search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மொழி பூங்கா"

    • 12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு மலர் கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

    12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல வண்ணங்களில், பல வகைகளில் மலர்கள் குறிப்பாக ரோஜா, துலிப், சாமந்தி என பல வகை பூக்கள் கண்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதய வடிவிலான மலர் அலங்கார வளைவை காணலாம்.

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதய வடிவிலான மலர் அலங்கார வளைவை காணலாம்.

    இந்த மலர் கண்காட்சியானது சென்னையில் புதிய முயற்சியாக, பூக்கும் பருவத்தில் இருந்த செடிகளை கொண்டு வந்து, அவை பூத்தபின் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.

    அதோடு பூக்களை கொண்டு பல அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. யானை, அன்னப்பறவை, பொம்மை, ஆமை என்று உருவ அலங்காரங்களும். அதேபோல் சதுர தூண், இதய வடிவ தூண், மலர் பாதை என பல வகைகளில் அலங்காரத்துடன் இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை முதலே மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விதவிதமான மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் மலர்களுடன் 'செல்பி'களையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    மலர் கண்காட்சியை பார்வையிட வருபவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் நேற்றும் கலை நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று ஆடிப்பாடி அசத்தினர். 

    மலர் கண்காட்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    மலர் கண்காட்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    அனைவரையும் கவர்ந்த இந்த கண்காட்சி நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பெரியவர்களுக்கு ரூ.150-ம், சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டுமே இக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
    • மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று (10-ந் தேதி) 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கியது.

    சென்னையில் இதற்கு முன்பு 2 முறை மலர் கண்காட்சி நடை பெற்று உள்ளது. அப்போது கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த முறை இயற்கை சூழலில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நடத்துவதற்கு தமிழக அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதன்படி இன்று (சனிக்கிழமை) செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 12 லட்சம் பூக்களை கொண்டு வந்து பிரமாண்டமான முறையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டது. அங்கு மலர் கண்காட்சிக்காக விதவிதமான பூக்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. யானை, மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 வகையான உருவங்களை வைத்து உள்ளனர்.


    இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.

    இது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "இந்த மலர் கண்காட்சியை நிரந்தரமாக வைத்து பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கலாம் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அது போன்று நிரந்தரமாக மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் நடத்தினால் பொதுமக்கள் செம்மொழி பூங்காவுக்கு அதிக அளவில் வருவார்கள்" என்றனர்.

    • கோவை மாநகரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது.
    • கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    கோவை:

    கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

    இதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசும்போது, கோவையில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

    தொடர்ந்து கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நினைவுகூறும் வகையில் பிரத்யேக நடைபாதை, கூட்ட அரங்கு உள்ளிட்ட அம்சங்களுடன், கோவை மாநகரில் தற்போது முதல்கட்டமாக ரூ.133 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப்பூங்கா அமைய உள்ளது.


     செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல்லை நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைத்தார்.

    செம்மொழி பூங்காவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது தொடர்பாக, கோவை மாவட்ட தோட்டக்க லைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாநகரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் இயற்கையை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மேலாண்மையை நிலைநிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும்.

    செம்மொழி பூங்காவில் பிரத்யேக அம்சமாக செம்மொழிவனம், மக ரந்தவனம், மூலிகைவனம், நீர்வனம், நட்சத்திரவனம், நலம்தரும்வனம், நறுமணவனம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. மேலும் நீலகிரி தாவரவியல் பூங்கா போல செம்மொழி பூங்காவிலும் ரோஜாத்தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதுதவிர செம்மொழி பூங்காவில் இயற்கை அருங்காட்சியகம், திறந்த வெளிஅரங்கு, இயற்கை உணவகம், 1000 பேர் அமரும்வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையாடும் பொழுது போக்கு மையம், நர்சரி தோட்டம், பாறைத்தோட்டம், பல்லடுக்கு வாகனநிறுத்தம் ஆகிய அம்சங்களும் இடம்பெற உள்ளன.

    அடுத்த சில ஆண்டுகளில் கோவை செம்மொழி பூங்காவை 2-வது கட்டமாக மேலும் 120 ஏக்கர் பரப்பளவில் விஸ்தரிப்பது எனவும் திட்டமிட்டு உள்ளோம்.

    இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டனில் உள்ள கியூ பூங்கா, உலகின் முதல் தாவர உயிரியல் வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகும். அதன்பிறகு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதல்முறையாக கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    மேலும் கோவை மாநகரின் தனித்துவ அடையாளமாக செம்மொழி பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழகஅரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    செம்மொழி பூங்கா பணிகள் நிறைவுறும் போது அது கோவையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்பதில் அய்யமில்லை.

    • கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.
    • முதலமைச்சரும் வெள்ள நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக பதில் அளித்து இருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை இன்று கோவையில் தொடங்கி வைத்தார்.

    இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த அதே விமானத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் வந்தார். அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் திருச்செங்கோடு சென்றார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அந்த கருத்துக்களுக்கு முதலமைச்சரும், தி.மு.க அமைச்சர்களும் பதில் கருத்துக்களையும் கொடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கோர்ட்டு கருத்து தெரிவித்தன் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். முதலமைச்சரும் வெள்ள நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக பதில் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் தான் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் இருந்து கோவைக்கு ஒரே விமானத்தில் இன்று வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • ஈரோடு மாவட்ட போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    கோவை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18-ந் தேதி) கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

    கோவையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டு வரும். மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ள மைதானத்துக்கு செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டை நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அவர் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை 9.20 மணிக்கு கோவை வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் வந்து செல்லும் இடங்களில் திரளாக கூடி நின்று வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும் செம்மொழி பூங்கா நடைபெறும் மைதானத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை போலீசாருடன் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • தி.மு.க. அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தி.மு.க. அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மக்களிடம் மனுக்கள் வாங்கிய 30 நாட்களுக்குள் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பது தான் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கம்.

    இதற்காக அன்று காலை 9.10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வருகிறார்.

    விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதலமைச்சர் அங்கிருந்து காரில் கோவை நவ இந்தியாவில் உள்ள கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார்.

    அங்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மனு வாங்கப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை மக்களுக்கு வழங்குகிறார்.


    அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, காரில் கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதான பகுதிக்கு வருகிறார்.

    அங்கு கோவை மத்திய ஜெயில் பகுதியில் அமைய உள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார்.

    செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதானத்தில் நடக்க உள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் மேடை, பந்தல், இருக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதவிர விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் வருகையையொட்டி கோவை-அவினாசி சாலை, நவ இந்தியா பகுதி, காந்திபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகளும் நடக்கின்றன. கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையோரம் இருந்த புற்கள், செடி, கொடிகளை அப்புறப்படுத்தியும், சாலைளிலும் ஆங்காங்கே இருந்த பள்ளங்களும் மூடப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 2021 நவம்பர் 22-ந்தேதி நடந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

    சிறையை வேறு இடத்துக்கு மாற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பதால் செம்மொழி பூங்கா திட்டத்தை பேஸ்-1, பேஸ்-2 என பிரித்து முதல்கட்டமாக சிறைத்துறை வழங்கிய 41 ஏக்கர் நிலத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.172 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

    இதைத்தொடர்ந்து காந்திபுரம் மத்திய சிறை அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 18-ந் தேதி கோவையில் நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர் எஸ்.என்.ஆர். கல்லூரியில் நடைபெறும் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அன்றைய தினம் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு கோவைக்கு வருகிறார். நிகழ்ச்சிகள் முடிந்து அன்று பிற்பகல் 2.10 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். மேலும் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த ஆண்டு ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பட்டாம்பூச்சி கணக்கெடுத்ததில் 81 வகையான பட்டாம்பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது.

    சென்னை:

    அகில இந்திய அளவில் 'பெரிய பட்டாம்பூச்சி மாதம்' செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் பட்டாம்பூச்சிகள் பற்றிய விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டு வருவதோடு, கணக்கெடுக்கும் பணிகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடப்பாண்டில் செம்மொழி பூங்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் பட்டாம்பூச்சியை கணக்கெடுக்கும் பணியில் மாணவிகள் ஈடுபட உள்ளனர். வரும் வாரத்தில் ராணிமேரி கல்லூரி வளாகம் மற்றும் மைலேடீஸ் பூங்கா, கொரட்டூர் ஏரிக்கரை உள்பட முக்கிய பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியில் மாணவிகள் களம் இறங்குகின்றனர்.

    இதுகுறித்து ராணி மேரி கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் பவானி கோவிந்தராஜூலு கூறும் போது, "கடந்த ஆண்டு ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பட்டாம்பூச்சி கணக்கெடுத்ததில் 81 வகையான பட்டாம்பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது. தேனீக்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகள் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பட்டாம்பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. அதனை மீட்டெடுக்கவும், அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்" என்றார்.

    • செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் அமைய உள்ளது.
    • 18 மாதத்தில் இத்திட்டப்பணி நிறைவுபெறும்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் தென்ேமற்கு பருவமழை துவங்கியுள்ளதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களை உருவாக்கும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, வார்டு தோறும் இப்பணியில் 6 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இது, தற்போது 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. கணபதி, பீளமேடு, செட்டி வீதி போன்ற பகுதிகளில் டெங்கு கொசு பரவல் அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்ற இடங்களில் தார்ச்சாலை புதுப்பிப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, வார்டு தோறும் 50 சதவீத தார்ச்சாலைகளை புதுப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது.

    கோவை மாநகரில் தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 500 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதத்தில் 5 ஆயிரம் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.புரம் புரூக் பீல்டு சாலை, மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் ரோடு. ரத்தினபுரி, தடாகம் ரோடு-டி.பி.ரோடு சந்திப்பு, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு உள்ளிட்ட மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களை கண்டறிந்து, ரூ.12.63 கோடியில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி மிக விரைவில் தொடங்க உள்ளது.

