search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சத்து நிறைந்த காய்கறி ரவா உப்புமா
    X

    சத்து நிறைந்த காய்கறி ரவா உப்புமா

    • காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்

    பெரிய வெங்காயம்- 1

    தக்காளி - 1

    கேரட்- 1

    பச்சைப்பட்டாணி- கால் கப்

    உருளைக்கிழங்கு - 1

    முட்டைக்கோஸ்- துருவியது கால் கப்

    இஞ்சி- சிறிய துண்டு

    பச்சை மிளகாய்- 2

    மிளகாய் வற்றல்- 2

    உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் - தேவையான அளவு

    கொத்தமல்லி- அலங்கரிக்க

    தாளிக்க:

    நெய் அல்லது எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு- 1 டீஸ்பூன்

    கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

    வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை- 1 இணுக்கு

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெறும் கடாயில் ரவையை போட்டு சிவக்க வறுக்கவும்.

    * பச்சை பட்டாணியை வேக வைத் கொள்ளவும்.

    * 1 கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீரை வேக வைக்க வேண்டும், அதற்கு 1 1/2 கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

    * வாணலியில் எண்ணெயிட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, ப.மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயத்தை வதக்க வேண்டும்.

    * பிறகு காய்கறிகளைச் சேர்த்து வதக்கின பிறகு கடைசியாகத் தக்காளியைச் சேர்க்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்கி விடும் என்பதால் இறுதியில் சேர்த்தால் போதும்.

    * அடுத்து அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி வேக விடவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.

    * காய் வெந்தவுடன் வறுத்த ரவையைக் கொதிக்கும் கலவையுடன் கொட்டிக் கொண்டே கிளற வேண்டும்(இல்லையென்றால் அடி பிடித்து விடும்).

    * ரவை வெந்து எண்ணெயிடும் போது ஒட்டாமல் வரும், அப்போது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான காய்கறி ரவா உப்புமா ரெடி.

    * பத்து நிமிடங்களில் தயார் செய்து விடக் கூடிய எளிய சுவை மிகுந்த சிற்றுண்டி வகை இது.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×