என் மலர்
நீங்கள் தேடியது "செம்மொழிப் பூங்கா"
- சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
- விடியா திமுக அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் செம்மொழிப் பூங்கா அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவையில் அவசர கதியில் வெற்று விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா விடியா திமுக-
25.11.2025 அன்று கோவைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட திரு. ஸ்டாலின் காந்திபுரம், சிறைச்சாலை மைதான வளாகத்தில் ரூ.204 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த செம்மொழி பூங்காவை பணிகள் முழுமையாக முடிவடையாமல், அவசர கதியில் விளம்பரத்திற்காக திறந்து வைத்துள்ளார். சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அனுமதி பெறப்படவில்லை.
முடிவடையாத பணிகள் :
* 30ரூ மரங்கள் நடப்படவில்லை.
* செயற்கை புல் தரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
* முன் நுழைவு வாயில் முகப்பு
* மாநாட்டு மையம் - தரைத் தளம்
* சுற்றுச் சுவர்
* கட்டண விளையாட்டு மைதானம்
* திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம்
* போதுமான கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படவில்லை.
* விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படவில்லை.
* கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் முழுமையடையவில்லை.
கோவை மாநகராட்சியில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை; ஏற்கெனவே இருக்கும் பூங்காக்கள் சரிவர
பராமரிக்கப்படுவதில்லை என்று மக்கள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்தும்; ஏற்கெனவே அளித்த நிர்வாக
அனுமதியைக் காட்டிலும் 40 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டும், முழுமை பெறாத இந்தப் பூங்காவை அவசர
அவசரமாகத் திறந்தது ஏன்? மேலும், பல பணிகள் ஒப்பந்தப் புள்ளி கோரப்படாமல், நாமினேஷன் முறையில் விடியா
திமுக அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிய வருகிறது.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் (ஸ்மார்ட் சிட்டி) கோவை மாநகராட்சிப் பகுதியில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட, கோவை மக்களின் பொழுதுபோக்கு இடங்களாகத் திகழ்ந்த; பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த பூங்காக்களான உக்கடம்-
பெரியகுளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம் ஆகியவை தற்போது ஆகாயத் தாமரைகள் படர்ந்து, போதிய பராமரிப்பின்றி கேட்பாரற்று உள்ளது. எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பூங்காக்கள், குளங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் உள்ளது.
விடியா திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை கோவை மாவட்ட
மக்களையும், தொழில் துறையினரின் கோரிக்கைகளையும் விடியா திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
அவற்றில் ஒருசில-
* அத்திக்கடவு–அவிநாசி திட்டம் I-ல் விடுபட்ட பகுதிகளை இணைத்து அம்மாவின் அரசு அறிவித்த அத்திக்கடவு–அவிநாசி திட்டம்-Iஐ பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
* கோவை மாநகராட்சியால் வெள்ளலூரில் 61.62 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 168 கோடி மதிப்பில் 'ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்' அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, 50ரூ பணிகள் முடிவடைந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விடியா திமுக அரசு இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது.
* அதேபோன்று, கோவை மாநகராட்சியில் சுமார் 200 உட்புற சாலைகள் உட்பட முக்கிய அடிப்படைக் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ. 150 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டது.
* கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால்
பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
* கோவை மாவட்ட வளர்ச்சிக்கு நாங்கள் திட்டமிட்ட, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை சரியான முறையில்
முன்மொழிவு அனுப்பாத காரணத்தால் இத்திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது.
* அம்மாவின் அரசு கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இத்திட்டத்தையும் விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இப்படி விடியா திமுக அரசு, அம்மாவின் அரசு கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்டுவிட்டது. இந்நிலையில்,
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அரசு சக்கரத்தை சுழற்றும் குணம் கொண்ட மு.க. ஸ்டாலின், அரைகுறையாக இந்தப்
பூங்காவை திறந்து வைத்து கோவை மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார்.
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசிற்கு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,
கோவை மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வ.உ.சி உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற ஆலோசிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- செம்மொழிப் பூங்கா முதல்கட்டமாக 45 ஏக்கரில் அமைகிறது.
கோவை,
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறையை இடமாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க அரசால் அறிவிக்கப்பட்டது.
பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், கோவையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மத்திய சிறை நகருக்கு வெளியே மாற்றப்பட்டு, தற்போது சிறை உள்ள இடத்தில் செம் மொழிப்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து மத்திய சிறை அமைப்பதற்காக 120 ஏக்கர் இடம் இருந்தால் தெரிவிக்குமாறு கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகத்தால், மாவட்ட வருவாய் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பலகட்ட ஆய்வுக்குப்பின் காரமடையில் சுமார் 100 ஏக்கர் இடம் உள்ளதாக வருவாய் துறையினர், சிறைத் துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறை வளாகத்தில் மாநகராட்சி வசம் உள்ள 45 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-செம்மொழிப் பூங்கா முதல்கட்டமாக 45 ஏக்கரில் அமைகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.
அதற்காக காத்திருக்கிறோம். திட்ட அறிக்கையை இறுதி செய்து, விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோர உள்ளோம். அதேபோன்று வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களை இடமாற்றம் செய்துவிட்டு, பறவையினங்களை மட்டும் கொண்டு செயல்படுத்தலாமா? என ஆலோசிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
- பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகள் எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள்.
செம்மொழிப் பூங்கா சென்னை நகரின் மைய பகுதியில் அண்ணா மேம்பாலம் அருகில் கதீட்ரல் ரோடு-அண்ணாசாலை சந்திப்பில், அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் அமைந்து உள்ளது. இது 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா ஆகும்
தமிழக அரசின் தோட்டக் கலைத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் முன்பு டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் இருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் : 'செம்மொழி பூங்கா' உருவாக்கப்பட்டது.
இந்த பூங்கா 2010- ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இது சென்னை மாநகரின் முதல் தாவரவியல் பூங்கா ஆகும்.
செம்மொழிப் பூங்காவில் 100 கார்கள் மற்றும் 500 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இங்கு பொது மக்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் பூங்காவில் அரிய வகை தாவரங்களும் உள்ளன. மருத்துவ, நறுமண மூலிகைகள், மற்றும் வெளிநாட்டு தாவரங்கள் ஏராளம் உள்ளன.
இந்த பூங்காவிற்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பொழுது போக்குக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகிறார்கள். இங்கு பலர் நடைபயிற்சியும் செய்து வருகிறார்கள். பொது மக்களை கவரும் வகையில் அமைந்து உள்ள இந்த பூங்காவில் ஏராளமான மரங்கள், மற்றும் செடிகள் உள்ளன. பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் சிறு வர், சிறுமிகளை கவர்ந்து வந்தது.
இந்தநிலையில் தற்போது சரிவர பராமரிப்பு இல்லாதால் அலங்கோலமாக காட்சிஅளிக்கிறது. இங்குள்ள 3 முக்கிய அழகிய இசை நீரூற்றுகள் பழுதடைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் துருபிடித்து காணப்படுகின்றன. மேலும் நடைபாதையில் உள்ள கற்கள் பெயர்ந்து பள்ளம், மேடுகளாக உள்ளன.
இந்த பூங்காவில் நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்தபின் அமருவதற்கு போதுமான இருக்கைகள் இல்லை. எனவே புதிதாக கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும்.
இப்பூங்காவில் நாய்கள் தொல்லையும் உள்ளது. இதனால் நடைபயிற்சிக்கு வருபவர்கள் அச்சப்படுகிறார்கள். தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இங்கு பார்வையாளர்கள், நடைபயிற்சி செல்வோர், காதலர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகள் எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள். ஆங்காங்கே காதல்ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து கொண்டு காதல் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பூங்காவுக்கு வரும் காதல் ஜோடி களின் அத்துமீறலை தடுக்க வேண்டும்.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:- சென்னையின் முக்கிய பூங்காவாக செம்மொழிப் பூங்கா திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த பூங்கா சரிவர பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே பொதுமக்கள் வசதிக்காக உரிய அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பூங்காவில் உள்ள பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். கழிப்பறைகள் சுத்தம் இல்லாமல் காணப்படுகிறது.
இதனையும் உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகிய இசை நீரூற்றுகள் தண்ணீர் இல்லாமல் பராமரிப்புகள் செய்யப்படாமல் உள்ளது. பூங்காவின் நுழைவு பகுதியில் செடிகள், புற்கள் பராமரிப்பு செய்யப்படாததால் காய்ந்த நிலையில் உள்ளன. பூங்காவின் பல்வேறு அவல நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை இன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் கண்காட்சியை பார்வையிட்டார்.
மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்பைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- சென்னையில் மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை இன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் கண்காட்சியை பார்வையிட்டார்.
மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்பைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்காக, பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மலர் கண்காட்சியை காணவரும் பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100, கேமரா எடுத்து வந்தால் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் கண்காட்சியை காண வரும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கட்டணமே இந்த முறையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






