search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Semmozhi Poonga"

    • சென்னையில் மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

    சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை இன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் கண்காட்சியை பார்வையிட்டார்.

    மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்பைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்காக, பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி மலர் கண்காட்சியை காணவரும் பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100, கேமரா எடுத்து வந்தால் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் கண்காட்சியை காண வரும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு கட்டணமே இந்த முறையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை இன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் கண்காட்சியை பார்வையிட்டார்.

    மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்பைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • செம்மொழி பூங்காவில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.
    • வருகிற 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார்.

    சென்னை:

    சென்னை அண்ணா மேம்பாலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சூழ்ந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதி திறந்து வைத்தார்.

    ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. அரிய வகை மரங்களும் உள்ளன. ஊட்டியை போன்றே இங்கும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு போக முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் இந்த பூங்கா. பூத்துக்குலுங்கும் மலர்களுடன் செம்மொழி பூங்கா இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டில் 10 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை லட்சக்கணக்கானவர்கள் கண்டு ரசித்தனர்.

    கடந்த ஆண்டில் மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை தொடர்ந்து இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் வித, விதமான மலர்கள் அலங்கரிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது.

    பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மலர் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. பெட்டூனியா, ரோஜாக்கள், துலிப், ஜின்னியா, லில்லி, சாமந்திப்பூக்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

    வேளாண்மைத் துறையின் தோட்டக்கலைத் துறையிலிருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் கொண்டு வரப்படுகிறது. ஓசூரில் இருந்து பிரத்யேக ரோஜா செடிகள் கொண்டு வரப்பட உள்ளது.

    வருகிற 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார். தொடர்ந்து ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.

    மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக கடந்த ஆண்டை போலவே ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    தற்போது மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பூங்காவுக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    • பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன.
    • மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை செம்மொழி பூங்காவில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட வேண்டும் என்று புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு அரங்கையும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோரும் பார்வையிட்டனர்.

    பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பதாவது:-


    "இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம்நம் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் ஆகும்" .

    புலம்பெயர்ந்து இந்தியா வந்த மக்கள் சில சவால்களை இன்னும் சந்தித்து வருகிறார்கள். மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராடி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன. இத்திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

    • 12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு மலர் கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

    12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல வண்ணங்களில், பல வகைகளில் மலர்கள் குறிப்பாக ரோஜா, துலிப், சாமந்தி என பல வகை பூக்கள் கண்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதய வடிவிலான மலர் அலங்கார வளைவை காணலாம்.

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதய வடிவிலான மலர் அலங்கார வளைவை காணலாம்.

    இந்த மலர் கண்காட்சியானது சென்னையில் புதிய முயற்சியாக, பூக்கும் பருவத்தில் இருந்த செடிகளை கொண்டு வந்து, அவை பூத்தபின் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.

    அதோடு பூக்களை கொண்டு பல அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. யானை, அன்னப்பறவை, பொம்மை, ஆமை என்று உருவ அலங்காரங்களும். அதேபோல் சதுர தூண், இதய வடிவ தூண், மலர் பாதை என பல வகைகளில் அலங்காரத்துடன் இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை முதலே மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விதவிதமான மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் மலர்களுடன் 'செல்பி'களையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    மலர் கண்காட்சியை பார்வையிட வருபவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் நேற்றும் கலை நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று ஆடிப்பாடி அசத்தினர். 

    மலர் கண்காட்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    மலர் கண்காட்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    அனைவரையும் கவர்ந்த இந்த கண்காட்சி நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பெரியவர்களுக்கு ரூ.150-ம், சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டுமே இக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோவை மாநகரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது.
    • கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    கோவை:

    கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

    இதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசும்போது, கோவையில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

    தொடர்ந்து கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நினைவுகூறும் வகையில் பிரத்யேக நடைபாதை, கூட்ட அரங்கு உள்ளிட்ட அம்சங்களுடன், கோவை மாநகரில் தற்போது முதல்கட்டமாக ரூ.133 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப்பூங்கா அமைய உள்ளது.


     செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல்லை நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைத்தார்.

    செம்மொழி பூங்காவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது தொடர்பாக, கோவை மாவட்ட தோட்டக்க லைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாநகரில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் இயற்கையை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மேலாண்மையை நிலைநிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும்.

    செம்மொழி பூங்காவில் பிரத்யேக அம்சமாக செம்மொழிவனம், மக ரந்தவனம், மூலிகைவனம், நீர்வனம், நட்சத்திரவனம், நலம்தரும்வனம், நறுமணவனம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. மேலும் நீலகிரி தாவரவியல் பூங்கா போல செம்மொழி பூங்காவிலும் ரோஜாத்தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதுதவிர செம்மொழி பூங்காவில் இயற்கை அருங்காட்சியகம், திறந்த வெளிஅரங்கு, இயற்கை உணவகம், 1000 பேர் அமரும்வகையில் மாநாட்டு மையம், சிறுவர் விளையாடும் பொழுது போக்கு மையம், நர்சரி தோட்டம், பாறைத்தோட்டம், பல்லடுக்கு வாகனநிறுத்தம் ஆகிய அம்சங்களும் இடம்பெற உள்ளன.

