search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Classical Park"

    • சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த ஆண்டு ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பட்டாம்பூச்சி கணக்கெடுத்ததில் 81 வகையான பட்டாம்பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது.

    சென்னை:

    அகில இந்திய அளவில் 'பெரிய பட்டாம்பூச்சி மாதம்' செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் பட்டாம்பூச்சிகள் பற்றிய விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டு வருவதோடு, கணக்கெடுக்கும் பணிகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடப்பாண்டில் செம்மொழி பூங்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் பட்டாம்பூச்சியை கணக்கெடுக்கும் பணியில் மாணவிகள் ஈடுபட உள்ளனர். வரும் வாரத்தில் ராணிமேரி கல்லூரி வளாகம் மற்றும் மைலேடீஸ் பூங்கா, கொரட்டூர் ஏரிக்கரை உள்பட முக்கிய பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியில் மாணவிகள் களம் இறங்குகின்றனர்.

    இதுகுறித்து ராணி மேரி கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் பவானி கோவிந்தராஜூலு கூறும் போது, "கடந்த ஆண்டு ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பட்டாம்பூச்சி கணக்கெடுத்ததில் 81 வகையான பட்டாம்பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது. தேனீக்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகள் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பட்டாம்பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. அதனை மீட்டெடுக்கவும், அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்" என்றார்.

    • வ.உ.சி உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற ஆலோசிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • செம்மொழிப் பூங்கா முதல்கட்டமாக 45 ஏக்கரில் அமைகிறது.

    கோவை,

    கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறையை இடமாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க அரசால் அறிவிக்கப்பட்டது.

    பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், கோவையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மத்திய சிறை நகருக்கு வெளியே மாற்றப்பட்டு, தற்போது சிறை உள்ள இடத்தில் செம் மொழிப்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இதையடுத்து மத்திய சிறை அமைப்பதற்காக 120 ஏக்கர் இடம் இருந்தால் தெரிவிக்குமாறு கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகத்தால், மாவட்ட வருவாய் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பலகட்ட ஆய்வுக்குப்பின் காரமடையில் சுமார் 100 ஏக்கர் இடம் உள்ளதாக வருவாய் துறையினர், சிறைத் துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, சிறை வளாகத்தில் மாநகராட்சி வசம் உள்ள 45 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-செம்மொழிப் பூங்கா முதல்கட்டமாக 45 ஏக்கரில் அமைகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.

    அதற்காக காத்திருக்கிறோம். திட்ட அறிக்கையை இறுதி செய்து, விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோர உள்ளோம். அதேபோன்று வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களை இடமாற்றம் செய்துவிட்டு, பறவையினங்களை மட்டும் கொண்டு செயல்படுத்தலாமா? என ஆலோசிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சென்னையில் செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடர்ந்து செயல்படலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    கடந்த 2010-ம் ஆண்டு சென்னை கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்கா அமைந்திருந்த இடத்தில் ஏற்கனவே பிரபல தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வந்தது. அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த இடத்தின் சொந்தக்காரர் வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் அந்த நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தியதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2008-ம் ஆண்டில் தள்ளுபடி செய்தது.

    இதனை தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, தினேஷ் மகேஷ்வரி அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பில், ‘சென்னையில் செம்மொழி பூங்கா தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்க வேண்டும். அந்த பூங்கா தொடர்ந்து செயல்படலாம்’ என்று உத்தரவிட்டு நில உரிமையாளரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #SupremeCourt
    ×