செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை இன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் கண்காட்சியை பார்வையிட்டார்.

மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்பைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com