search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brinjal Recipes"

    • இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மசாலா தூள் அரைக்க

    தனியா - 4 டீஸ்பூன்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 4 டீஸ்பூன்

    வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 10

    பூண்டு - 4 பற்கள் நீளவாக்கில் நறுக்கியது

    எள்ளு - 2 தேக்கரண்டி

    கொப்பரை தேங்காய் துருவியது - அரை கப்

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்ய

    கத்திரிக்காய் - 1 கிலோ

    மிளகாய் தூள் - 4 டீஸபூன்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    அரைத்த மசாலா பொடி - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * கத்திரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் 4 பாகமாக நறுக்கி வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தனியா, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    * மசாலா பொன்னிறமாக மாறியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து வறுக்கவும்.

    * பிறகு கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, நன்கு ஆற வைத்து ஆறியதும் தூளாக அரைத்து கொள்ளவும்.

    * உப்பு, மிளகாய் துள், அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கத்திரிக்காயில் உள்ளே வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து கத்திக்காயிலும் செய்யவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு கத்தரிக்காவை போட்டு வதக்கவும்.

    * அடுத்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

    * கத்தரிக்காயை திருப்பி விட்டு மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

    * 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - 4

    துவரம் பருப்பு - 1/4 கப்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    புளி நீர் - 1 கப்

    வெல்லம் - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    வறுத்து அரைப்பதற்கு...

    கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

    தனியா - 1 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 1

    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:

    * கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கவும்.

    * துவரம் பருப்பை நன்றாக குழைய வேக வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, மல்லி, வரமிளகாய், மிளகு ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுத்ததும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    * பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் கத்திரிக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். வாணலியை மூடி வைத்து நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

    * கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் புளி நீர், மஞ்சள் தூள், வெல்லம், வேக வைத்த பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் புளியின் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கத்தரிக்காயில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும்.
    • இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ,

    சின்ன வெங்காயம் - ஒரு கப்,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    புளித்தண்ணீர் - 2 கப்,

    தக்காளிச் சாறு - கால் கப்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம்- சிறிதளவு

    அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5,

    தனியா - ஒரு டீஸ்பூன்,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்.

    செய்முறை :

    * சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

    * பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

    * வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    * வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் போடு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    * புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

    • கத்திரிக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு மட்டுமே செய்திருப்போம்.
    • இன்று கத்தரிக்காயில் அருமையான சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - கால் கிலோ

    தக்காளி - 3

    பெ. வெங்காயம் - 2

    ப. மிளகாய் - 2

    காய்ந்த மிளகாய் - 4

    கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், 1 வெங்காயம், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கி கொள்ளவும்.

    தோல் நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நாம் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

    • எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம்.
    • இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    கத்திரிக்காய் - 1/4 கிலோ

    சின்ன வெங்காயம் - 10

    நல்லெண்ணெய் - 150 மில்லி

    சீரகம் - சிறிது

    வறுக்க

    வெந்தயம் - 1/2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    கடுகு - 1 ஸ்பூன்

    மிளகு - 1/4 ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 15

    தனியா - 1/4 கப்

    வேர்கடலை - 4 ஸ்பூன்

    எள் - 2 ஸ்பூன்

    வறுத்ததுடன் சேர்த்து அரைக்க :

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தோலுடன் பூண்டு - 1

    கருவேப்பிலை - 1 கைப்பிடி

    புளி - நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்)

    செய்முறை

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு தனி தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    பின்னர் அதனுடன் வறுத்ததுடன் சேர்த்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

    கத்திரிக்காயை நான்காக கீறி அதில் இந்த மசாலாவை ஸ்டஃப் செய்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.

    கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் மீதி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் கொதிக்கவிடவும்.

    எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

    சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

    • கத்திரிக்காயை வைத்து பல சமையல் வகைகள் செய்யலாம்.
    • இன்று கத்திரிக்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - 200 கிராம்

    தக்காளி - 3

    பெ. வெங்காயம் - 1

    ப. மிளகாய் - 1

    காய்ந்த மிளகாய் - 4

    கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - தே.அளவு

    கறிவேப்பில்லை - தே.அளவு

    உப்பு - தே.அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கத்திரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

    நாண், பரோட்டா, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி அருமையாக இருக்கும் இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பெரிய கத்தரிக்காய் - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    சீரகம் - தாளிக்க
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    காய்ந்த வெந்தயக்கீரை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு எடுத்து தோலுரித்து கொள்ளுங்கள்.

    தோலுரித்த கத்தரிக்காயை லேசாக மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, சேர்த்து சுருள வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

    கெட்டியாக வந்ததும் இறக்கி விடலாம்.

    தனியாக ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கரம் மசாலா பொடி சேர்த்து சப்ஜியின் மேலே கொட்டி கொள்ளுங்கள்.

    காய்ந்த வெந்தயக்கீரை நன்றாக கசக்கி அதன் மேல் தூவி சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக பரிமாறலாம்.

    பல்வேறு வகையான வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்
    பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - ஒரு கப்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்தண்ணீர் - 2 கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    தக்காளிச் சாறு - கால் கப்
    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5
    தனியா - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    சின்னவெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

    வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை போட்டு வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, இட்லி, தோசை, நாண், புலாவ், பிரியாணி, சாதத்திற்கு என அனைத்து வகையான உணவிற்கும் இந்த பகரா பேங்கன் அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - கால் கிலோ,
    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சை அளவு,
    வெங்காயம் - 100 கிராம்,
    தனியா - 3 டீஸ்பூன்,
    எள், சீரகம் -  தலா 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப,
    வேர்க்கடலை - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    இஞ்சி - சிறிய துண்டு,
    பூண்டு - 5 பல்,
    எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பை நீக்கி துண்டுளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்…  

    தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும்.

    வதக்கிய அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, பச்சை வாசனை போனவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு புளிக்கரைசல், அரைத்த விழுது, அரைத்த மசாலா பொடி, சேர்த்து வதக்கவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக்காயுடன் சேர்த்து, ஓரங்களில் எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பகரா பேங்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - 500 கிராம்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சம் பழ அளவு,
    மிளகாய்தூள் - 50 கிராம்,
    வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 100 கிராம்,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும்.

    பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால். கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - கால் கிலோ
    தக்காளி - 3
    கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
    மிளகாய் வத்தல் - 8
    பெரிய வெங்காயம் - 3
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்துக் கொள்ளவேண்டும்

    பிறகு கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்

    நன்கு ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×