என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    காய்கறி கூட்டு
    X
    காய்கறி கூட்டு

    நோய் எதிர்ப்பு சக்தி தரும் நாட்டு காய்கறி கூட்டு

    ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாட்டு காய்கறிகளை வைத்து சுவையான கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பீர்க்கங்காய் - 100 கிராம்,
    புடலங்காய் - 100 கிராம்,
    சுரைக்காய் - 100 கிராம்,
    தேங்காய் துருவல் - 1 கப்,
    நீர் பூசணிக்காய் - 100 கிராம்,
    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி,
    மிளகாய்தூள் - தேவையான அளவு,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

    செய்முறை:

    காய்கள் அனைத்தையும் சமமான அளவில் நறுக்கிக்கொள்ளுங்கள்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    அத்துடன் பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பும், மிளகாய்தூளும் சேர்த்து கிளறவும்.

    காய்களில் உள்ள நீர் போதுமானது. தண்ணீர் தனியாக சேர்க்க வேண்டியதில்லை.

    கடைசியாக அரைத்த தேங்காயை சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து வைக்கவும்.

    அடுத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கூட்டில் சேர்த்த பின்னர் இறக்கவும்.

    சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு ரெடி.

    இதையும் படிக்கலாம்...சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ
    Next Story
    ×