search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
    X

    10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

    • தி.மு.க. அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தி.மு.க. அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மக்களிடம் மனுக்கள் வாங்கிய 30 நாட்களுக்குள் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பது தான் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கம்.

    இதற்காக அன்று காலை 9.10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வருகிறார்.

    விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதலமைச்சர் அங்கிருந்து காரில் கோவை நவ இந்தியாவில் உள்ள கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார்.

    அங்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மனு வாங்கப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை மக்களுக்கு வழங்குகிறார்.


    அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, காரில் கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதான பகுதிக்கு வருகிறார்.

    அங்கு கோவை மத்திய ஜெயில் பகுதியில் அமைய உள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார்.

    செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதானத்தில் நடக்க உள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் மேடை, பந்தல், இருக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதவிர விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் வருகையையொட்டி கோவை-அவினாசி சாலை, நவ இந்தியா பகுதி, காந்திபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகளும் நடக்கின்றன. கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையோரம் இருந்த புற்கள், செடி, கொடிகளை அப்புறப்படுத்தியும், சாலைளிலும் ஆங்காங்கே இருந்த பள்ளங்களும் மூடப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×