலக்கடலையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு சற்று கெட்டியாக இருந்தது என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.
அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை வடை போன்று தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு பிசைந்து வைத்துள்ள மாவு அனைத்தையும் வடை செய்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான சக்கரவள்ளி கிழங்கு வடை ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
ஜவ்வரிசி - 5 டீஸ்பூன்
உப்புபு - தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும்.
இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து 7 மணிநேரம் புளிக்க விடவும்.
தட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான சத்தான தட்டு இட்லி ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள காரசட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
- இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்:
இட்லி - 5,
கடலைமாவு - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீரகம் - சிறிதளவு,
மிளகாய்தூள் - சிறிதளவு,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும்.
இட்லி துண்டுகளின் மேல் இந்தக் கடலைமாவுக் கலவையை சிறிதளவு தூவிப் பிசறி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான 'இட்லி 65' ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த கிரேவி கறி குழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 4,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
பச்சை பட்டாணி - 1/4 கப்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
பட்டை - 1 துண்டு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு
சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
சோம்பு - அரை டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன்,
தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு - 10,
பூண்டு - 6 பல்.
செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை போட்டு அதில் சூடான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற விடவும். நன்றாக ஊறியதும் சாதாரணமான தண்ணீரில் இரண்டு முறை நன்கு அலசி தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் இறுக்கமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மீல் மேக்கரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் சிறிதளவு வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள மீல் மேக்கரை போட்டு வதக்குங்கள்.
அடுத்து தக்காளி, பட்டாணியை சேர்த்து வதக்குங்கள்.
இப்போது பட்டாணி சேர்த்து வதக்கிய பின்பு, தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் கலந்து நிமிடங்கள் வைக்கவும்.
தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி தழை, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கி விடலாம்.
இந்த கிரேவி சாதத்துடன் மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பச்சை மொச்சையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.
- மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பச்சை மொச்சை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சை மொச்சை மொச்சை - கால் கிலோ
துவரம்பருப்பு - 100 கிராம்
சின்னவெங்காயம் - 50 கிராம்
சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
துவரம்பருப்பை நன்றாக கழுவி ஒன்றரை கப் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக வேக வைத்து கொள்ளவும்.
வேக வைத்த துவரம் பருப்புடன் பச்சை மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான பச்சை மொச்சை பருப்பு கூட்டு ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ரெசிபி செய்ய 10 நிமிடம் தான் பிடிக்கும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்:
கல் தோசை - 3
வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு தூள் - - அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
தாளிக்க…
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தொடர்ந்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
இவையனைத்தும் நன்றாக வதங்கியதும், பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
நாம் சேர்த்துள்ள தோசை மசாலாவுடன் நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழையைத் தூவி கீழே இறக்கவும்.
இப்போது சூப்பரான தோசை உப்புமா தயார். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து சுவைக்கலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ரோட்டு கடையில் விற்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 10 பல்
கேரட் - கால் கப்
கோஸ் - அரை கப்
குடை மிளகாய் - கால் கப்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரெட் ஸ்லைஸ்களை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய், கேரட், கோஸ், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் கேரட், கோஸ், குடை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து சாட் மசாலா, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
காய்கள் நன்றாக வெந்ததும், பிரெட் துண்டுகளை சேர்த்து மிதமாக கிளறிவிடவும்.
இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பிரெட் மசாலா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு பள்ளிக்கு இந்த ரெசிபியை கொடுத்தனுப்பலாம்.
- இந்த சாட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முறுக்கு - தேவையான அளவு
கேரட் - 1
பீட்ரூட் - 1
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் - 1 துண்டு
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இந்த கலவையை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கவும்.
ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முறுக்கை பொடியாக நொறுக்கிப் போடவும்.
அதனுடன் 2 தேக்கரண்டி சாலட் கலவை (கலந்து வைத்த காய்கறி), 1 தேக்கரண்டி சட்னி சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான 'முறுக்கு காய்கறி சாட் ' ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ஸ்நாக்ஸ் சத்தானது சுவையானது.
- இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 200 கிராம்,
ஏதாவது ஒரு கீரை - ஒரு கைப்பிடி அளவு,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 3
கோஸ் துருவல் - 4 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 2,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
கரம் மசாலாத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், கீரை, கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை - வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கீரை வெஜிடபிள் சமோசா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
பெரிய வெங்காயம்- 1
தக்காளி - 1
கேரட்- 1
பச்சைப்பட்டாணி- கால் கப்
உருளைக்கிழங்கு - 1
முட்டைக்கோஸ்- துருவியது கால் கப்
இஞ்சி- சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 2
மிளகாய் வற்றல்- 2
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் - தேவையான அளவு
கொத்தமல்லி- அலங்கரிக்க
தாளிக்க:
நெய் அல்லது எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
* தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெறும் கடாயில் ரவையை போட்டு சிவக்க வறுக்கவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத் கொள்ளவும்.
* 1 கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீரை வேக வைக்க வேண்டும், அதற்கு 1 1/2 கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* வாணலியில் எண்ணெயிட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, ப.மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயத்தை வதக்க வேண்டும்.
* பிறகு காய்கறிகளைச் சேர்த்து வதக்கின பிறகு கடைசியாகத் தக்காளியைச் சேர்க்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்கி விடும் என்பதால் இறுதியில் சேர்த்தால் போதும்.
* அடுத்து அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி வேக விடவும்.
* அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.
* காய் வெந்தவுடன் வறுத்த ரவையைக் கொதிக்கும் கலவையுடன் கொட்டிக் கொண்டே கிளற வேண்டும்(இல்லையென்றால் அடி பிடித்து விடும்).
* ரவை வெந்து எண்ணெயிடும் போது ஒட்டாமல் வரும், அப்போது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
* இப்போது சூப்பரான காய்கறி ரவா உப்புமா ரெடி.
* பத்து நிமிடங்களில் தயார் செய்து விடக் கூடிய எளிய சுவை மிகுந்த சிற்றுண்டி வகை இது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
தனியா - 4 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 4 பற்கள் நீளவாக்கில் நறுக்கியது
எள்ளு - 2 தேக்கரண்டி
கொப்பரை தேங்காய் துருவியது - அரை கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்ய
கத்திரிக்காய் - 1 கிலோ
மிளகாய் தூள் - 4 டீஸபூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
அரைத்த மசாலா பொடி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* கத்திரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் 4 பாகமாக நறுக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தனியா, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
* மசாலா பொன்னிறமாக மாறியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து வறுக்கவும்.
* பிறகு கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, நன்கு ஆற வைத்து ஆறியதும் தூளாக அரைத்து கொள்ளவும்.
* உப்பு, மிளகாய் துள், அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கத்திரிக்காயில் உள்ளே வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து கத்திக்காயிலும் செய்யவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு கத்தரிக்காவை போட்டு வதக்கவும்.
* அடுத்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
* கத்தரிக்காயை திருப்பி விட்டு மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
* 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய் தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும்.
- இந்த இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - ஒரு கப்,
பூண்டு - 2 பல்,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 5,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
இப்போது சத்தான சுவையான வல்லாரை துவையல் ரெடி.
குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்