    காந்திபுரம் சத்தி ரோட்டில் உள்ள ஆம்னி பஸ்நிலையம் ரூ.3.5 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. சரவணம்பட்டியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் ரூ.1.2 கோடியில் "சயின்ஸ் பார்க்" கட்டப்பட உள்ளது. பீளமேடு டைடல் பார்க் பகுதியில் ரூ.15 கோடியில் தார்ச்சாலை, பூங்கா, நடைபாதை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோவையில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, குளக்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடந்து வருகிறது.

    ஏற்கனவே, 2 இடங்களில் இப்பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 இடங்களில் இப்பணி நடந்து வருகிறது. ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் உள்பட நகரில் பல்வேறு இடங்களில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணியும் நடந்து வருகிறது.

    கோவை மத்திய சிறைவளாகத்தில், உலகத்தமிழ் செம்மொழி பூங்கா செம்மொழி மாநாடு நினைவாக, செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் அமைய உள்ளது. இதற்கான டெண்டர் கடந்த மாதம் 28ம் தேதி விடப்பட்டது.

    தற்போது தொழில் நுட்ப ரீதியிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் இத்திட்டப்பணி தொடங்கும். இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    இப்பூங்கா பல்வேறு அடுக்குகளாக மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. 18 மாதத்தில் இத்திட்டப்பணி நிறைவுபெறும். இது, கோவையின் மற்றொரு அடையாளமாக இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால், சிறுவாணி அணையில் நீர் இருப்பு போதுமான அளவு இல்லை.

    ஆனாலும், சிறுவாணி பயன்பாட்டாளர்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் பில்லூர் குடிநீர் திட்டக்குழாய் இணைப்பு இல்லாத இடங்களுக்கு சிறுவாணி மற்றும் ஆழியார் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கமிஷனர் மு.பிரதாப் கூறினார்.

    • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
    • பாட்டி வடை சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பம் மிகவும் அருமையாக உள்ளது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னையில் 2-வது முறையாக மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் 3-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

    நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் கோடை விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதுபோல் சென்னையில் நடந்து வரும் இந்த கண்காட்சியை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.

    கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டரை லட்சம் கொய் மலர்கள், 250 கிலோ உதிரி பூக்களால் தேர், யானை மற்றும் பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 5 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சியை பார்வையிடலாம்.

    கண்காட்சியில் தத்ரூபமாக கைத்தறி நெசவு செய்வது போன்றும், குயவர், வடை சுடுவது, அப்பளம் சுடுவது, வண்ணத்து பூச்சி வடிவங்கள், மயில், திண்பண்ட கடைகள், மலர்களிலே உருவான மாட்டு வண்டி, நகை பட்டறை, பிரமாண்ட அலங்கார வளைவு ஆகியவை முற்றிலும் காய்கறி, பழங்கள், மலர்களால் உருவாக்கப்பட்டது பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    நிறைவு நாளான இன்று காலையிலேயே பொதுமக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். கடைசிநாள் என்பதால் குழந்தைகளுடன் சாரை சாரையாக அணிவகுத்து வந்தனர். மலர் கண்காட்சியை இதுவரை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.

    கண்காட்சியை பார்வையிட பள்ளிக்கரணையில் இருந்து குடும்பத்துடன் வந்த ரம்யா கூறியதாவது:-

    மலர் கண்காட்சியை பார்வையிட கடைசி நாள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலையிலேயே வந்து விட்டோம். எனது குழந்தைகள் மிகவும் ரசித்து வருகின்றனர். ஒவ்வொன்றும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், மலர் கண்காட்சி போல் உள்ளது.

    கிருத்திகா (மடிப்பாக்கம்):-

    இந்த கண்காட்சியை பார்வையிட எங்களது குழந்தைகள் தான் அதிகமாக ஆர்வம் காட்டினார்கள். காலையிலேயே இங்கு வந்து விட்டோம். மலர்களால் உருவாக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளும், மயில் உருவமும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    பாட்டி வடை சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பம் மிகவும் அருமையாக உள்ளது. கண்காட்சியை மேலும் நீட்டித்தால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்டமாக 45 ஏக்கரிலும், 2-ம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும்.

    கோவை,

    கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கர் பரப்பளவில் மத்திய ஜெயில் அமைந்துள்ளது.

    இந்த ஜெயிலை இடம் மாற்றி விட்டு அந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

    இதை தொடர்ந்து முதல் கட்டமாக ஜெயில் வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் செம்மொழி பூங்காவுக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் செம்மொழி பூங்கா திட்ட பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

    மாநகராட்சி வசம் உள்ள ஜெயில் இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க தமிழக சட்டசபையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 45 ஏக்கரிலும், 2-ம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும்.

    இயற்கையை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்தரும் வகையிலும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுது போக்குக்கு அளிக்கும் வகையிலும் உலக தரத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    பூங்காவில் வரலாற்று சிறப்புகளை அறியும் வகையில் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் ஆகியவை அமைகின்றன.

    பூங்காக்களின் வகை, அதன் தன்மைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமண பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகையான பூங்காக்கள் கலை நுட்பத்டன் அமைக்கப்பட உள்ளன.

    இந்த பூங்கா வளாகத்தில் விழா நடத்துவதற்கான மண்டபங்கள், உள் அரங்கம், வெளியரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×