    அடுத்த சில ஆண்டுகளில் கோவை செம்மொழி பூங்காவை 2-வது கட்டமாக மேலும் 120 ஏக்கர் பரப்பளவில் விஸ்தரிப்பது எனவும் திட்டமிட்டு உள்ளோம்.

    இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டனில் உள்ள கியூ பூங்கா, உலகின் முதல் தாவர உயிரியல் வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகும். அதன்பிறகு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதல்முறையாக கோவை செம்மொழி பூங்காவில் மேற்கண்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    மேலும் கோவை மாநகரின் தனித்துவ அடையாளமாக செம்மொழி பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழகஅரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    செம்மொழி பூங்கா பணிகள் நிறைவுறும் போது அது கோவையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்பதில் அய்யமில்லை.

    • கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.
    • முதலமைச்சரும் வெள்ள நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக பதில் அளித்து இருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை இன்று கோவையில் தொடங்கி வைத்தார்.

    இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த அதே விமானத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் வந்தார். அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் திருச்செங்கோடு சென்றார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அந்த கருத்துக்களுக்கு முதலமைச்சரும், தி.மு.க அமைச்சர்களும் பதில் கருத்துக்களையும் கொடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கோர்ட்டு கருத்து தெரிவித்தன் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். முதலமைச்சரும் வெள்ள நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக பதில் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் தான் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் இருந்து கோவைக்கு ஒரே விமானத்தில் இன்று வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • ஈரோடு மாவட்ட போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    கோவை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18-ந் தேதி) கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

    கோவையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டு வரும். மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ள மைதானத்துக்கு செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டை நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அவர் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை 9.20 மணிக்கு கோவை வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் வந்து செல்லும் இடங்களில் திரளாக கூடி நின்று வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும் செம்மொழி பூங்கா நடைபெறும் மைதானத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை போலீசாருடன் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • தி.மு.க. அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தி.மு.க. அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மக்களிடம் மனுக்கள் வாங்கிய 30 நாட்களுக்குள் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பது தான் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கம்.

    இதற்காக அன்று காலை 9.10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வருகிறார்.

    விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதலமைச்சர் அங்கிருந்து காரில் கோவை நவ இந்தியாவில் உள்ள கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார்.

    அங்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மனு வாங்கப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை மக்களுக்கு வழங்குகிறார்.


    அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, காரில் கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதான பகுதிக்கு வருகிறார்.

    அங்கு கோவை மத்திய ஜெயில் பகுதியில் அமைய உள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார்.

    செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை காந்திபுரம் சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதானத்தில் நடக்க உள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் மேடை, பந்தல், இருக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதவிர விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் வருகையையொட்டி கோவை-அவினாசி சாலை, நவ இந்தியா பகுதி, காந்திபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகளும் நடக்கின்றன. கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையோரம் இருந்த புற்கள், செடி, கொடிகளை அப்புறப்படுத்தியும், சாலைளிலும் ஆங்காங்கே இருந்த பள்ளங்களும் மூடப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 2021 நவம்பர் 22-ந்தேதி நடந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

    சிறையை வேறு இடத்துக்கு மாற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பதால் செம்மொழி பூங்கா திட்டத்தை பேஸ்-1, பேஸ்-2 என பிரித்து முதல்கட்டமாக சிறைத்துறை வழங்கிய 41 ஏக்கர் நிலத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.172 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

    இதைத்தொடர்ந்து காந்திபுரம் மத்திய சிறை அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 18-ந் தேதி கோவையில் நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர் எஸ்.என்.ஆர். கல்லூரியில் நடைபெறும் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அன்றைய தினம் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு கோவைக்கு வருகிறார். நிகழ்ச்சிகள் முடிந்து அன்று பிற்பகல் 2.10 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். மேலும் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
    • பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகள் எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள்.

    செம்மொழிப் பூங்கா சென்னை நகரின் மைய பகுதியில் அண்ணா மேம்பாலம் அருகில் கதீட்ரல் ரோடு-அண்ணாசாலை சந்திப்பில், அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் அமைந்து உள்ளது.  இது 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா ஆகும்

    தமிழக அரசின் தோட்டக் கலைத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் முன்பு டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் இருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் : 'செம்மொழி பூங்கா' உருவாக்கப்பட்டது.

    இந்த பூங்கா 2010- ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இது சென்னை மாநகரின் முதல் தாவரவியல் பூங்கா ஆகும்.

    செம்மொழிப் பூங்காவில் 100 கார்கள் மற்றும் 500 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இங்கு பொது மக்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் பூங்காவில் அரிய வகை தாவரங்களும் உள்ளன. மருத்துவ, நறுமண மூலிகைகள், மற்றும் வெளிநாட்டு தாவரங்கள் ஏராளம் உள்ளன.

    இந்த பூங்காவிற்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பொழுது போக்குக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகிறார்கள். இங்கு பலர் நடைபயிற்சியும் செய்து வருகிறார்கள். பொது மக்களை கவரும் வகையில் அமைந்து உள்ள இந்த பூங்காவில் ஏராளமான மரங்கள், மற்றும் செடிகள் உள்ளன. பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் சிறு வர், சிறுமிகளை கவர்ந்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது சரிவர பராமரிப்பு இல்லாதால் அலங்கோலமாக காட்சிஅளிக்கிறது. இங்குள்ள 3 முக்கிய அழகிய இசை நீரூற்றுகள் பழுதடைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் துருபிடித்து காணப்படுகின்றன. மேலும் நடைபாதையில் உள்ள கற்கள் பெயர்ந்து பள்ளம், மேடுகளாக உள்ளன.

    இந்த பூங்காவில் நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்தபின் அமருவதற்கு போதுமான இருக்கைகள் இல்லை. எனவே புதிதாக கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும்.

    இப்பூங்காவில் நாய்கள் தொல்லையும் உள்ளது. இதனால் நடைபயிற்சிக்கு வருபவர்கள் அச்சப்படுகிறார்கள். தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இங்கு பார்வையாளர்கள், நடைபயிற்சி செல்வோர், காதலர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகள் எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள். ஆங்காங்கே காதல்ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து கொண்டு காதல் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பூங்காவுக்கு வரும் காதல் ஜோடி களின் அத்துமீறலை தடுக்க வேண்டும்.

    இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:- சென்னையின் முக்கிய பூங்காவாக செம்மொழிப் பூங்கா திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த பூங்கா சரிவர பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள்.

    எனவே பொதுமக்கள் வசதிக்காக உரிய அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பூங்காவில் உள்ள பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். கழிப்பறைகள் சுத்தம் இல்லாமல் காணப்படுகிறது.

    இதனையும் உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகிய இசை நீரூற்றுகள் தண்ணீர் இல்லாமல் பராமரிப்புகள் செய்யப்படாமல் உள்ளது. பூங்காவின் நுழைவு பகுதியில் செடிகள், புற்கள் பராமரிப்பு செய்யப்படாததால் காய்ந்த நிலையில் உள்ளன. பூங்காவின் பல்வேறு அவல நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
    • பாட்டி வடை சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பம் மிகவும் அருமையாக உள்ளது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னையில் 2-வது முறையாக மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் 3-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

    நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் கோடை விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதுபோல் சென்னையில் நடந்து வரும் இந்த கண்காட்சியை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.

    கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டரை லட்சம் கொய் மலர்கள், 250 கிலோ உதிரி பூக்களால் தேர், யானை மற்றும் பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 5 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சியை பார்வையிடலாம்.

    கண்காட்சியில் தத்ரூபமாக கைத்தறி நெசவு செய்வது போன்றும், குயவர், வடை சுடுவது, அப்பளம் சுடுவது, வண்ணத்து பூச்சி வடிவங்கள், மயில், திண்பண்ட கடைகள், மலர்களிலே உருவான மாட்டு வண்டி, நகை பட்டறை, பிரமாண்ட அலங்கார வளைவு ஆகியவை முற்றிலும் காய்கறி, பழங்கள், மலர்களால் உருவாக்கப்பட்டது பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    நிறைவு நாளான இன்று காலையிலேயே பொதுமக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். கடைசிநாள் என்பதால் குழந்தைகளுடன் சாரை சாரையாக அணிவகுத்து வந்தனர். மலர் கண்காட்சியை இதுவரை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.

    கண்காட்சியை பார்வையிட பள்ளிக்கரணையில் இருந்து குடும்பத்துடன் வந்த ரம்யா கூறியதாவது:-

    மலர் கண்காட்சியை பார்வையிட கடைசி நாள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலையிலேயே வந்து விட்டோம். எனது குழந்தைகள் மிகவும் ரசித்து வருகின்றனர். ஒவ்வொன்றும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், மலர் கண்காட்சி போல் உள்ளது.

    கிருத்திகா (மடிப்பாக்கம்):-

    இந்த கண்காட்சியை பார்வையிட எங்களது குழந்தைகள் தான் அதிகமாக ஆர்வம் காட்டினார்கள். காலையிலேயே இங்கு வந்து விட்டோம். மலர்களால் உருவாக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளும், மயில் உருவமும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    பாட்டி வடை சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பம் மிகவும் அருமையாக உள்ளது. கண்காட்சியை மேலும் நீட்டித்தால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×